டெல்லி: ஒரு ஆதரவற்ற மற்றும் வீடற்ற பெண் உச்ச நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி மனுதாக்கல் செய்தார்.அந்த மனுவில் கணவர் இறந்து விட்டதாகவும் , அவர் ஒரு விருந்தினர் மாளிகையில் வசித்து வருவதாகவும் தெரிவித்தார். இப்போது அவர் விருந்தினர் மாளிகையில் இருந்து வெளியேற வேண்டியிருந்தது என்று தெரிவித்தார். எதிர்மனுதாரரின் வழக்கறிஞர் பாலாஜி சீனிவாசன் அந்த பெண் ஒரு தொடர் மனுதாரர் என்று வாதிட்டார், இடைக்கால நிவாரணத்திற்காக பல அற்பமான விண்ணப்பங்களை தாக்கல் செய்து அனைத்து மன்றங்களிலும் தோற்றார் என்று தெரிவித்தார். இந்த மனு நீதிபதிகள் டி ஒய் சந்திரசூட் மற்றும் சூர்யா காந்த் ஆகியோர் அடங்கிய பிரிவு அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.மனுவை விசாரித்த நீதிபதிகள், அந்த பெண்ணுக்கு ரூ. 4 லட்சம் நிதி உதவி வழங்க இறந்த கணவரின் குடும்பத்திற்கு உத்தரவிட்டனர்.
Read MoreCategory: நீதி சிறகுகள்
நீதி சிறகுகள்
Law news
கொரோன பரவலைத் தடுக்க நீதிமன்றத்தில் சிறை கைதிகள் நேரில் ஆஜராவதை தவிர்க்கவும் – உச்சநீதிமன்றம்
டெல்லி: கொரோன பரவலைத் தடுக்க , விசாரணைக்கு உட்பட்ட கைதிகளை நீதிமன்றங்களுக்கு முன் ஆஜர்படுத்தக்கூடாது என்றும், வீடியோ கான்பரன்சிங்யை பின்பற்றப்பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் திங்களன்று உத்தரவிட்டது. “வெளியில் பரவுவதற்கான சாத்தியத்தை கருத்தில் கொண்டு, நீதிமன்றங்களுக்கு முன்பாக அனைத்து கைதிகளை நேரில் ஆஜராவதை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும், மேலும் வீடியோ கான்பரன்சிங்யை பின்பற்றப்பட வேண்டும்” என்று இந்திய தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமர்வு உத்தரவிட்டது.
Read Moreமுன்னாள் முதல்வர் பாரூக் அப்துல்லாவின் தடுப்புக்காவலை ஜம்மு காஷ்மீர் அரசு ரத்து செய்கிறது
புதுடெல்லி: முன்னாள் ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் பாரூக் அப்துல்லாவுக்கு எதிராக வழங்கப்பட்ட தடுப்புக்காவல் உத்தரவை ஜம்மு காஷ்மீர் அரசு வெள்ளிக்கிழமை ரத்து செய்தது.தேசிய மாநாட்டுத் தலைவர் ஜம்மு காஷ்மீர் பொது பாதுகாப்புச் சட்டத்தின்படி செப்டம்பர் 15, 2019 அன்று மூன்று மாதங்கள் காவலில் வைக்கப்பட்டார்.டிசம்பர் 13 ம் தேதி, தடுப்புக்காவல் உத்தரவு மேலும் மூன்று மாதங்கள் நீட்டிக்கப்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமை ஜம்மு காஷ்மீர் அரசாங்கத்தின் முதன்மை செயலாளர் உத்தரவு ஒன்றை பிறப்பித்தார் .அந்த உத்தரவில் முன்னாள் ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் பாரூக் அப்துல்லாவுக்கு எதிராக வழங்கப்பட்ட தடுப்புக்காவல் உத்தரவை ரத்து செய்தது.
Read Moreபணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் என்பது பெண்களின் அடிப்படை உரிமைகளுக்கு அவமரியாதை- உச்ச நீதிமன்றம்
டெல்லி :இந்தூர் கிளையில் ஸ்கேல் IV இல் தலைமை மேலாளர் பதவியை வகித்த பஞ்சாப் மற்றும் சிந்து வங்கியின் பெண் ஊழியர், ஜபல்பூர் மாவட்டத்தில் உள்ள சர்சாவாவில் உள்ள கிளைக்கு மாற்றப்பட்டார்.தன்னிடம் நடந்த முறைகேடுகள் மற்றும் ஊழல் பற்றிய அறிக்கைகள் காரணத்தால் இடமாற்ற உத்தரவை சந்தித்ததாக வங்கியின் பெண் ஊழியர் தெரிவித்தார்.பெண் ஊழியர் இடமாற்ற உத்தரவை ரத்து செய்ய கோரி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.உயர் நீதிமன்றம் இடமாற்ற உத்தரவை ரத்து செய்தது.பெண் வங்கி ஊழியரின் இடமாற்றத்தை ரத்து செய்த உயர் நீதிமன்ற தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.
Read Moreஉயர்நீதிமன்ற நீதிபதிகளின் கூடுதல் இடமாற்றங்களை உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை
டெல்லி :உச்சநீதிமன்ற கொலீஜியம் 2020 மார்ச் 5 ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் உத்தரகண்ட் உயர்நீதிமன்ற நீதிபதி திரு அலோக் சிங்கை அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற பரிந்துரைத்துள்ளது.கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி திரு. எஸ்.என். சத்யநாராயணாவை பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்திற்கு.பரிந்துரைத்துள்ளது. பிப்ரவரி மாதம் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதரை பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்திற்கும், மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி ரஞ்சித் மோர் மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கும், கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி நீதிபதி ரவி விஜயகுமார் மாலிமத்தை உத்தரகண்ட் உயர் நீதிமன்றத்திற்கும் மாற்ற பிப்ரவரி மாதம் உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்தது.
Read Moreமோசடி வழக்கில் முன்னால் அதிமுக எம்பி கே.என் ராமச்சந்திரன் குற்றவாளி – சிறப்பு நீதிமன்றம்
சென்னை :அதிமுகவின் ஸ்ரீபெரும்புதுார் எம்.பியாக கடந்த 2014-19 வரை இருந்தவர் கே.என்.ராமச்சந்திரன். சக்தி இன்ஜினியரிங் கல்லுாரியின் தலைவராக ராமச்சந்திரனின் மகன் ராஜசேகரன் உள்ளார். கல்லுாரியை விரிவாக்கம் செய்ய ராமச்சந்திரன் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் மேலாளராக இருந்த தியாகராஜன் மூலம் விண்ணப்பத்தை விதிகளுக்குட்பட்டு, முறையாக கையாளாமல் 20 கோடி கடன் பெற்றுள்ளார் .இதற்கு லஞ்சமாக தியாகராஜன் குடும்பம் அமெரிக்கா செல்வதற்குமான விமான டிக்கெட் தொகை 2.69 லட்சத்தை அறக்கட்டளையிலிருந்து ராமச்சந்திரன் செலுத்தியதாக கூறப்படுகிறது. இந்த புகாரின் அடிப்படையில் கடந்த 2015ம் ஆண்டு சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர்.வங்கி மேலாளர் மற்றும் ராமச்சந்திரன் உட்பட நான்கு பேர் மீது சிபிஐ அதிகாரிகள் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு சென்னை கலெக்டர் வளாகத்தில் உள்ள எம்.பி, எம்.எல்.ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றம் முன் விசாரணைக்கு வந்தது .வழக்கை…
Read Moreதிருவேற்காடு கோவிலுக்கு செல்லும் வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் வசூலிக்க இடைக்கால தடை: சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை :திருவேற்காடு கருமாரியம்மன் கோவிலுக்கு செல்லும் வாகனத்திற்கு நுழைவு கட்டணத்தை ஒப்பந்தம் அடிப்படையில் வசூலித்து வந்தனர்.மேலும் 3 ஆண்டுகள் வசூலிப்பதற்கான அறிவிப்பாணையை கடந்த பிப்ரவரி13 ம் தேதி திருவேற்காடு நகராட்சி ஆணையர் வெளியிட்டிருந்தார்.நுழைவு கட்டணம் வசூலிக்க நகராட்சி ஆணையர் பிறப்பித்த அறிவிப்பாணை ரத்து செய்து, நுழைவு கட்டணம் வசூலிக்க தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பெடரேஷன் ஆஃப் கன்சூயூமர் ஆர்கனைசேஷன் என்ற அமைப்பின் பொது செயலாளர் பாலசுப்பிரமணியன் மனு தாக்கல் செய்தார். மனு நீதிபதிகள் எம் எம் சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது .மனுவை விசாரித்த நீதிபதிகள் எம் எம் சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு நுழைவுக் கட்டணம் வசூலிக்க இடைக்கால தடை விதித்தனர். இதற்கு பதில் அளிக்க நகராட்சி நிர்வாகம் ,குடிநீர் வழங்கல் துறை…
Read Moreபாலியல் சுரண்டல் வழக்கில் சின்மயானந்திற்கு வழங்கப்பட்ட ஜாமீனில் தலையிட உச்சநீதிமன்றம் மறுப்பு
டெல்லி :பாலியல் சுரண்டல் வழக்கில் சின்மயானந்திற்கு ஜாமீன் வழங்கிய அலகாபாத் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ஷாஜகான்பூர் சட்ட மாணவர் தாக்கல் செய்த சிறப்பு விடுப்பு மனுவை உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அசோக் பூஷண் மற்றும் நவின் சின்ஹா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் மனு விசாரணைக்கு வந்தது .மனுவை விசாரித்த நீதிபதிகள் அசோக் பூஷண் மற்றும் நவின் சின்ஹா ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த உத்தரவில் தலையிட எந்த காரணமும் இல்லை .மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் சாட்சியங்களை சேதப்படுத்தவோ அல்லது சாட்சிகளை அச்சுறுத்தவோ மாட்டார்கள் என்பதை உறுதிப்படுத்த நீதிமன்றம் போதுமான நிபந்தனைகளை விதித்துள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
Read Moreஇளையராஜா – பிரசாத் ஸ்டூடியோ இடையிலான வழக்கை விரைவில் முடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை:பிரசாத் ஸ்டூடியோவில் இளையராஜாவின் இசை கூடம் உள்ளது .அங்கு 35 வருடங்களாக இசையமைத்து வந்தார்.சில மாதங்களுக்கு முன்பு இசை கூடத்தை காலி செய்யும்படி பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகம் இளையராஜாவை வற்புறுத்தியது.இட உரிமை தொடர்பாக இரு தரப்புக்கும் இடையிலான வழக்கு ஏற்கனவே 17வது உதவி நகர சிவில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.நிலுவையில் உள்ள வழக்கை விரைந்து முடிக்க உத்தரவிட கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் இளையராஜா மனுதாக்கல் செய்தார்.மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் 2 வாரங்களில் நிலுவையில் உள்ள வழக்கை முடிக்க உத்தரவிட்டது.
Read Moreஅரசியல்வாதிகளுக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்வது குறித்து முடிவு செய்யுமாறு டெல்லி உயர்நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவு
டெல்லி: பாஜக தலைவர்கள் அனுராக் தாக்கூர், பர்வேஷ் வர்மா, கபில் உள்ளிட்ட அரசியல்வாதிகள் வெறுக்கத்தக்க உரைகள் தொடர்பாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்வது குறித்து டெல்லி உயர்நீதிமன்றம் புதன்கிழமை டெல்லி காவல்துறை கமிஷனருக்கு உத்தரவிட்டது. டெல்லி காவல்துறையில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவின் கடுமையான எதிர்ப்பையும் மீறி நீதிபதிகள் எஸ் முரளிதர் மற்றும் தல்வந்த் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை நிறைவேற்றியது.
Read More