Teaching Assistant who Suffered Taunts Because of her Excessive Hair Decides to Stop Trimming it After Being Baptised a Sikh
இங்கிலாந்தை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு மீசை, தாடி அதிக அளவில் வளர்ந்து வருவதால், அவர் இனி மீசை, தாடியுடனேயே வாழ்வது என்று முடிவெடுத்துள்ளார்.
இங்கிலாந்தில் வாழும் 23 வயது பெண் ஒருவருக்கு முகம், மார்பு போன்ற பகுதிகளில் முடி வளர்ந்து, அவருடைய உண்மையான அடையத்தை மாற்றியுள்ளது. ஹர்னாம் கவுர் என்னும் இந்தப் பெண்ணுக்கு பாலிசிஸ்டிக் ஓவரி சின்ட்ரோம் என்ற நோய் அவருடைய 11 வயதில் தாக்கி முகத்தில் முடி வளர ஆரம்பித்துள்ளது. அதனால் இவர் பள்ளியில் சக மாணவ மாணவிகளின் கேலிக்கு ஆளானார். இதனால் பள்ளிக்கு செல்வதையே நிறுத்திவிட்டு வீட்டில் இருந்தே படிக்க தொடங்கினார். இவருடைய முகம் மட்டுமின்றி கை, கால், மார்பு போன்ற உடலின் அனைத்து பகுதிகளிலும் முடி முளைத்ததால் பெரும் அவதிக்குள்ளானார்.
அதிக அளவில் வளரும் முடியை வாரத்திற்கு இருமுறை ஷேவிங், வாக்ஸிங் செய்து அகற்றுவதிலேயே இவருக்கு அதிக நேரம் செலவானது. ஆனால் ஒரு கட்டத்தில் இவர் இவ்வாறு முடியை அகற்றுவதை முற்றிலுமாக நிறுத்திவிட்டார்.
சக பெண்களை போலவே தானும் ஒரு வாழ்க்கையை வாழ வேண்டுமென விரும்பும் இப்பெண்ணின் முடிவிற்கு அவரது குடும்பத்தினர் ஆதரவு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.