பொதுநலனுக்காகத்தான் டிராபிக் ராமசாமி போராடுகிறார், தனக்காக அல்ல. என சென்னை உயர் நீதி மன்ற நீதிபதி கருத்து.

Madras High court asks commissioner of police to consider plea against Egmore Inspector of Police by Traffic Ramasamy

பொதுநலனுக்காகத்தான் டிராபிக் ராமசாமி போராடுகிறார், தனக்காக அல்ல. என சென்னை உயர் நீதி மன்ற நீதிபதி கருத்து. சென்னை: சென்னை உயர் நீதி மன்றத்தில், டிராபிக் ராமசாமி ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், சட்டவிரோதமாக ‘சென்னை எழும்பூர் எத்திராஜ் சாலையில் வைக்கப்பட்ட பேனர்களை அகற்றினேன். எனினும், அதே இடத்தில் மீண்டும் அதே பேனர்களை வைத்திருக்கின்றனர். இது பற்றி காவல்துறையினரிடமும், மாநகராட்சி அதிகாரிகளிடமும் புகார் அளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்க படவில்லை. ஆதலால், எழும்பூர் காவல் கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்தேன். எனினும் அதன் மீது எந்தஒரு நடவடிக்கை எடுக்க பட வில்லை. ஆகவே, சட்டவிரோதமாக பேனர்கள் வைத்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யவும் காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்’…

Read More

ஸ்டெர்லிட் எதிர்ப்பு போராட்டம்: வழக்கறிஞர்களுக்கு உயர்நீதிமன்றம் முன் ஜாமின் மறுப்பு

Protest against Anti-Sterlite, anticipatory bail dismissed  for lawyers : Madras High Court

Protest against Anti-Sterlite, anticipatory bail dismissed for lawyers : Madras High Court ஸ்டெர்லிட் எதிர்ப்பு போராட்டம்: வழக்கறிஞர்களுக்கு உயர்நீதிமன்றம் முன் ஜாமின் மறுப்பு மதுரை: சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை பெஞ்ச், தூத்துக்குடி நகரில் ஸ்டெர்லிட் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இரண்டு வழக்கறிஞர்கள் மீது ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்துள்ளது. இதே நீதிமன்றத்தில் கடந்த 7 ஆம் தேதி அவ்வழக்கறிஞர்களை கைதுசெய்ய தடை விதித்தது குறிப்பிடத்தக்கது. “மக்களே அதிகாரம்” வழக்கறிஞர்கள் ஹரி ராகவன் மற்றும் வஞ்சிநாதன் இருவரும் மதுரை மற்றும் தூத்துக்குடி நீதிமன்றங்களில் பணிபுரிந்து வருகிறார்கள். குறிப்பாக அவர்கள் இருவரும் “மக்களே அதிகாரம்” என்ற இயக்கத்தின் செயலாளர்களாகும். போலீசார் அவர்களுக்கு எதிராக பத்து வழக்குகள் பதிவு செய்துள்ளனர். வழக்கறிஞர்களின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி திரு ஜி.ஆர். ஸ்வாமிநாதன் காவல்துறையின் விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு…

Read More

கேரள ஏ.டி.ஜி.பி மகள் ஆர்டலி-யை தாக்கியதால் பதவி பறிப்பு !

கேரளாவில் ஏ.டி.ஜி.பி யாக பணிபுரியும் சுதேஷ் குமாரின் மகள் அவரது இல்லத்தில் ஆர்டலியாக பணிபுரியும் கவாஸ்கரைத் தாக்கியதைத் தொடர்ந்து போலீஸ் பட்டாலிய பொறுப்பிலிருந்து ஏ.டி.ஜி.பி விடுவிக்கப்பட்டார்.

Read More

கர்ப்பிணி பெண் உஷா சாவுக்கு, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கடும் கண்டனம்

கர்ப்பிணி பெண் உஷா

திருவெறும்பூர் கர்ப்பிணி பெண் உஷா மரண சம்பவத்திற்கு, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகில் இருக்கும் சூலமங்கலம் எனும் கிராமத்தை சேர்ந்தவர் திரு.ராஜா என்ற தர்மராஜ் (வயது 40). இவர் தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி உஷா (வயது 36). கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் காதல் திருமணம் செய்து கொண்டார்கள். கடந்த மூன்று மாதங்களுக்கு முன் தான் உஷா கர்ப்பம் அடைந்தார். நேற்று இரவு வேலை முடிந்து வீடு திரும்பிய ராஜா தனது மனைவியை பரிசோதனைக்காக திருச்சியில் இருக்கும் ஓர் தனியார் மருத்துவமனைக்கு மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார். அவர்கள் இரவு சுமார் 7 மணியளவில் திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் இருக்கும் துவாக்குடி சுங்கச்சாவடி அருகில் வந்தார்கள். அப்பொழுது அங்கே பணியில்…

Read More

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்பட வேண்டும் : அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

Maintain law and order, Madras high court directed State government

சென்னை : தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை காக்க அரசாங்கம் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் துரிதமாக எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. மேலும் சிலைகளுக்கு தேவையான பாதுகாப்பு அளிக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்திருக்கிறார்கள். பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச். ராஜா திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டதைய் சுட்டிக்காட்டி தமிழ்நாட்டில் தந்தை பெரியார் சிலை உடைத்து நொறுக்கப்படும் என சமூக வலைத்தளம் முகநூலில் பதிவிட்டிருந்த கருத்தினால் தமிழ்நாடு முழுக்க அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்சியினர் மற்றும் பொது மக்கள் போராட்டங்கள் நடத்திவருகிறார்கள். இந்த நிலையில் வேலூரில் தந்தை பெரியார் சிலை சமூகவிரோதிகள் சேதப்படுத்தியதை கண்டித்து வழக்குரைஞர் சூர்யபிரகாஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். தமிழ்நாட்டில்மி சட்டம் ஒழுங்கு பாதுகாத்திட வேண்டும். சிலைகள் பாதுகாப்பு…

Read More

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு : சிபிஐ, அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ்

Karthi Chidamnaram INX media case

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் அதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு மார்ச் 6ஆம் தேதி வரை சிபிஐ காவல் விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அமலாக்கத்துறையும் விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், தன் மீதான சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையின் சம்மன்களை ரத்துசெய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் மனுத்தாக்கல் செய்தார். ஓயாமல் சோதனைகள் நடத்தி கண்ணியத்தைக் கெடுப்பதாக கார்த்தி சிதம்பரத்தின் தந்தை ப.சிதம்பரமும் அமலாக்கத்துறை மீது வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்குகளை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை ஆகியவற்றுக்கு வழக்கு விசாரணை பற்றி பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வழக்கு விபரம் : 2007-08ஆம் ஆண்டில் அயல்நாட்டு முதலீடு மேம்பாட்டு…

Read More

PIL Petition filed in HC seeking Community certificate for Brahmin community

அரசு சாா்பில் ரூ.2 ஆயிரம் ஏழைக் குடும்பங்களுக்கு வழங்க தடை இல்லை – நீதிமன்றம் சென்னை:சென்னை உயா்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை விழுப்புரத்தைச் சோ்ந்த கருணாநிதி என்பவா் தாக்கல் செய்தார் . அந்த மனுவில், 2 ஆயிரம் ரூபாய் தர ஏழை குடும்பத்தை கண்டுபுடிப்பதில் தவறு நடப்பதாகவும் மற்றும் தேர்தலுக்காக தான் இந்த பணம் தருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது . மேலும் நிதியுதவி தொடா்பான அரசாணையில் 9 போ் கொண்ட குழு என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது, ஆனால் 7 போ் கொண்ட குழு மட்டுமே அமைக்கப்பட்டுள்ளதாக பத்திாிகை செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று இந்த மனு சென்னை உயா்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது, இதில் இந்த நிதியை பெற தகுதியானவா்களை தமிழக அரசு முறையாக தான் தோ்வு செய்துள்ளதாக கூறி மனுவை தள்ளுபடி செய்தனா்.

தமிழ்நாட்டில் பிராமணர்களுக்கு சமுதாய சான்றிதழ் வழங்க கோரி உயர்நீதி மன்றத்தில் பொது நல வழக்கு மனு தாக்கல் செய்ய பட்டுள்ளது. மாநிலத்தில் உள்ள சமூகங்களின் பட்டியலில் பிராமணர்களை சேர்க்கவும், அவர்களுக்கு சமுதாய சான்றிதழ்களை வழங்கவும் ஒரு வேண்டுகோள் ஒன்றை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி அப்துல் குட்ஹோஸ் ஆகியோரின் தலைமையிலான பெஞ்ச் முன் வந்த பொதுநல வழக்கை நீதிபதி ஹுலவிதி ஜி.ரமேஷ் விசாரிக்க உத்தரவிட்டார். ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்களில் பிராமணர்களுக்கு சமுதாய சான்றிதழ் வழங்கப்படுகிறது என்று மனுதாரர் கூறியுள்ளார். சமுதாய சான்றிதழ்களை பிற சமூகங்களுக்கு வழங்கியபோது, ​​அவர்கள் ஏன் பிராமண சமூகத்தின் விஷயத்தில் தரப்படவில்லை என்று கேள்வியெழுப்பியுள்ளார். அரசியலமைப்பின் படி பிராமணர்கள் சமூகம் என வகைப்படுத்தப்படாமலும், அவர்களுக்கு சமுதாய சான்றிதழ்கள் எழும் என்பதையும் தகவல் அறியும்…

Read More

Orissa HC Advocates cancel three-week long protest

odisha high court lawyers strike

கட்டக் : 05 March 2018 : ஒரிசா உயர் நீதி மன்ற வக்கீல்கள் மூன்று வாரங்கள் நீண்ட போராட்டத்தை வாபஸ் பெற்றனர் ஒரிசாவின் உயர்நீதிமன்றம் இன்று தங்களது மூன்று வாரகால போராட்டத்தை ரத்து செய்யத் தீர்மானித்ததோடு நாளை முதல் நாளை நீதிமன்ற பணியை தொடர திட்டமிட்டுள்ளதாக உயர் நீதிமன்ற வழக்கறிஞ்சர் சங்கத்தின் செயலாளர் சத்யபிரதா மொஹந்தி தெரிவித்துள்ளார். உயர் நீதி மன்றத்தில் நீதிபதிகள் பணிஇடங்கள் காலியாக இருப்பவைகளை நிரப்புவதற்கான நடைமுறை ஒன்றை தொடங்குவதற்கு ஒரு மாதத்திற்குள் அவர்களுக்கு தலைமை நீதிபதி உத்தரவாதம் அளித்துள்ளார். Orissa HC Advocates cancel three-week long protest The Advocates of Orissa High Court today chose to cancel their three-week long protest and made plans to continue court work from tomorrow,…

Read More

Madras high court has directed the Esplanade police to register an FIR against junior pontiff of Kanchi mutt.

FIR against Vijendra Saraswati ordered by madras high court

சென்னை : காஞ்சி மடத்தின் புதிய மடாதிபதி விஜேந்திரசரஸ்வதிக்கு எதிராக எஸ்பிளானேட் காவல்நிலையத்தில் முதல் தங்கள் அறிக்கை பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Esplanade police to register an FIR against Kanchi Mutt Vijendrar : Madras high court Chennai: The Madras high court has directed the Esplanade police to register an FIR against junior pontiff of Kanchi mutt, Vijendrar, if a cognisable offence is made out in a complaint against him. Justice M.S. Ramesh gave the directive while passing orders on a petition from advocate, also the vice-president of Thanthai Periyar Dravidar Kazhagam, which sought a direction to…

Read More

நிச்சயம் செய்தபின் திருமணத்துக்கு மறுத்த இளைஞருக்கு 5 ஆண்டு சிறை

chennai court sentenced 5 years imprisonment youngster சென்னை அயனாவரத்தை சேர்ந்தவர் வேலாயுதம். இவரது மகன் தென்னரசு (வயது29). இவர், அதே பகுதியில் உள்ள ‘பீரோ’ விற்பனை நிறுவனத்தில் வேலை செய்தார். அப்போது, அந்த நிறுவனத்தின் உரிமையாளரின் உறவினர் ஷீலா என்ற (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இளம்பெண்ணை காதலித்தார். இதையடுத்து இரு வீட்டாரின் சம்மதத்துடன் கடந்த 2009-ம் ஆண்டு ஜூலை மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அப்போது 6 மாதத்துக்குள் இருவருக்கும் திருமணம் நடத்தி வைக்க வேண்டும் என்று இரு வீட்டாரும் முடிவு செய்தனர். இதற்கிடையில், ஆவடியில் உள்ள தன் சகோதரன் வீட்டுக்கு ஷீலாவை அழைத்துச் சென்று அங்கு அவருடன் தென்னரசு உடல் உறவுக் கொண்டார். இதன்பின்னர், அவரை திருமணம் செய்ய தென்னரசு மறுத்து விட்டார். பெரியவர்கள் பேச்சுவார்த்தை நடத்தியும், அவர் சம்மதிக்கவில்லை. இதையடுத்து, ஷீலா கொடுத்த புகாரின்…

Read More