சென்னை :மெரினா கடற்கரையில் போராட்டங்கள் முன்பு நடந்துள்ளது.சென்னையை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார் .அந்த மனுவில் அரசியல் கட்சிகள், சங்கங்கள், சில அமைப்புகள் மெரினா கடற்கரையை போராட்டங்களுக்காக தோ்வு செய்கின்றனா். இதனால் போக்குவரத்து மற்றும் சுற்றுலா வருபவர்கள் பாதிக்கப்படுவதாக குறிப்பிட்டிருந்தார்.2018 செப்டம்பா் 3ம் தேதி மெரினாவில் போராட்டம் நடத்த உயா் நீதிமன்றம் தடை விதித்ததையும் குறிப்பிட்டிருந்தாா். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது மெரினாவில் போராட்டங்கள் நடத்த அனுமதி கோாியது தொடா்பாகவோ, நடத்தப்பட்டது தொடா்பாகவோ எந்த ஆதாரங்களையும் தாக்கல் செய்யவில்லை .இதனால் ஹரிகிருஷ்ணனின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்
மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதி குறித்து அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்
