தேசிய கோவிட்-19 மேலாண்மை நெறிமுறையை உருவாக்க ஐக்கிய செவிலியர் சங்கம் உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளது

டெல்லி: கோவிட் -19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க முன்னணியில் பணிபுரியும் செவிலியர்கள் மற்றும் துணை மருத்துவ ஊழியர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை வலியுறுத்தி ஐக்கிய செவிலியர் சங்கம் (யு.என்.ஏ) உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது.சர்வதேச அளவில் சுகாதாரப் பணியாளர்களின் உரிமைகள், பாத்திரங்கள் மற்றும் பொறுப்புகளை தரப்படுத்துவதற்கான இடைக்கால வழிகாட்டலை உலக சுகாதார அமைப்பு ஏற்கனவே வெளியிட்டுள்ளது என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அதற்காக ஒரு தேசிய நெறிமுறையை உருவாக்க இந்திய அரசு தவறிவிட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

பூனைக்கு உணவு வாங்குவதற்கு பாஸ் வழங்க மறுத்த கேரள காவல்துறை மீது வழக்கு

கொச்சி: கோவிட் -19 பூட்டுதலுக்கு மத்தியில் வளர்ப்பு பூனைக்கு உணவு வாங்குவதற்கு ‘பாஸ்’ வழங்க கேரள காவல்துறை மறுத்ததால் பூனை உரிமையாளர் கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.விலங்குகள் மீதான கொடுமையைத் தடுக்கும் சட்டத்தின் 3 மற்றும் 11 பிரிவுகளின் கீழ் வளர்க்கப்படும் விலங்குகளுக்கு உணவு மற்றும் தங்குமிடம் பெற உரிமை உள்ளதாக மனுதாரர் தெரிவித்தார்.நீதிபதிகள் ஏ கே ஜெயசங்கரன் நம்பியார் மற்றும் ஷாஜி பி சாலி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இந்த மனுவை காணொளிக் கலந்துரையாடல் மூலம் திங்கள்கிழமை பரிசீலிக்கும்.

Read More

சித்த மருந்து மூலம் சிகிச்சையளிப்பதை தொழில்நுட்பக் குழு பரிசீலிக்க வேண்டும் -சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: பி.ஏ. ஜோசப் என்பவர் கபாசுரா கஷாயம் எனப்படும் சித்த மருந்து மூலம் கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.மனு நீதிபதி டாக்டர் ஜஸ்டிஸ் வினீத் கோத்தாரி மற்றும் நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் ஆகியோர் அடங்கிய பிரிவு அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.மனுவை விசாரித்த நீதிபதிகள் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு கபாசுரா கஷாயம் எனப்படும் மருந்து மூலம் சிகிச்சையளிப்பதை பரிசீலிக்க மாநில சுகாதார செயலாளர் தலைமையில் தொழில்நுட்பக் குழுவுக்கு உத்தரவு.

Read More

பத்தாம் வகுப்பு மாநில வாரிய தேர்வுகள் காலவரையின்றி ஒத்திவைக்க உத்தரவு-தெலுங்கானா உயர்நீதிமன்றம்

ஹைதராபாத்:தெலுங்கானா மாநிலத்தில் பத்தாம் வகுப்பு மாநில வாரிய தேர்வு மார்ச் 31 முதல் ஏப்ரல் 6 வரை நடத்த திட்டமிடப்பட்டது.ஹைதராபாத்தை சேர்ந்த ஒருவர் பத்தாம் வகுப்பு மாநில வாரிய தேர்வுகளை ஒத்திவைக்க கோரி தெலுங்கானா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.அந்த மனுவில் கோவிட் -19 தொற்றுநோய் தொடர்பாக ஆலோசனைகள் வழங்கப்பட்ட போதிலும் மாநில வாரிய தேர்வுகளை ஒத்திவைக்கவில்லை.மாநில அதிகாரிகள்,சுகாதார மற்றும் கல்வித் துறைகள் அரசியலமைப்பின் 21 வது பிரிவின் கீழ் மாணவர்களின் உரிமைகளை மீறுகின்றன என்று தெரிவித்தார்.இந்த மனு நீதிபதி எம்.எஸ்.ராமச்சந்திர ராவ் மற்றும் நீதிபதி கே லட்சுமன் ஆகியோர் அடங்கிய பிரிவு அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.மனுவை விசாரித்த நீதிபதிகள் கோவிட் -19 தொற்றுநோய் வரவிருக்கும் அச்சுறுத்தல் குறையும் வரை மாநிலத்தில் 10 ஆம் வகுப்பு வாரிய தேர்வுகளை காலவரையின்றி ஒத்திவைக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Read More

கோவிட் -19 சிகிச்சைக்காக சர்பாசி சட்டத்தின் கீழ் இணைக்கப்பட்ட மருத்துவமனையை திறக்க ஆந்திர உயர்நீதிமன்றம் உத்தரவு

அமராவதி: கோவிட் -19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக சர்பாசி சட்டத்தின் கீழ் இணைக்கப்பட்ட ஒரு தனியார் மருத்துவமனையை திறக்க ஆந்திர மாநில உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.சிண்டிகேட் வங்கியால் தொடங்கப்பட்ட குண்டூரில் உள்ள பூர்ண சாய் மருத்துவமனைகளுக்கு எதிரான ஏல நடவடிக்கைகள் தொடர்பாக தலைமை நீதிபதி ஜே கே மகேஸ்வரி மற்றும் நீதிபதி எம் சத்யநாராயண மூர்த்தி ஆகியோர் அடங்கிய பிரிவு அமர்வு இந்த உத்தரவை நிறைவேற்றியது. மருத்துவமனையை மூடுவதற்கு பதிலாக, மருத்துவ வசதிகள் மற்றும் மருத்துவமனையில் கிடைக்கும் ஊழியர்களை மருத்துவ அவசரநிலையை கருத்தில் கொண்டு பயன்படுத்தப்படலாம் என்று மனுதாரர்கள் தானாக முன்வந்து கேட்டுக்கொண்டனர்.கோவிட் -19 நோயாளிகளுக்கு மட்டுமே இந்த மருத்துவமனையை அரசு பயன்படுத்த வேண்டும் என்பது இங்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது என்று தலைமை நீதிபதி ஜே கே மகேஸ்வரி மற்றும் நீதிபதி எம் சத்யநாராயண மூர்த்தி ஆகியோர் அடங்கிய…

Read More

காவல்துறை நடுநிலையான அணுகுமுறையை கையாள வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை:கோவிட் 19 தொற்றை தடுக்க 144 தடை உத்தரவு தற்போது நடைமுறையில் உள்ளது. அரசு அத்தியாவசிய பொருட்களை விற்கவும், வாங்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் கடுமையாக நடந்து கொள்வதாக சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் எம்.எல்.ரவி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்தார். மனு நீதிபதிகள் வினித் கோத்தாரி மற்றும் சுரேஷ் குமார் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.இதுவரை காவல்துறையினர் எந்த ஒரு விதிமுறைகளையும் மீறவில்லை,மேலும் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 17 ஆயிரத்து 118 வழக்குகள் பதியபட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.வீடியோ அழைப்பு மூலம் மனுவை விசாரித்த நீதிபதிகள் வினித் கோத்தாரி மற்றும் சுரேஷ் குமார் அடங்கிய அமர்வு காவல்துறையினரின் நடவடிக்கையால் தனி மனிதனின் உரிமை எந்த விதத்திலும் பாதிக்ககூடாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.

Read More

உச்ச நீதிமன்ற நீதிபதி என்.வி.ரமணா கோவிட் -19 நிவாரண நிதியாக ரூ .3 லட்சம் நன்கொடை

டெல்லி: உச்சநீதிமன்ற நீதிபதி என்.வி.ரமணா சனிக்கிழமை பிரதமர் நிவாரண நிதி, ஆந்திர முதலமைச்சரின் நிவாரண நிதி மற்றும் தெலுங்கானா முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு காசோலைகள் மூலம் தலா ஒரு லட்சம் ரூபாய் நன்கொடை அளித்தார். காசோலைகள் ஆந்திர மற்றும் தெலுங்கானா பவான்களின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. உச்சநீதிமன்றத்தின் இரண்டாவது மூத்த நீதிபதி, பொது மக்களுக்கு அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களைக் கடைப்பிடிக்கவும், முறையான நடவடிக்கைகளை எடுக்கவும், சமூக தொலைதூர முறையைப் பின்பற்றவும் கோவிட் – 19 க்கு எதிராக திறம்பட போராட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

Read More

ஆதரவற்ற பெண்ணுக்கு ரூ .4 லட்சம் செலுத்துமாறு இறந்த கணவரின் குடும்பத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

ஆதரவற்ற பெண்ணுக்கு ரூ .4 லட்சம் செலுத்துமாறு இறந்த கணவரின் குடும்பத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு டெல்லி: ஒரு ஆதரவற்ற மற்றும் வீடற்ற பெண் உச்ச நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி மனுதாக்கல் செய்தார்.அந்த மனுவில் கணவர் இறந்து விட்டதாகவும் , அவர் ஒரு விருந்தினர் மாளிகையில் வசித்து வருவதாகவும் தெரிவித்தார். இப்போது அவர் விருந்தினர் மாளிகையில் இருந்து வெளியேற வேண்டியிருந்தது என்று தெரிவித்தார். எதிர்மனுதாரரின் வழக்கறிஞர் பாலாஜி சீனிவாசன் அந்த பெண் ஒரு தொடர் மனுதாரர் என்று வாதிட்டார், இடைக்கால நிவாரணத்திற்காக பல அற்பமான விண்ணப்பங்களை தாக்கல் செய்து அனைத்து மன்றங்களிலும் தோற்றார் என்று தெரிவித்தார். இந்த மனு நீதிபதிகள் டி ஒய் சந்திரசூட் மற்றும் சூர்யா காந்த் ஆகியோர் அடங்கிய பிரிவு அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.மனுவை விசாரித்த நீதிபதிகள் அந்த பெண்ணுக்கு ரூ. 4 லட்சம் நிதி உதவி வழங்க இறந்த கணவரின் குடும்பத்திற்கு உத்தரவிட்டனர்.

டெல்லி: ஒரு ஆதரவற்ற மற்றும் வீடற்ற பெண் உச்ச நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி மனுதாக்கல் செய்தார்.அந்த மனுவில் கணவர் இறந்து விட்டதாகவும் , அவர் ஒரு விருந்தினர் மாளிகையில் வசித்து வருவதாகவும் தெரிவித்தார். இப்போது அவர் விருந்தினர் மாளிகையில் இருந்து வெளியேற வேண்டியிருந்தது என்று தெரிவித்தார். எதிர்மனுதாரரின் வழக்கறிஞர் பாலாஜி சீனிவாசன் அந்த பெண் ஒரு தொடர் மனுதாரர் என்று வாதிட்டார், இடைக்கால நிவாரணத்திற்காக பல அற்பமான விண்ணப்பங்களை தாக்கல் செய்து அனைத்து மன்றங்களிலும் தோற்றார் என்று தெரிவித்தார். இந்த மனு நீதிபதிகள் டி ஒய் சந்திரசூட் மற்றும் சூர்யா காந்த் ஆகியோர் அடங்கிய பிரிவு அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.மனுவை விசாரித்த நீதிபதிகள், அந்த பெண்ணுக்கு ரூ. 4 லட்சம் நிதி உதவி வழங்க இறந்த கணவரின் குடும்பத்திற்கு உத்தரவிட்டனர்.

Read More

கொரோன பரவலைத் தடுக்க நீதிமன்றத்தில் சிறை கைதிகள் நேரில் ஆஜராவதை தவிர்க்கவும் – உச்சநீதிமன்றம்

டெல்லி: கொரோன பரவலைத் தடுக்க , விசாரணைக்கு உட்பட்ட கைதிகளை நீதிமன்றங்களுக்கு முன் ஆஜர்படுத்தக்கூடாது என்றும், வீடியோ கான்பரன்சிங்யை பின்பற்றப்பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் திங்களன்று உத்தரவிட்டது. “வெளியில் பரவுவதற்கான சாத்தியத்தை கருத்தில் கொண்டு, நீதிமன்றங்களுக்கு முன்பாக அனைத்து கைதிகளை நேரில் ஆஜராவதை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும், மேலும் வீடியோ கான்பரன்சிங்யை பின்பற்றப்பட வேண்டும்” என்று இந்திய தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமர்வு உத்தரவிட்டது.

Read More

முன்னாள் முதல்வர் பாரூக் அப்துல்லாவின் தடுப்புக்காவலை ஜம்மு காஷ்மீர் அரசு ரத்து செய்கிறது

புதுடெல்லி: முன்னாள் ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் பாரூக் அப்துல்லாவுக்கு எதிராக வழங்கப்பட்ட தடுப்புக்காவல் உத்தரவை ஜம்மு காஷ்மீர் அரசு வெள்ளிக்கிழமை ரத்து செய்தது.தேசிய மாநாட்டுத் தலைவர் ஜம்மு காஷ்மீர் பொது பாதுகாப்புச் சட்டத்தின்படி செப்டம்பர் 15, 2019 அன்று மூன்று மாதங்கள் காவலில் வைக்கப்பட்டார்.டிசம்பர் 13 ம் தேதி, தடுப்புக்காவல் உத்தரவு மேலும் மூன்று மாதங்கள் நீட்டிக்கப்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமை ஜம்மு காஷ்மீர் அரசாங்கத்தின் முதன்மை செயலாளர் உத்தரவு ஒன்றை பிறப்பித்தார் .அந்த உத்தரவில் முன்னாள் ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் பாரூக் அப்துல்லாவுக்கு எதிராக வழங்கப்பட்ட தடுப்புக்காவல் உத்தரவை ரத்து செய்தது.

Read More