சென்னை:தேசிய பசுமைத் தீர்பாயத்தில் சென்னையில் உள்ள கூவம், அடையாறு நதிகளையும், பக்கிங்ஹாம் கால்வாய் உள்ளிட்ட நீர்நிலைகளையும் பராமரிக்க தமிழக அரசு தவறிவிட்டதாக கூறி ஜவஹர்லால் சண்முகம் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார்.இந்த மனுவை விசாரித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கடந்த பிப்ரவரி மாதம் பொதுப்பணித்துறைக்கு 100 கோடி ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டது.இந்த உத்தரவை எதிர்த்து தமிழக பொதுப்பணித்துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனு நீதிபதிகள் சுப்பையா மற்றும் சரவணன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தமிழக அரசுக்கு 100 கோடி ரூபாய் அபராதம் விதித்ததை தடை விதிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.
Read MoreCategory: சென்னை சிறகுகள்
நிர்ணயிக்கப்பட்ட கல்வி தகுதியை விட கூடுதல் தகுதியுடையவர் பணி வழங்கும்படி உரிமை கோர முடியாது- சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை:ஆர்.லக்ஷ்மி பிரபா என்பவர் மெட்ரோ ரயில் நிறுவனம் ரயில் ஓட்டுனர் பணிக்கு 2013ஆம் ஆண்டு விண்ணப்பித்து தேர்வானார். ஆனால் நிர்ணயிக்கப்பட்ட கல்வித்தகுதியை விட அதிக தகுதி உள்ளதால் அவரை விலக்குவதாக 2013 ஜூலை 31ம் தேதி மெட்ரோ ரயில் நிறுவனம் உத்தரவிட்டது. இப்பணிக்கு அடிப்படை கல்வி தகுதியாக டிப்ளமோ படிப்பு நிர்ணயிக்கப்பட்டிருந்தது, ஆனால் அவர் பி.இ. படிப்பை முடித்திருந்ததால் மெட்ரோ ரயில் நிறுவனம் இந்த முடிவை எடுத்திருந்தது.ஆர்.லக்ஷ்மி பிரபா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை நீதிபதி எஸ்.வைத்தியநாதன் விசாரித்தார். நீதிபதி கூடுதல் தகுதியுடையவர் பணி நியமனம் கோர உரிமையில்லை என கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.
Read Moreஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர்களை மறுநியமனம் செய்வதை எதிர்த்து வழக்கு: உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
சென்னை: தமிழகத்தில் 2896 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள் காலியாக உள்ளது.இந்த காலி இடங்களில் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர்களை நியமிக்க அரசாணை வெளியிடப்பட்டது. வெளியிட்ட அரசாணையை ரத்து செய்ய கோரி தமிழ்நாடு கிராம நிர்வாக சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.இந்த மனு நீதிபதி வி.எம்.வேலுமணி முன் விசாரணைக்கு வந்தது.மனுவை விசாரித்த நீதிபதி தமிழக பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை செயலாளர் ,வருவாய்த்துறை செயலாளர்,வருவாய் நிறுவாகத்துறை ஆணையர் ஆகியோர் 3 வாரத்துக்குள் பதில் அளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டார் நீதிபதி.
Read Moreமகள் திருமண ஏற்பாட்டுக்காக நளினிக்கு ஒரு மாதம் பரோல்:சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை:ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள நளினி தனது மகளின் திருமணத்திற்காக 6 மாதம் பரோல் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார் .இந்த மனு நீதிபதிகள் எம்.எம் சுந்தரேஷ் மற்றும் நிர்மல் குமார் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஒரு மாதம் பரோல் வழங்கி உத்தரவிட்டனர்.
Read Moreமு.க.ஸ்டாலின் மீது அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை – சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை:கடந்த ஜனவரி மாதம் 20ஆம் தேதி சோழிங்கநல்லூரில் நடைபெற்ற திருமண விழாவில் மு.க.ஸ்டாலின், தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் பற்றி அவதூறாக பேசியதாக மு.க.ஸ்டாலின் மீது செங்கல்பட்டு நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கில் ஸ்டாலின் நாளை ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த அவதூறு வழக்கிற்கு தடை விதிக்க கோரி மு.க.ஸ்டாலின் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் அரசு வழக்கறிஞர் வழக்கு தொடர முடியாது என்று குறிப்பிட்டிருந்தார். மனுவை பரிசீலித்த சென்னை உயர்நீதிமன்றம், செங்கல்பட்டு நீதிமன்றத்தில் தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை விதித்தது.
Read Moreவைகோ மீதான தேச துரோக வழக்கு ஜூலை 5ஆம் தேதி தீர்ப்பு: சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை: இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக கூறி அவர் மீது ஆயிரம்விளக்கு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.அவர் இந்திய அரசுக்கு எதிராகவும் , விடுதலைப்புலிகளுக்கு ஆதரிக்கவும் பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை 2009ல் ஆயிரம்விளக்கு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.இந்த வழக்கின் தீர்ப்பு வருகின்ற ஜூலை மாதம் ஐந்தாம் தேதி என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Read Moreசென்னை மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய அரசின் நடவடிக்கை குறித்து சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி
சென்னை: வேலூரில் கழிவுநீர் கால்வாயில் கலப்பதை எதிர்த்து பொது நல வழக்கு தொடரப்பட்டது.நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் அடங்கிய அமர்வு முன்பு அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.அப்போது சென்னை புறநகர் பகுதிகளில் சட்டவிரோதமாக நிலத்தடி நீர் எடுப்பதை நீதிபதிகள் சுட்டிக்காட்டினார்கள். இது சம்மந்தமாக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று கேள்வி எழுப்பப்பட்டது.கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின் தற்போதைய நிலை குறித்தும் கேட்கப்பட்டது.விவரங்களை வரும் 17ம் தேதிக்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர்.
Read Moreமெரினாவில் போராட்டம் நடத்த அனுமதி குறித்து அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்
சென்னை :மெரினா கடற்கரையில் போராட்டங்கள் முன்பு நடந்துள்ளது.சென்னையை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார் .அந்த மனுவில் அரசியல் கட்சிகள், சங்கங்கள், சில அமைப்புகள் மெரினா கடற்கரையை போராட்டங்களுக்காக தோ்வு செய்கின்றனா். இதனால் போக்குவரத்து மற்றும் சுற்றுலா வருபவர்கள் பாதிக்கப்படுவதாக குறிப்பிட்டிருந்தார்.2018 செப்டம்பா் 3ம் தேதி மெரினாவில் போராட்டம் நடத்த உயா் நீதிமன்றம் தடை விதித்ததையும் குறிப்பிட்டிருந்தாா். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது மெரினாவில் போராட்டங்கள் நடத்த அனுமதி கோாியது தொடா்பாகவோ, நடத்தப்பட்டது தொடா்பாகவோ எந்த ஆதாரங்களையும் தாக்கல் செய்யவில்லை .இதனால் ஹரிகிருஷ்ணனின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்
Read Moreதமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு தடையில்லை – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி
சென்னை:தமிழகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு வருகின்ற முதல் தாள் ஜூன் 8-ம் தேதியும் மற்றும் இரண்டாம் தாள் 9-ம் தேதியும் நடைபெறுகிறது. விண்ணப்பதாரர்கள் இந்த தேர்வுக்கு தயாராகி வருகின்றனர்.இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த தேர்வுக்கு தடை விதிக்க கோரி பரமானந்தம் மற்றும் சக்திவேல் மனுதாக்கல் செய்தனர்.அந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது.மனுதாரர் தரப்பில் குறைந்தபட்சம் மற்றும் அதிகபட்ச மதிப்பெண் நிர்ணயிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. அரசுத் தரப்பு வழக்கறிஞர் வாதாடிய போது தேர்வு எழுதுவதற்காக லட்சக்கணக்கானோர் காத்திருப்பதால் தேர்வுக்கு தடை விதிக்கக் கூடாது என்று தெரிவித்தார். கேள்வித்தாள் அமைவது குறித்து விண்ணப்பதாரர்கள் தீர்மானிக்க முடியாது என்று தெரிவித்தார்.அரசு தரப்பு விளக்கத்தை ஏற்று மனுதாரர் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
Read Moreவிதிமீறி கட்டப்பட்ட பில்ரோத் மருத்துவமனை கட்டிடத்தை இடிக்கத் தடையில்லை: உயர் நீதிமன்றம்
சென்னை:அமைந்தகரையில் உள்ள பில்ரோத் தனியார் மருத்துவமனை விதிமீறி 5 மாடி கட்டிடங்கள் கட்டப்பட்டதாக வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் கட்டப்பட்ட 5 மாடிகளுக்கும் சீல் வைக்குமாறு சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டது. 2006 ஆம் ஆண்டுக்கு முன்பே கட்டிடம் கட்டப்பட்டதால், அந்த கட்டிடங்களை வரைமுறைப்படுத்தக்கோரி தனியார் மருத்துவமனை தரப்பில் மனுதாக்கல் செய்துள்ளதாக கூறியுள்ளது.அந்த மனு நிலுவையில் இருப்பதால், நடவடிக்கை எடுக்க தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இந்த வழக்கு நீதிபதிகள் ஆதிகேசவலு அமர்வு முன்பு விசராணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் அப்போது வரைமுறைப்படுத்தக்கோரி விண்ணப்பித்திருந்தாலும், விதிமீறல் கட்டடத்தின் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு தடை இல்லை என்று தெரிவித்தனர்.
Read More