Doctors find 44 year old fetus inside 84 year old woman பிரேசில் நாட்டை சேர்ந்த 84 வயது பெண்ணுக்கு பல ஆண்டாக வயிற்று வலி ஏற்பட்டு தொல்லை கொடுத்தது. அதற்கு அவர் சிகிச்சை பெற்று மருந்து சாப்பிட்டார். இந்த வலியானது அவரது 40-வது வயது பிரசவ காலத்தில் இருந்தே தொடர்கதையாக இருந்தது. சமீபத்தில் மருத்துவமனையில் அவருக்கு ‘ஸ்கேன்’ எடுத்து பார்த்த போது கருப்பைக்கு வெளியே சிசு உருவாகி உயிரற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சிசுவுக்கு 20-28 வாரம் இருக்கலாம். கை-கால், முதுகெலும்பு, விலா எலும்பு ஆகியவை உருவாகி இருக்கிறது. இதுபற்றி டாக்டர் கூறுகையில், ‘இதுபோல சில பெண்களுக்கு கருப்பைக்கு வெளியே சிசு உண்டாவதுண்டு. இந்த மூதாட்டியின் வயிற்றுக்குள் இருக்கும் சிசு சுமார் 44 ஆண்டுக்கு முன்பு உருவானது. அது இறந்து விட்டதால் அதை…
Read MoreYear: 2014
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 7 பேரை விடுதலை செய்வதாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு
Seven Rajiv Gandhi killers, including Nalini Sriharan, to be freed, decides Tamil Nadu government சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகிய 3 பேரின் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளதால் அவர்களை விடுவிக்க வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி உள்ள நிலையில் இவ்வழக்கில் சம்பந்தப் பட்ட அனைவரையும் விடுதலை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு தூக்கு தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்ட சாந்தன்,முருகன், பேரறிவாளன், நளினி ஆகியோரை விடுதலை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதா தலைமையில் இன்று நடைபெற்ற தமிழக அமைச்சரவை கூட்டத்தில்தான் இம்மூவரையும் விடுதலை செய்ய முடிவு செய்யப்பட்டது. அமைச்சரவை முடிவு குறித்து சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இன்று தமிழக சட்டப்பேரவையில், விதி எண் 110-ன் கீழ் முதல்வர்…
Read Moreஇங்கிலாந்தில் தாடி மீசை வளர்கும் 23 வயது பெண்
Teaching Assistant who Suffered Taunts Because of her Excessive Hair Decides to Stop Trimming it After Being Baptised a Sikh இங்கிலாந்தை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு மீசை, தாடி அதிக அளவில் வளர்ந்து வருவதால், அவர் இனி மீசை, தாடியுடனேயே வாழ்வது என்று முடிவெடுத்துள்ளார். இங்கிலாந்தில் வாழும் 23 வயது பெண் ஒருவருக்கு முகம், மார்பு போன்ற பகுதிகளில் முடி வளர்ந்து, அவருடைய உண்மையான அடையத்தை மாற்றியுள்ளது. ஹர்னாம் கவுர் என்னும் இந்தப் பெண்ணுக்கு பாலிசிஸ்டிக் ஓவரி சின்ட்ரோம் என்ற நோய் அவருடைய 11 வயதில் தாக்கி முகத்தில் முடி வளர ஆரம்பித்துள்ளது. அதனால் இவர் பள்ளியில் சக மாணவ மாணவிகளின் கேலிக்கு ஆளானார். இதனால் பள்ளிக்கு செல்வதையே நிறுத்திவிட்டு வீட்டில் இருந்தே படிக்க தொடங்கினார். இவருடைய முகம் மட்டுமின்றி கை, கால்,…
Read Moreபாகிஸ்தானில் திருமணம் செய்துக்கொள்ள மறுத்த இளம்பெண்ணின் மூக்கை அறுத்த வாலிபனின் கொடூரம்
Pakistani man chops off girl’s nose for refusing to marry him பாகிஸ்தானில் தன்னை திருமணம் செய்துக்கொள்ள மறுத்த இளம்பெண்ணின் மூக்கை வாலிபர் ஒருவர் வெட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் திருமணத்திற்கு மறுத்ததால், 19 வயது பெண்ணின் மூக்கை அறுத்த வாலிபரின் கொடூரமான செயல் குறித்து போலீசில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர். லாகூருக்கு அருகிலுள்ள பகவல்நகர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வருகிறார் பஷீர் அஹமது. அதே கிராமத்தில் விவசாயம் செய்து வரும் நதீம் என்ற வாலிபர் பஷீரின் மகளை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக கூறியுள்ளார். இதற்கு பஷீர் மறுப்பு தெரிவித்துள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த நதீம், அவருடைய தந்தை மற்றும் கூட்டாளிகளுடன் பஷீரின் வீட்டிற்கு சென்று அவரது மனைவி மற்றும் மகளை சித்ரவதை செய்துள்ளார். பின்பு…
Read Moreஅமெரிக்க வாழ் இந்திய விஞ்ஞானி ஒருவர் பிளாஸ்டிக் பைகளில் இருந்து டீசல் தயாரித்து உள்ளார்
Shopping bags make a fine fuel: Indian-origin scientist இன்றைய சுற்றுச் சூழல் சீர்கேட்டுக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக பிளாஸ்டிக் திகழ்கிறது. குப்பையில் வீசப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் மக்காமல் பல நூற்றாண்டுகளுக்கு அப்படியே இருக்கும். பிளாஸ்டிக் குப்பைகளை எரித்து விடலாம் என்றாலும் அதிலிருந்து பரவும் நச்சு வாயுக்கள் மனித இனத்திற்கு பேராபத்தை விளைவிக்க கூடிய பல அபாயகர நோய்களை விளைவிக்கும்.இந்த நச்சு வாயுக்களால் மலட்டு தன்மை ஏற்பட வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதற்கிடையில் பிளாஸ்டிக் பைகளில் இருந்து டீசல் தயாரித்து அமெரிக்க வாழ் இந்தியரான விஞ்ஞானி ஒருவர் சாதனை படைத்துள்ளனர்.இப்புவியிலுள்ள அனைத்து ஜீவராசிகளையும் தன்மேல் தாங்கி நிற்கும் இந்த பூமித்தாய்க்கு ஒரு விசேச சக்தி உண்டு, அது என்னவென்றால் இயற்கையால் படைக்கப்பட்ட அனைத்து பொருட்களையும் தன்னுள் (பூமிக்குள்) ஏற்றுக்கொண்டு, அதனை மக்கி அழித்து மண்ணோடு மண்ணாக்கும்…
Read Moreபிப்ரவரி 13 உலக வானொலி தினம்
Today is World Radio Day நவீன உலகில் தகவல் தொடர்பு சாதனங்கள், டி.வி.மொபைல் , ஸ்மார்ட்போன், ஐ.பேட், இன்டர்நெட் என பல வழிகளில் தகவல் தொடர்பு அதிகரித்துவிட்டபோதிலும், வெகுஜன ஊடகத்தின் (MASS MEDIA) முன்னோடி வானொலி தான். தகவலை மக்களிடம் விரைவாக கொண்டு சேர்ப்பதில் வானொலியின் பங்கு அளவிடற்கரியது. இந்நிலையில்தான் ஐ.நா.வின் கல்வி , அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு (யுனெஸ்கோ )ஆண்டு தோறும் பிப்ரவரி 13-ம் தேதியை உலக வானொலி தினமாக கடைபிடிக்கிறது.வானொலி நம்மில் பலருக்கு உற்ற தோழன், வானொலியைக் கேட்டுக்கொண்டே உறக்கத்தைத் தழுவுவோர் இப்போதும் பலருண்டு.அது போல் வானொலியைக் கேட்டுக்கொண்டே கண் விழிப்போரும் பலர். இருபத்தி நான்கு மணி நேரமும் எந்த வினாடியும் அந்த விசையை முடுக்கி விட்டால் போதும் வான் அலைகளில் தவழ்ந்து வரும் இசை நம் செவிகளில் வந்து மோதும். முன்னரே…
Read Moreநெய்வேலி அருகே குளிர்பானம் அருந்திய 9 வயது சிருமி மரணம்
child dies after drinking soft drink near neyveli நெய்வேலி அருகே குளிர்பானம் குடித்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.மூன்றுபேர் கவலைக்கிடமான வகையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே, குளிர்பானம் குடித்த 9 வயது சிறுமி ரத்த வாந்தி எடுத்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் 3 குழந்தைகள் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நெய்வேலியை அடுத்த தெற்கு சேப்பளநத்தம் கிராமத்தைச் சேர்ந்த அஞ்சாபுலி என்பவர், தனது குழந்தைகளுக்கு அப்பகுதியில் உள்ள கடை ஒன்றில் பிரபல நிறுவனத்தின் தயாரிப்பிலான குளிர்பானத்தை வாங்கி கொடுத்துள்ளார். அதனை குடித்த அவரது நான்கு குழந்தைகளும் சிறிது நேரத்தில் ரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுந்துள்ளனர். இதைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்த பெற்றோர், குழந்தைகளை குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு…
Read Moreசீனாவில் அதிகம் சாப்பிட்டு மதுவும் அருந்திய பெண் ஒருவரின் வயிறு வெடித்த வினோதம்
Woman’s stomach explodes after eating too much சீனாவில் புத்தாண்டு கொண்டாட்டங்களில் கலந்துக்கொண்ட பெண் ஒருவர் அதிகம் சாப்பிட்டு, மதுவும் அருந்தியதால் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டபோது அவருடைய வயிறு வெடித்தது மருத்துவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. சீனத் தலைநகரான பீஜிங்கில் நடந்த வினோத சம்பவம் ஒன்றில் மது அருந்தியபின், அளவுக்கு அதிகமாக சாப்பிட்ட பெண்ணிற்கு அறுவை சிகிச்சை செய்த போது அவரது வயிறு வெடித்தது. 58 வயதான அப்பெண் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டதில் அவரின் கீழ்வயிற்றில் கடும் வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடனடியாக அவருக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள், அதற்காக ஒரு மின்சார கத்தியை பயன்படுத்தினர் (electric surgical knife). அப்போது இக்கத்தி, அப்பெண்ணின் வயிற்றில் இருந்த எத்தில் அல்கஹால் மீது பட்டபோது வயிறு வெடித்து வாயு வெளியாகி தீ பிழம்பு தோன்றியதாக கூறப்படுகிறது. இதனால்…
Read Moreஅமெரிக்க சில்லறை வணிக நிறுவனத்தில் சிகரெட், புகையிலை விற்பதில்லை என முடிவெடுத்து உள்ளனர்
CVS Vows to Quit Selling Tobacco Products அமெரிக்காவின் பார்மஸி சில்லரை வணிக நிறுவனமான சிவிஎஸ் கேர்மார்க், சிகரெட் மற்றும் புகையிலைப் பொருட்களை விற்பதில்லை என முடிவு செய்துள்ளது. அக்டோபர் 1 ம் தேதி முதல், சிவிஎஸ் பார்மஸியின் 7600 கடைகளிலும் இந்த திட்டம் அமலுக்கு வருகிறது. 800 கடைகளில் மினி க்ளினிக்களும் செயல்பட்டு வருகின்றன. புகையிலை மற்றும் சிகரெட் பொருட்களை விற்பதை தடை செய்வதன் மூலம், எங்கள் வாடிக்கையாளர்களின் உடல் நலத்தில் நாங்கள் முழுமையாக அக்கறை செலுத்தமுடியும். நோய்க்கு காரணமாக இருக்கும் சிகரெட், புகையிலையை ஒரு கையிலும், அதை குணமாக்குவதற்காக மருந்து மாத்திரைகளை இன்னொரு கையிலும் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு நாங்கள் கொடுப்பது, முரண்பாடான செயலாக இருக்கிறது. அதனால், இந்த முடிவு எடுத்தோம். ஆண்டுக்கும் 2 பில்லியன் டாலர்கள் வருமானம் குறையும் என்றாலும் நீண்டகால மக்கள் நலன் கருதி…
Read Moreஆற்றலை அதிகரிப்பதற்காக அருந்தும் பானங்களை பயன்படுத்தும் இளைஞர்களை போதை பொருட்களுக்கு அடிமையாகும் ஆபத்து
Energy drinks behind substance use among teens ஆற்றலை அதிகரிப்பதற்காக இன்றைக்கு ஏராளமான பானங்கள் சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளன. இவற்றை வாங்கி குடிக்கும் பானங்கள் இளைஞர்களை எளிதில் போதை பொருட்களுக்கு அடிமையாகும் ஆபத்து அதிகம் உள்ளது என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலை கழகத்தின் சமூக ஆராய்ச்சி அமைப்பு ஆராய்ச்சியாளர் ஒய்வான் எம். டெர்ரி மெக்எல்ராத் தலைமையிலான ஆய்வாளர்கள் இது தொடர்பான ஆய்வு ஒன்று மேற்கொண்டனர். அதில் பல அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் தெரியவந்தன. இளைய தலைமுறையினர், ஆற்றலை அதிகரிக்க குடித்துவிட்டு கடைசியில் ஆல்கஹாலுக்கு அடிமையாகி விடும் ஆபத்து அதிகம் என்று எச்சரிக்கின்றனர் ஆய்வாளர்கள். இன்றைக்கு குட்டிப்பாப்பா முதல் இளைஞர்கள் வரை ஏதாவது ஒரு ஆற்றல் பானங்களை குடித்து வருகின்றனர். இந்த ஆற்றல் அளிக்கும் பானங்கள் பயன்பாடு அமெரிக்காவின் இளைஞர்களிடம் 3ல்…
Read More