சென்னை:தேசிய பசுமைத் தீர்பாயத்தில் சென்னையில் உள்ள கூவம், அடையாறு நதிகளையும், பக்கிங்ஹாம் கால்வாய் உள்ளிட்ட நீர்நிலைகளையும் பராமரிக்க தமிழக அரசு தவறிவிட்டதாக கூறி ஜவஹர்லால் சண்முகம் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார்.இந்த மனுவை விசாரித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கடந்த பிப்ரவரி மாதம் பொதுப்பணித்துறைக்கு 100 கோடி ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டது.இந்த உத்தரவை எதிர்த்து தமிழக பொதுப்பணித்துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனு நீதிபதிகள் சுப்பையா மற்றும் சரவணன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தமிழக அரசுக்கு 100 கோடி ரூபாய் அபராதம் விதித்ததை தடை விதிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.
தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தமிழக அரசுக்கு விதித்த 100 கோடி ரூபாய் அபராதத்தை தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு
![](https://www.tamilsiragugal.com/wp-content/uploads/2019/07/madras-high-court-new.jpg)