குருகிராம்:செப்டம்பர் 14, 2018 அரியானா மாநிலம் மகேந்திரகார் மாவட்டத்தில் உள்ள குருகிராம் நகரில் வசிப்பவர் 19 வயது மாணவி . நல்லா படிக்கக்கூடிய அந்த பெண் சிபிஎஸ்இ தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றதற்காக ஜனாதிபதி விருது பெற்றவர். அந்த பெண் பயிற்சி முடித்துவிட்டு வீடு திரும்பும் வழியில் காரில் இருந்த 3 நபர்கள் கடத்தி ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்து சென்று இவர்களுடன் சிலரும் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக கூறப்படுகிறது .பிறகு பெண் சுயநினைவை இழக்க அவரை பேருந்து நிலையத்தில் கொண்டு வந்து விட்டு சென்றுள்ளனர்.பலாத்காரம் செய்தவர்கள் அதே ஊரை சேர்ந்தவர்கள் என தெரிவித்துள்ளார் பாதிக்கப்பட்ட பெண். பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை பல போலீஸ் நிலையங்களுக்குச் சென்றதாகவும் ஆனால் புகாரை வாங்க மறுத்த பிறகு காவல்துறை அலுவலரிடம் புகார் அளித்துள்ளதாக கூறி உள்ளார் என்று கூறப்படுகிறது.
Read MoreAuthor: Tamil News Online
புழல் சிறையில் டிவிக்கள் பறிமுதல்
சென்னை: 14th செப் 2018: சென்னையில் உள்ள புழல் சிறையில் இருக்கும் போலீஸ் பக்ருதீன் உள்ளிட்ட பயங்கரவாதிகள் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வருவதாக புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து சிறைத்துறை டி.ஐ.ஜி முருகேசன் புழல் சிறையில் இருக்கும் 24 உயர்மட்ட பாதுகாப்பு அறைகளில் திடீர் சோதனை நடத்தினார்என்றும் , அதில் முதல் வகுப்பு அறையில் 18 தொலைக்காட்சி பெட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றும், மேலும் 2 எப்எம்., வானொலிப்பெட்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Read Moreஆதார் தகவல்களை திருட சாஃப்ட்வேர் வெறும் ரூ.2,500 க்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது – மறுக்கும் ஆணையம்
ஆதாரை ஹேக்கிங் செய்ய பயன்படும் சாஃப்ட்வேர் வெறும் 2,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில மாதங்களாக சாஃப்ட்வேர் ஆய்வு செய்து ஆதார் விவரங்களின் பாதுகாப்பு உடைக்கப்படுவதை உறுதி செய்துள்ளதாக ஹஃபிங்டன்போஸ்ட் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. ஆதார் விவரங்களை பொதுமக்களிடம் இருந்து பெறும் மையங்கள் பயன்படுத்தும் சாப்ட்வேரை இந்த பேட்ச் மூலம் திருடலாம். மேலும், எந்த ஆதார் மையம் இந்த சாப்ட்வேரை பயன்படுத்துகிறது என்பதை தெரிந்துகொள்ள பயன்படுத்தப்படும் ஜிபிஎஸ் சேவையையும் இந்த பேட்ச் மூலம் செயல் இழக்க செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்த பேட்ச் மூலம், எந்த நாட்டில் உள்ளவர்களும், ஆதார் பாதுகாப்பை எளிதாக உடைக்க முடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் செய்திக்கு தனி நபர் அடையாள ஆணையம்(UIDAI) தன் ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளது. அதில், ஆதார் என்ரோல்மெண்ட்டை ஹேக் செய்ததாக கூறப்படும் செய்திகள்…
Read Moreதான் ஒரு டாக்டர் என கூறி அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி உள்ளார் போலி டாக்டர்!
கர்நாடக மாநிலம், பாகல்கோடு மாவட்டம், முத்ஹோல் என்ற பகுதியை சேர்ந்தவர் விகாஸ். இவர் கடந்த இரண்டரை ஆண்டுகளாக கடாக் மற்றும் சித்ரதுர்கா மாவட்டங்களில் உள்ள மூன்று அரசு மருத்துவமனைகளில், 36 பிரேத பரிசோதனை செய்துள்ளார். விகாஸ், பி.எஸ்சி., நர்சிங் படித்தவர். ஆனால், டாக்டர் விகாஸ் பாட்டீல் என்பவரின் சான்றிதழில் தனது போட்டோவை ஒட்டி, தான் ஒரு டாக்டர் என கூறி அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி உள்ளார். சமீபத்தில் தான் அவரை பற்றிய உண்மை தெரிய வந்தது. மாநில சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையினர் அளித்த புகாரின் பேரில் போலீசார், விகாசை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரிடம் விகாஸ் கூறுகையில்,’ என்னால் மற்ற டாக்டர்களை போல மக்களுக்கு சிகிச்சை அளிக்க முடியும். ஆனால், நான் பி.எஸ்சி., நர்சிங் படித்து இருந்ததால் தாழ்வு மனப்பான்மை தோன்றியது. எனவே தான்…
Read Moreகணவர் விவாகரத்து கேட்டு வழக்கு!. தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட பெண் போலீஸ்!.
சேலம் சூரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் கவுதமன். இவருடைய மனைவி புவனேஸ்வரி. இவர் அப்பகுதி காவல் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வந்துள்ளார். இவர்கள் இருவரும் திருமணமாகி ஒரு வருடம் மட்டுமே சேர்ந்து வாழ்ந்தனர். பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக அவர்கள் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.இதனையடுத்து கணவனை பிரிந்த புவனேஸ்வரி அவரது பெற்றோர் வீட்டில் தங்கியிருந்தார். இந்த நிலையில் திடீரென நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் புவனேஸ்வரி.தகவலறிந்த காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், கவுதமன் விவாகரத்து கேட்டு சேலம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். ஆனால் புவனேஸ்வரி கணவருடன் சேர்ந்து வாழ ஆசைப்பட்டுள்ளார். தான் சேர்ந்து வாழ ஆசை உள்ளதாக புவனேஸ்வரி, கவுதமனை சந்தித்து பேசியுள்ளார். ஆனால் அங்கு அவருக்கு அவமானம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இதனையடுத்து புவனேஸ்வரி எழுதி வைத்துள்ள கடிதத்தில், கணவருடன்…
Read More‘எய்ட்ஸ்’ சட்டம் அமலுக்கு வந்தது
‘எய்ட்ஸ்’ நோயால் பாதிக்கப்பட்டோருக்கு, கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றில் சம உரிமை அளிக்கும் வகையிலான புதிய சட்டம், அமலுக்கு வந்தது. எய்ட்ஸால் பாதிக்கப்பட்டோர், கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவ உதவி, வீடு வாடகைக்கு தருவது போன்றவற்றில் பாகுபாடு காட்டப்பட்டு, ஒதுக்கப்பட்டனர். அதை தடுக்கும் வகையில், புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டது. கடந்த ஆண்டு, ஏப்., 20ல் இதற்கு, ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார். இந்நிலையில், இந்த சட்டம் நேற்று முன்தினம் முதல் அமலுக்கு வந்தது. இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தின்படி, எய்ட்ஸால் பாதிக்கப்பட்டோருக்கு, கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றில் எந்தப் பாகுபாடும் காட்டக் கூடாது. அவ்வாறு பாகுபாடு காட்டுவது குற்றமாக கருதப்படும். இந்த சட்டத்தை அமல்படுத்தக் கோரி தொடரப்பட்ட ஒரு பொது நலன் வழக்கில், டில்லி உயர் நீதிமன்றம், சமீபத்தில் தீர்ப்பு அளித்தது. ‘சட்டம் நிறைவேற்றுவீர்கள்; ஆனால் அதை அமல்படுத்த மாட்டீர்களா?’ என,…
Read Moreலஞ்சமாக பாலியல் சேவைகளை அளிப்பது குற்றம் என ஊழல் தடுப்பு சட்டத்தில் திருத்தம்
இந்தியாவில் லஞ்சம் ரொக்க பணமா மட்டுமின்றி வீடு ,கார் ,வெளிநாடு என்று வேறு பல வழிகளிலும் கொடுக்கப்படுகிறது .அதேபோல் சில அதிகாரிகள் , பெண்களை பாலியல் தேவைக்கு அழைப்பதையும் ஒரு லஞ்ச முறையாக கடைப்பிடித்து வருகிறார்கள் . தற்போது இது ஒருவகையான லஞ்சம் என்று ஊழல் தடுப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. 30 வருடங்களுக்கு முன் கொண்டு வரப்பட்ட ஊழல் தடுப்பு சட்டம் 10க்கும் அதிகமான முறை திருத்தங்களை சந்தித்துள்ளது. இந்த நிலையில், தற்போது இதில் புதிய சட்ட திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி லஞ்சமாக பாலியல் சேவை அளிப்பதும், கேட்பதும் குற்றம் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு 7 வருடம் வரை சிறை தண்டனைஅளிக்கப்படும் என்றும் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் லஞ்சமாக வீடு வழங்குவது, உணவு வழங்குவது, வெளிநாட்டு மதுபானம் வழங்குவது, வெளிநாடு அழைத்து செல்வது ஆகியவையும்…
Read More