EC ELECTION COMMISSION to post counting results on Twitter – FACEBOOK ராஜஸ்தான் மற்றும் டெல்லி தவிர்த்து ஏனைய 3 மாநிலங்களில் வாக்குப்பதிவு முடிவுற்றது. வரும் 1ம் தேதி ராஜஸ்தானிலும், வரும் 4ம் தேதி டெல்லியிலும் வாக்கு பதிவு நடை பெறவுள்ளது. 8ம் தேதி, 5 மாநிலங்களிலும் பதிவான வாக்குகள் எண்ணப்படும். இந்த தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலை தளங்களில் வெளியிட தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. தேர்தல் ஆணையத்துக்கு ஏற்கனவே பேஸ்புக் மற்றும் டுவிட்டரில் அக்கவுன்ட் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் ஒரு கோடியே 10 லட்சம் பேர் பேஸ்புக் வாடிக்கை யாளர்களாக உள்ளனர். டுவிட்டருக்கு 8 கோடி மக்கள் ஆதரவு உள்ளது. ஆனால் தேர்தல் ஆணையத்தின் பேஸ்புக் பக்கத்துக்கு 130 வாடிக்கையாளர்களும், டுவிட்டருக்கு 120 வாடிக்கையாளர்கள் மட்டுமே…
Read MoreAuthor: Tamil Siragugal | Tamil news online
சர்வர் இல்லாமல் / யூ ஆர் எல் இல்லாமல் இனி ஒரு புது வகை இணைய வழி !
CAMBRIDGE UNIVERSITY INVENTED A NEW FOR INTERNET WITHOUT URL AND WWW இன்டர்னெட் எனப்படும் இணையம் இல்லா வாழ்க்கையை நினைத்து பார்த்தாலே அம்மாடியோனு பல பேர் சொல்ல கேட்டிருப்போம். இது பல சமயம் நடக்கும விஷயம் தான் சர்வர் கிராஷ் / நாட் அவய்லபிள் / ஹேக்கிங் என்று அடிக்கடி சர்வர் செயல் இழந்து போவதால் இந்த ‘அம்மாடி; கிளம்புகிறது. இதற்கிடையில் ஈமெயிலிருந்து / ஈ எஜுகேஷன் வரை பாதிப்பதின் காரணம் உலக வலை எனப்படும் (www ) இது ஒரு வகையில் உலகத்தின் எந்த ஒரு மூலையில் இருந்து ஆக்ஸஸ் செய்யும்படி வடிவமைக்கபட்டிருப்பதால் இதனை அழிக்கவும் உலகம் முழுவதும் எங்கிருந்து வேன்டுமாணாலும் செயல்பட முடியும். இதனால் சர்வர் ஹேக் அல்லது சர்வரை கிராஷும் செய்ய முடியும். இதை கவனத்தில் கொண்டு இப்போது WWW…
Read Moreஉலகின் மிக விலை உயர்ந்த புத்தகம் ரூ.87 கோடிக்கு ஏலம்
World’s most expensive book sells for $14 million கடந்த 1640ம் ஆண்டு மசாசூட்ஸ் மாகாணத்தில் அச்சடிக்கப்பட்ட ‘தி பே சாம் புக்’ என்ற இந்த புத்தகம் இன்று நியூயார்க்கில், ஏலம் விடப்பட்டது. அப்போது 14 மில்லியன் டாலர் அளவிற்கு இந்த புத்தகம் ஏலம் போனது. இதையடுத்து, உலகின் மிகவும் காஸ்ட்லியான புத்தகம் என்ற பெருமையை இந்த புத்தகம் அடைந்துள்ளது. அமெரிக்க நியூயார்க் சோத்பி ஏலமையத்திற்கு அமெரிக்காவிலேயே முதல் முதலாவதாக அச்சடிக்கப்பட்ட புத்தகம் ஒன்று நேற்று ஏலத்திற்கு வந்தது. ஏலம் தொடங்கிய 5 நிமிடத்திற்குள்ளேயே இந்த புத்தகம் 14 மில்லியன் டாலருக்கு ஏலம் போனது. இதன் இந்திய மதிப்பு 87 கோடியே 13 லட்சத்து 60 ஆயிரம் ரூபாயாகும். இதுவே உலகின் மிக விலை உயர்ந்த புத்தகம் என்று கூறப்படுகிறது. நிதி நிறுவன அதிபரும் மனிதநேயவாதியுமான…
Read Moreபேஸ்புக் கில் உலா வரும் திமுக தலைவர் கருணாநிதி குடும்பத்தின் சொத்து மதிப்பு
ஆதிமுக தலைவரும் செயலாளரும்மான முதல்வர் ஜெயலலித்தா அவர்கள் திமுக தலைவர் கருணாநிதியை பற்றி விமர்சனம் செய்யும் பொழுது “திருவாரூரில் இருந்து திருட்டு ரயில் ஏறி வந்தவர்” எப்படி இவ்வளவு சொத்து சேர்த்தார் என கேள்வி எழுப்புவார், அது உண்மையை நிருபிக்கும் விதமாய் சில நாட்களாக facebook இனைய தளத்தில் பலரின் கருத்து தொகுப்பில் திமுக தலைவர் மற்றும் திமுகா வின் சொத்து மதிப்பை பகிர்கின்றனர் அந்த பகிர்வு இங்கு கீழே தரப்பட்டுள்ளது முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான சொத்துக்கள் என 60-க்கும் மேற்பட்ட, பல ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துக்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது டெல்லியிலிருந்து வெளியாகும் தி அதர் சைட் பத்திரிகை. இந்தப் பத்திரிகையின் ஆசிரியர் ஜார்ஜ் பெர்ணான்டஸ். கருணாநிதியின் நீண்ட கால நண்பரும் கூட. நெஞ்சம் பலகீனமானவர்கள் இதனை பார்க்க வேண்டாம்.…
Read Moreரத்த அழுத்தத்தைக் குறைக்கும் வேரிலிருந்து கிடைக்கும், சத்துக்கள் நிறைந்த மிக முக்கியமான காய்கறி : பீட்ரூட்
important root – beetroot : our mothers and grandmothers HOME MEDICINE வேரிலிருந்து கிடைக்கும் காய்கறிகளுள் சத்துக்கள் நிறைந்த மிக முக்கியமான ஒன்று பீட்ரூட். காய், கீரை, ஜூஸ் என பீட்ரூடின் அனைத்து பாகங்களும் உடலுக்கு நன்மை பயக்கக் கூடியவை. பீட்ரூட் என்ற ஒற்றை உணவுப்பொருள் உடலின் பல்வேறு சிக்கல்களைத் தீர்க்க வல்லது. ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். நைட்ரேட்டுகளின் தலை சிறந்த மூலாதாரமாக விளங்கும் பீட்ரூட், வயிற்றுக்குள் சென்ற பின் நைட்ரைட்டுகள் மற்றும் நைட்ரிக் ஆக்ஸைடு என்றழைக்கப்படும் வாயுவாக மாற்றப்படுகிறது. இவ்விரண்டு கூறுகளும் ரத்த நாளங்களை விரிவடையச் செய்வதோடு, ரத்த அழுத்தத்தை குறைக்கவும் உதவுகின்றன. கெட்ட கொழுப்பைக் குறைக்கும் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள், ப்ளேவோனாய்டுகள் மற்றும் பீட்டாஸையனின் போன்றவை மிகுந்து காணப்படுகிறது. பீட்டாஸையனின் என்ற கூறு, பீட்ரூட்டுக்கு அதன் கருஞ்சிவப்பு நிறத்தைக் கொடுப்பதோடு, சக்தி வாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட் ஆகவும் செயல்படுகிறது. மாரடைப்பு…
Read Moreவிக்கிபிடியா நடத்திய புகைப்பட போட்டியில் முதல் பரிசு வென்ற தஞ்சை கோவில் புகைப்படம்
Wiki Loves Monuments: India edition of world’s largest photo contest announces winners உலகத்தின் மிகப் பெரிய புகைப்பட போட்டியாக கின்னஸ் நிறுவனம் அங்கீகாரம் செய்துள்ளவிக்கிபீடியா நடத்திய “இந்திய நினைவுச் சின்னங்கள்-2013′ என்ற புகைப்படப் போட்டியில் இவ்வருடம் இந்தப் போட்டிக்கு 11,786 புகைப்படங்கள் சென்றன. இதில் “சாஸ்த்ரா’ பல்கலைக்கழகத்தின் எம்.டெக். மெடிக்கல் நானோ டெக்னாலஜி இறுதியாண்டு மாணவர் கார்முகில்வண்ணன் முதல் பரிசு வென்றார். கார்முகில்வண்ணன் எடுத்த இந்தப் பரிசுக்குரிய புகைப்படம், புகழ்பெற்ற தஞ்சாவூர் பெருவுடையார் கோவிலின் முழுத் தோற்றத்தையும் அழகாக பிரதிபலிக்கும்படியாக எடுக்கப்பட்டுள்ளது. விக்கிபீடியாவின் இந்தப் போட்டி பல நாடுகளிலும் ஒரே நேரத்தில் நடத்தப்படுகிறது. போட்டியில் கலந்து கொள்ளும் புகைப்படங்கள், பன்னாட்டு நடுவர்களால் தேர்வு செய்யப்படுகிறது. பல நாடுகளிலிருந்து வெற்றி பெறுபவர்கள் லண்டனில் ஆகஸ்ட் 2014-ல் நடைபெறும் விக்கிமீடியன் மாநாட்டில் கலந்து கொள்ள வாய்ப்பளிக்கப்படுகிறது. இந்தப் போட்டி உலகத்தின் மிகப்…
Read Moreகூடங்குளம் அணு உலை அருகே நாட்டு வெடிகுண்டு வெடித்து 7 பேர் பலி
7 killed in bomb blast in village near Kudankulam nuclear plant “இடிந்தகரை சுனாமி காலனியில் உள்ள ஒரு வீட்டில் சட்டவிரோதமாக வெடிகுண்டு, நாட்டு வெடிகுண்டுகளை ஒரு கும்பல் ரகசியமாக தயார் உள்ளது. குண்டு தயாரித்த போது திடீர் என்று அந்த குண்டுகள் மொத்தமாக வெடித்துள்ளன. இதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்”.என்று போலீஸ் சூப்பிரண்டு விஜயேந்திர பிதரி தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்டம், ராதாபுரம் தாலுகாவிற்கு உட்பட்ட கூத்தங்குழி கிராமங்களில் தாது மணல் ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்கள் இடையே தொடர்ந்து பல ஆண்டுகளாக கோஷ்டி மோதல் இருந்து வருகிறது. இந்த இரு கோஷ்டிகளும் தங்கள் பலத்தை காட்ட, கடந்த இரண்டு ஆண்டுகளாக அவ்வப்போது நாட்டு வெடிகுண்டுகளை வீசி வருகின்றனர். இதில் பயத்தில் உறைந்து போன மக்களில் சிலர் குடும்பங்களுடன் கூத்தங்குழியை விட்டு வெளியேறி உவரி, கூடுதாழை, சொக்கன்குடியிருப்பு…
Read Moreரிப்பன் பில்டிங் கட்டிடம் திறக்கப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவு
Ripon building 100th anniversary சென்னையின் வெள்ளை மாளிகை என்று சொல்லப்படும் கார்ப்பரேஷன் தலைமை அலுவலகமான ரிப்பன் பில்டிங்கட்டடம் திறக்கப்பட்டு இன்றுடன் (நவம்பர் -26 செவ்வாய்க்கிழமை) 100 ஆண்டுகள் நிறைவடைகிறது. இந்த கம்பீரமான மாளிகை கடந்த 1909ம் ஆண்டு கட்ட துவங்கி 1913ம் ஆண்டு முடிக்கப்பட்டது. மூன்று தளங்கள் கொண்ட இந்த மாளிகையின் மொத்த பரப்பளவு 25 ஆயிரம் சதுரடி. மாளிகை 252 அடி நீளமும் 126 அடி அகலமும் மாளிகைக்கு அழகு சேர்க்கும் கடிகார கோபுரம் 132 அடி உயரமும் கொண்டவை. கோபுரத்தில் பொருத்தப்பட்டுள்ள கடிகாரம், 8 அடி விட்டம் உடையது.இந்திய – ரோமானிய கட்டட கலை வடிவமைப்பு கொண்ட ரிப்பன் மாளிகையில் வெப்பத்தை உள் வாங்காத வகையிலான மெட்ராஸ் டெரஸ் கூரை அமைக்கப்பட்டுள்ளது.மேலும் செங்கல், சுண்ணாம்பு, மணல், கடுக்காய் தண்ணீர், வெல்லம் கலந்த கலவையில்…
Read Moreபுலிகள் நினைவாக மாவீரர் தினம் அனுசரிக்க இலங்கை அரசு திடீர் தடை
Tamil tiger leader Prabakaran Birthday celebration banned in srilanka even after 4 years of his dealth கொழும்பு : இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரில் இறந்த விடுதலைப் புலிகளின் நினைவாக ஆண்டுதோறும் நவம்பர் 27-ம் தேதி மாவீரர் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான மாவீரர் தினம் நாளை மறுநாள் அனுசரிக்கப்பட உள்ளது. இந்நிலையில், மாவீரர் தினம் அனுசரிக்க இலங்கை அரசு இன்று தடை விதித்துள்ளது. இதுதொடர்பாக இலங்கை ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இலங்கையில் போர் முடிந்து 4 ஆண்டுகள் ஆகியும், விடுதலைப் புலிகள் அமைப்பு இன்னும் தடை செய்யப்பட்ட அமைப்பாக நீடிக்கிறது. எனவே, புலிகளைக் கொண்டாடும் எந்த நிகழ்ச்சியும் நடத்த தடை செய்யப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது. “பிரிவினைவாத கருத்துக்களை ஊக்குவித்தல் மற்றும் பரப்பும் பணிகளில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஈடுபட்டால் சட்டப்படி அது…
Read Moreநவம்பர் 25 சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம்
Violence Against Women : November 25th International Day for the Elimination of Violence Against Women நாளுக்கு நாள் பெண்களின் அறிவாற்றல், தலைமைத்துவம், பங்கேற்பு போன்ற பல உரிமைகள் அதிகரித்து வந்தாலும் அவற்றுக்கெதிராக பெண்களுக்கெதிரான உரிமை மீறல்களும் அதிகரித்து கொண்டேதான் வருகின்றன. அரசியல், சமூக, பொருளாதார மற்றும் கலாசார ரீதியான உரிமைகள் உலக நாடுகளில் பெண்களுக்கு எட்டாக்கனியாகவே காணப்படுகின்றன. இத்தனைக்கும் 1789 ஆம் ஆண்டுகளிலேயே பெண்களின் உரிமை மீறலுக்கு எதிராக புரட்சிகள் ஆரம்பித்தன. அக்காலப்பகுதிகளில் வேலைக்கேற்ற ஊதியம், வேலை நேரம், வாக்குரிமை, அடிமைத்தனத்திலிருந்து விடுவித்தல் போன்ற சம உரிமைகளைக் கோரி பிரான்சில் ஆரம்பித்து, ஐரோப்பிய நாடுகள் முழுவதிலும் பெண்கள் உரிமைகள் தொடர்பான பரந்தளவான பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் தற்காலத்திலும் பெண்கள் இப்படியான தமது உரிமைகளை அனுபவித்து வருகின்றனரா என்பது கேள்விக்குறியாகவே காணப்படுகின்றது. அத்துடன் இன்றைய…
Read More