Now, flying robot to save humans from drowning முன்பு ஒவ்வொரு நாளும் என்பது இப்பொழுது மணிதுளிக்கு மணித்துளி மனிதன் செய்யும் வேலைகள் எல்லாவற்றிலும் ரோபோ முக்கிய பங்கு வகிக்கிறது. அது இன்று இன்றியமையாததாக இருக்கிறது. தண்ணீரில் மூழ்கி, உயிருக்கு போராடுபவர்களை மின்னல் வேகத்தில் பறந்து சென்று காப்பாற்றுவதற்காக, ஜி.பி.எஸ்., தொழில்நுட்பத்த்தால் இயங்கும் ஓர் ரோபோவை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி உள்ளனர். பார்ஸ் என அழைக்கப்படும் இந்த புரோட்டோ டைப் ரோபோ, தண்ணீரிலும் செயல்படும் திறன் கொண்டது. ஈரான் நாட்டு ஆய்வு நிறுவனமான ஆர்.டி.எஸ்., என்ற ஆய்வகத்தில் இது உருவாக்கப்பட்டது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நீரில் மூழ்கி அதிகமானோர் இறக்கும் காஸ்பியன் கடல் பகுதியில் இந்த ரோபோ வெள்ளோட்டம் விடப்பட்டது. இதில் 75 மீட்டருக்கு அப்பால் உள்ள இலக்கில் இருந்து பாதிக்கப்பட்டவரை தூக்கிக் கொண்டு 22 வினாடிகளில்…
Read MoreAuthor: Tamil Siragugal | Tamil news online
தமிழ்நாடு மின் மிகை அல்ல… மின் "பகை' மாநிலம் : தி.மு.க. தலைவர் கருணாநிதி குற்றச்சாட்டு…
DMK Chief M.Karunanithi criticized Jayalaitha Government of Tamilnadu that state of tamilnadu became “Minpagai” a enemy of Electricity against a previous statement of CM saying that Tamilnadu will become “Minmigai state” “தமிழ்நாடு மின் மிகை மாநிலமாக மாற்றம் பெறவில்லை, அதற்க்கு மாறாக ‘மின் பகை’ மாநிலமாக தான் மாறி இருக்கிறது’ என தி.மு.க தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார். இது சம்பந்தமாக ஞாயிறன்று வெளியிட்ட அவரது அறிக்கை பின் வருமாறு:- அ.தி.மு.க ஆட்சியில் மின்சாரம் உள்ளதோ இல்லையோ, மின் உற்பத்தி பாதிப்படைந்த செய்தி ஒவ்வொரு தினமும் வருகிறது. வடசென்னையில் உள்ள அனல் மின் நிலையத்தில் 2-வது அலகில் நிலக்கரி கொண்டுச்செல்லும் பாதையில் துவாரம் ஏற்பட்டு, அலட்சிய போக்கால், அதனை சீர் செய்யாமல் விட்டதால் கொதிகலனுக்கு எண்ணெய் எடுத்துச்…
Read Moreஇந்திய வங்கிகளில் யாருடையது என்று தெரியாது கிடக்கும் 3,652 கோடி ரூபாய்
fund lying unclaimed at banks in india : Rs 3,652 crore 2012- டிசம்பர் ஆண்டின் நிலவரத்தின் படி, இந்தியா முழுவதும் இருக்கும் வங்கிகளில் 3,652 கோடி ரூபாய் யாருடையது என்று தெரியாமல் பல்வேறு வங்கிக் கணக்குகளில் கிடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாரத ஸ்டேட் வங்கியில் மட்டும் ருபாய் 714 கோடி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது: இந்த பட்டியலின் முதல் இடத்தில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா இருக்கிறது. இந்த வங்கியில் மட்டும் ரூ.714 கோடி பணம் பல வங்கிக் கணக்குகளில் இருக்கிறது. இரண்டவது Â இடத்தில் கனரா வங்கி உள்ளது. அதில், ரூ.525.8 கோடியும் உள்ளது. இந்தியாவில் இருக்கும் வங்கிகளில் பல பேர் தங்களுடைய சேமிப்பு கணக்குகளை துவக்கி விட்டு அவைகளை தேவையான பராமரிப்பு ஏதும் செய்யாமல் விட்டு விடுகின்றனர். மேலும் பல்வேறு…
Read Moreகாஞ்சிபுரத்தில் ராகிங் கொடுமைக்கு மருத்துவ கல்லூரி மாணவன் பலி
senior students Ragging lead to Medical collage student suicide in hostel சென்னை: மருத்துவ கல்லூரி மாணவர் ஒருவர் ராகிங் கொடுமையால் தற்கொலை செய்து கொண்டது, காஞ்சிபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்ட வழங்கல் அதிகாரியின் நேர்முக உதவியாளர் முருகன். இவரது மனைவி சாவித்திரி ஜெகதேவி ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார். இவர்களுக்கு 4 மகன்கள் 3வது மகன் முகில்ராஜ்குமார் (18). இவர் காஞ்சிபுரம் அடுத்த ஏனாத்தூரில் மீனாட்சி மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ் முதலாண்டு படித்தார், முதலாண்டு மாணவர்களுக்கான கல்லூரி விடுதியில் இடமில்லை என்பதை காரணம் காட்டி, 3ம் ஆண்டு மாணவர்கள் 5 பேருடன் முகில்ராஜ்குமார் தங்க வைக்கப்பட்டார்.விடுதியில் சேர்ந்த 2வது நாளில் இருந்தே முகில் ராஜ்குமார் ராகிங் கொடுமைக்கு ஆளானதாக கூறப்படுகிறது. senior students Ragging lead to Medical collage…
Read Moreஅமெரிக்கவில் வசித்து வந்த இந்திய பெண்ணை காரால் மோதி 5 கி.மீ. இழுத்து சென்று கொலை
Indian-American woman dragged for 5 KMs, dies அமெரிக்காவில் வசித்து வந்த இந்திய பெண்ணும் அவரது கணவரும் ஒரு அமெரிக்க வாலிபரால் தாக்கப்பட்டனர். இதில், அந்த வாலிபரின் காரில் சிக்கிகொண்ட இந்திய பெண் சுமார் 5 கி.மீ. இழுத்து செல்லப்பட்டதால், பரிதாபமாக பலியானார். காஞ்சன்பென் பட்டேல் என்னும் 58 வயது பெண்ணை அமெரிக்காவை சேர்ந்த மோசஸ் அக்லோக் என்னும் 22 வயது இளைஞர் அவரது காரில் இடித்து, தனது வாகனத்தில் சுமார் 5 கி.மீ. இழுத்துச் சென்றதில் அப்பெண் பலியானார். அமெரிக்காவின் மாசசுசெட்ஸில் உள்ள ஒரு மோட்டலுக்கு மோசஸ் அவரது நண்பரோடு வந்து தங்கியுள்ளார். அங்கு அண்மையில் அமெரிக்க குடியுரிமை பெற்ற இந்தியரான காஞ்சன்பென் பட்டேலும் அவரது கணவரும் வேலை பார்த்து வந்தனர். இந்நிலையில் மோசஸ் தங்கியிருந்த அறைக்கு வாடகை கொடுக்காதது தொடர்பாக…
Read Moreஅமெரிக்காவில் ஒன்றரை வயது மகளை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த தந்தை
Man posts photos of daughter on Facebook moments before killing her, then shoots self அமெரிக்காவில் ஒன்றரை வயது மகளை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த தந்தை ஒருவர் தானும் துப்பாக்கியால் சுட்டுக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலராடோவை சேர்ந்த 22 வயதான மெர்ரிக் மேக்கோய் என்ற நபருக்கும் அவரது மனைவிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதால், அவர் ஒன்றரை வயது பெண் குழந்தையை மெர்ரிக்கிடம் விட்டுவிட்டு வீட்டைவிட்டே வெளியேறினார். இதனால் மனமுடைந்துப்போன மெர்ரிக், அவர் குழந்தையுடன் இருக்கும் படங்களை சமூக வலைதளமான பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்தார், பேஸ்புக்கில், அவரது மனைவிக்கு ஒரு செய்தி தெரிவித்திருந்தார். அதில், ‘நீ இல்லாமல் என்னால் வாழமுடியாது என நான் உன்னிடம் கூறியிருக்கிறேன்’ என குறிப்பிடபட்டிருந்தது. இதற்கு பிறகு ஒன்றரை வயது குழந்தையுடன் தனியாக இருந்த மெரிக்கின் வீட்டில்…
Read Moreபெல்ஜியத்தில் ஒரு வருடமாக இறந்து போன கணவரின் சடலத்தோடு வாழ்ந்த மூதாட்டி
Widow Sleeps With Dead Husband Decomposing Corpse for a Year After his Death in belgium பெல்ஜியம் நாட்டை சேர்ந்த மூதாட்டி ஒருவர் அவரது கணவரின் சடலத்தோடு ஒரு வருட காலம் வாழ்ந்துவந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெல்ஜியம் நாட்டின் தலைநகர் புரூசெல்ஸ்ன் புறநகர் பகுதியில் வயதான தம்பதி வசித்து வந்தனர். 79 வயதான கணவர் மார்சல் ஆஸ்துமா காரணமாக இறந்துவிட, அவரது மனைவி அவர் கணவரின் மரணம் குறித்து யாரிடமும் தகவல் தெரிவிக்காமல் இருந்துள்ளார். இந்நிலையில், இவர்கள் வசிக்கும் வீட்டிற்கு வாடகை தராத காரணத்தினால், வீட்டின் உரிமையாளர் காவல் துறையினரிடம் புகார் தெரிவித்துள்ளார். புகாரின் பேரில், வீட்டில் இருப்போரை விசாரிக்க வந்த காவல்துறையினர் அவர்கள் கண்ட காட்சி திடுக்கிட செய்தது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம், இறந்துப்போன கணவரின் உடலை அவரது மனைவி படுக்கை மீது போட்டுவைத்திருந்தார். இதனால் அதிர்ச்சி…
Read Moreஇயக்குநர் களஞ்சியம் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதிலிருந்து நடிகை அஞ்சலிக்கு விலக்கு
Tamil actress Anjali : The Madras High Court ordered that it is not necessary for tamil actress Anjali to appear for the hearing of director Kalanjiam defamation case in the court சென்னை: இயக்குநர் களஞ்சியம் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதிலிருந்து நடிகை அஞ்சலிக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளுள் ஒருவர் அஞ்சலி. தன் சித்தி பாரதிதேவியுடன் ஏற்பட்ட பிரச்சினையால், தமிழ்நாட்டை விட்டு வெளியேறி சொந்த மாநிலமான ஆந்திராவுக்கு சில மாதங்களுக்கு முன் சென்றுவிட்டார். இன்று வரை சென்னை திரும்பவே இல்லை. தான் வெளியேறியது ஏன் என்று பத்திரிகைகளுக்கு பேட்டியளித்த நடிகை அஞ்சலி, தன் சித்தி பாரதிதேவி, இயக்குனர் களஞ்சியம் ஆகியோர் மீது கடுமையான குற்றச்சாட்டுக்களைக் கூறி பரபரக்க வைத்தார். இதையடுத்து, அஞ்சலி மீது…
Read Moreஇன துவேசம் செய்யப்பட்ட அமெரிக்க வாழ் இந்தியருக்கு ரூ31,25,500 லட்சம் நஷ்ட ஈடு: அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு
Sikh man to get $50,000 in religious discrimination case தாடி வைத்திருந்ததன் மூலம் சீக்கியர் என அடையாளம் கண்டு கொண்ட அமெரிக்கக் கார் நிறுவனம் ஒன்று, வேலை வேண்டி வந்தவருக்கு தாடியை எடுத்தால் வேலை தருவதாக நிபந்தனை விதித்தது. இதனை எதிர்த்து சம்பந்தப்பட்ட சீக்கியர் தொடர்ந்த வழக்கில், அவருக்கு ரூ31,25,500 லட்சம் இழப்பீடு கிடைத்துள்ளது. அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சா வழியை சேர்ந்த சீக்கியர் குர்ப்ரீத் கெர்ஹா. இவர் நியூஜெர்சி நகரில் உள்ள கார் டீலரிடம் வேலை வேண்டிச் சென்றார். நேர்முக தேர்வில் தேர்ச்சி பெற்ற கெர்ஹாவுக்கு, அந்த நிறுவனம் ஒரு முக்கிய நிபந்தனை விதித்தது. அதாவது, அவர், தனது தாடியை நீக்கிவிட்டு உடனடியாக பணியில் சேர்ந்து கொள்ளலாம் என்பது தான் அது. இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த கெர்ஹா, தன் மத சம்பிரதாயங்களை மீறியவகையில் தாடியை எடுக்க…
Read Moreஉலகில் 250 கோடி மக்களுக்கு கழிப்பறை வசதி இல்லை : உலக வங்கி ஆய்வறிக்கை
250 crore of people in this world live without toilet facility சுமார் 60 கோடிக்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு கழிப்பறை வசதி இல்லை என்று உலக வங்கி ஆய்வறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. ஐ.நா. சபை சார்பில் நவம்பர் 19-ம் தேதி கழிப்பறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி உலக வங்கி வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. உலகம் முழுவதும் சுமார் 250 கோடி மக்களுக்கு கழிப்பறை வசதி இல்லை. சுமார் 100 கோடி மக்கள் திறந்தவெளியை கழிப்பறையாக பயன்படுத்துகின்றனர். இந்தியாவில் 53% வீடுகளில் கழிப்பறை இல்லை… இந்தியாவில் சுமார் 60 கோடி மக்களுக்கு கழிப்பறை வசதி இல்லை. அதாவது சுமார் 53 சதவீத வீடுகளில் கழிப்பறை இல்லை. கழிப்பறை வசதி தொடர்பாக இந்தியக் குழந்தைகளிடம் சிறப்பு ஆய்வு நடத்தப்பட்டது. அதில், முதலாம் வயது பருவத்தில் சுகாதாரமான கழிப்பறை வசதியைப்…
Read More