அரசு ஊதியத்தைத் திருப்பித் தர வேண்டும்! – முன்னாள் சட்டமன்ற உறுப்பினருக்கு நீதிமன்றம் உத்தரவு!

ஊதியத்தைத் திருப்பித் தர வேண்டும்! – முன்னாள் சட்டமன்ற உறுப்பினருக்கு நீதிமன்றம் உத்தரவு! உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, வேல்துரை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றது செல்லாது என நிரூபணம் ஆனதால், வேல்துரை தானே முன்வந்து பெற்ற ஊதியத்தை திரும்பி அளித்திருக்க வேண்டும் என்று நீதிபதி கூறியுள்ளார். தேர்தலில் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கப்பட்ட காங்கிரஸ் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். ஊதியமாக பெற்ற 21.58 லட்சம் ரூபாயை நான்கு வாரங்களில் அரசுக்கு திருப்பி அளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுடிருக்கிறது. கடந்த 2006-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில், திருநெல்வேலி மாவட்டம், சேரன்மாதேவி தொகுதியில், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர், வேல்துரை. அரசு ஒப்பந்ததாரராக இருந்து கொண்டே சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதாகவும், அவர் வெற்றி பெற்றதை செல்லாது என அறிவிக்கக் கோரியும்,…

Read More

லஞ்சம் வாங்கினால் ‘தூக்கு தண்டனை’ கொடுக்க வேண்டும் ; உயர் நீதிமன்றம் அதிருப்தி

மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை கிளை

மதுரை: ‘அரசாங்க சம்பளம் பெற்று, லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் மீது தேசத்துரோக வழக்கு தொடுத்து, துாக்கில் போட வேண்டும். மேலும் அவர்களுடைய சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும்’ என்று, உயர்நீதிமன்ற, மதுரைக் கிளை அதிருப்தியை வெளியிட்டது. மதுரை, சூர்யா நகர் பரணிபாரதி தாக்கல் செய்துள்ள பொதுநல மனு பின்வருமாறு: தமிழக மின் வாரியத்தில், 325 உதவிப் பொறியாளர்கள் பணியிடங்களுக்கு, 2018 டிச., 30ல் எழுத்து தேர்வு நடைபெற்றது. சென்னை அண்ணா பல்கலை, தேர்வு நடத்தியது. வினாத்தாள் வெளியானதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. அண்ணா பல்கலை விசாரணை நடத்தியது. பின், அரசின் இணையதளத்தில் வினாத்தாள், கீ பதில்களுடன் தேர்வு முடிவுகள் வெளியாகின. 1,575 பேர் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்டனர். நியமன உத்தரவுகள் வழங்கப்பட உள்ளன. வினாத்தாள் வெளியானது பற்றி, பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும். தேர்வு மற்றும்…

Read More

சட்டவிரோதமாக கைது செய்யும் நடவடிக்கை: மாவட்ட நீதிபதிகள் மற்றும் காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை!

சென்னை: அக்டோபர் 04, 2018 உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பதவி ஓய்வு பெறும் வயதை அதிகரிக்க வேண்டும் என்று மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகும் அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால் கூறியதாவது என்னவென்றால் தற்போது உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் பதவி ஓய்வு பெறும் வயது 65 ஆகவும் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது 62 ஆகவும் உள்ளது. வழக்குகளும் அதிக அளவில் உள்ளன. இதனால் திறமையான நீதிபதிகளின் சேவைகள் தொடரும் வகையில் அவர்களுடைய பணி ஓய்வு வயதை உயர்த்த வேண்டும். அதுமட்டும் இல்லாமல் நீதிபதிகளின் சம்பளத்தை இரண்டு அல்லது மூன்று மடங்காக உயர்த்த வேண்டும் , காரணம் என்னவென்றால் வழக்கறிஞர்கள் பெறும் வருமானத்தை விட நீதிபதிகளின் வருமானம் குறைவாக உள்ளது என்று கூறியுள்ளார் .

சட்டவிரோதமாக கைது செய்யும் விவகாரம்: மாவட்ட நீதிபதிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுககு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை! மாணவர் இக்குற்றத்தில் ஈடுபட்டார்களா என விசாரிக்காமல், சட்டவிதிகளை மீறி காவல் துறையினர் கைது செய்திருக்கிறார்கள். மேலும் அவர்களை சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கும் மாஜிஸ்திரேட்களுக்கு எதிரான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட தயங்காது என சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. செம்மரக் கடத்தல் வழக்கில் கடந்த 22-ம் தேதி கைது செய்யப்பட்ட மாநில அளவிலான பில்லியர்ட்ஸ் விளையாட்டு வீரரான பொறியியல் மாணவர், ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனு உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘இவ்வழக்கில் சம்பந்தப்பட்டவரை இரு சக்கர வாகனத்தில் அழைத்து வந்ததற்காக, மனுதாரர் கைது செய்யப்பட்டதாக, மனுதாரர் தரப்பில் வாதம் செய்யப்பட்டது. இதனை…

Read More

விதிமீறல் கட்டடங்களுக்கு சீல் வைக்க எதிர்ப்பு: நகராட்சி அலுவலகம் முற்றுகை

கொடைக்கானல்: உயர்நீதிமன்ற உத்தரவின்ப்படி கொடைக்கானலில் விதிமீறி கட்டிய கட்டடங்களுக்கு ‘சீல்’ வைத்து முடக்கும் நகராட்சி நிர்வாகத்தின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் முற்றுகையிட்டார்கள். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் 1993 ‘மாஸ்டர் பிளான்’ கட்டுமான வரைமுறைமீறி கட்டப்பட்ட கட்டடங்களை மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு படி கடந்த மாதம் நகராட்சி நிர்வாகத்தினர் 43 கட்டடங்களுக்கு ‘சீல்’ செய்து, மின் இணைப்பை துண்டித்தனர். மேலும் விதிமீறலுக்குட்பட்ட கட்டடங்களின் அறிக்கை நகராட்சியிடம் கோரப்பட்டது. இதில் விதிமீறி கட்டப்பட்ட கட்டடங்கள் 1,415, அவற்றை சீல் வைத்து மார்ச் 11 ம் தேதி அறிக்கையளிக்கவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.நேற்று காலை நகராட்சி கமிஷனர் முருகேசன் தலைமையில் நகரமைப்பு அலுவலர்கள் அடங்கிய ஐந்து குழுவினர், மின்வாரிய அதிகாரிகள், போலீஸ் பாதுகாப்புடன் விதிமீறல் கட்டடங்களுக்கு சீல் வைக்க ஆயத்தமாயினர்.தகவலறிந்த வணிகர் சங்கம் மற்றும் பொதுநலச்சங்கம், பாதிக்கப்பட்டோர்…

Read More

தோட்டாக்களுடன் விமானத்தில் ஏற முயன்ற எம்.எல்.ஏ. கைது

தோட்டாக்களுடன் விமானத்தில் ஏற முயன்ற எம்.எல்.ஏ. கைது டெல்லி:டெல்லி விமான நிலையத்தில் தோட்டாக்களை எடுத்துச்செல்ல அனுமதிக்க ஆவணங்கள் எதாவது இருக்கிறதா என விசாரித்தனர் . எதையும் அளிக்காததால் அவரை போலீசார் கைது செய்ததாக கூறப்படுகிறது.டெல்லி விமான நிலையத்தில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் எம்.எல்.ஏ. மொத்தம் பத்து தோட்டாக்களுடன் விமானத்தில் பயணிக்க முயன்றார். பீகார் மாநிலத்தில் உள்ள மதேபுரா தொகுதியின் எம்.எல்.ஏ. சந்திர சேகர் ஆவார் . அவர் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியைச் சேர்த்தவர். இவர் பிப்ரவரி 20ஆம் தேதி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்துள்ளார். அவர் பையில் 10 தோட்டாக்கள் இருப்பதை விமான நிலைய சோதனையில் கண்டு பிடித்தனர் . அந்த தோட்டாக்கள் அனைத்தும் 3.15 போர் ரகம் என்று தெரியவந்தது . இதனால் அவர் விமானத்தில் பயணிப்பதை அதிகாரிகள் தடுத்தனர் . தோட்டாக்களை எடுத்துச்செல்ல அனுமதி ஆவணங்கள் இருக்கிறதா என விசாரித்தனர் . ஏன் எடுத்து சென்றார் என்று தெரியவில்லை.

டெல்லி:டெல்லி விமான நிலையத்தில் தோட்டாக்களை எடுத்துச்செல்ல அனுமதிக்க ஆவணங்கள் எதாவது இருக்கிறதா என விசாரித்தனர் . எதையும் அளிக்காததால் அவரை போலீசார் கைது செய்ததாக கூறப்படுகிறது.டெல்லி விமான நிலையத்தில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் எம்.எல்.ஏ. மொத்தம் பத்து தோட்டாக்களுடன் விமானத்தில் பயணிக்க முயன்றார். பீகார் மாநிலத்தில் உள்ள மதேபுரா தொகுதியின் எம்.எல்.ஏ. சந்திர சேகர் ஆவார் . அவர் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியைச் சேர்த்தவர். இவர் பிப்ரவரி 20ஆம் தேதி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்துள்ளார். அவர் பையில் 10 தோட்டாக்கள் இருப்பதை விமான நிலைய சோதனையில் கண்டு பிடித்தனர் . அந்த தோட்டாக்கள் அனைத்தும் 3.15 போர் ரகம் என்று தெரியவந்தது . இதனால் அவர் விமானத்தில் பயணிப்பதை அதிகாரிகள் தடுத்தனர் . தோட்டாக்களை எடுத்துச்செல்ல அனுமதி ஆவணங்கள் இருக்கிறதா…

Read More

அரக்கோணம் அருகே சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த நபர் கைது!

அரக்கோணம் அருகே சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த நபர் கைது! அரக்கோணம் அடுத்து உள்ள களத்தூர் பகுதியில் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பாஸ்கர் என்பவரை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர் .வேலூர் மாவட்டம் அரக்கோணம் அடுத்த உள்ள களத்தூர் பகுதியை சேர்ந்த பாஸ்கரன் (வயது 35) அதே பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது. இந்த காரணமாக சிறுமிக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது . இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர் சிறுமியிடம் கேட்டு உறுதியும் செய்தனர்.இது குறித்து அரக்கோணம் அனைத்து மகளீர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் களத்தூர் பகுதியை சேர்ந்த பாஸ்கரன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.இந்த தகவலை பற்றி செய்தியாளர்கள் அனைத்து மகளீர் காவல் நிலையத்தில் விசாரித்தபோது அதுபோன்ற சம்பவம் நடைபெறவில்லை என்று கூறி மறைக்க முயற்சி மேற்க்கொண்டனர். செய்தி வெளியிடாமல் இருக்க காரணம் என்ன ?என பாதிக்கப்பட்ட சிறுமி தரப்பு குழப்பத்தில் உள்ளனர் .

வேலூர் :அரக்கோணம் அடுத்து உள்ள களத்தூர் பகுதியில் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பாஸ்கர் என்பவரை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர் .வேலூர் மாவட்டம் அரக்கோணம் அடுத்த உள்ள களத்தூர் பகுதியை சேர்ந்த பாஸ்கரன் (வயது 35) அதே பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது. இந்த காரணமாக சிறுமிக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது . இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர் சிறுமியிடம் கேட்டு உறுதியும் செய்தனர்.இது குறித்து அரக்கோணம் அனைத்து மகளீர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் களத்தூர் பகுதியை சேர்ந்த பாஸ்கரன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.இந்த தகவலை பற்றி செய்தியாளர்கள் அனைத்து மகளீர் காவல் நிலையத்தில் விசாரித்தபோது அதுபோன்ற சம்பவம் நடைபெறவில்லை என்று கூறி மறைக்க முயற்சி…

Read More

பாகிஸ்தான் தேசிய கொடியை எரித்த சிஆர்பிஎப் வீரர் சுப்பிரமணியனின் ஊர் மக்கள்

பாகிஸ்தான் தேசிய கொடியை எரித்த சிஆர்பிஎப் வீரர் சுப்பிரமணியனின் ஊர் மக்கள் தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சிஆர்பிஎப் வீரர் சுப்பிரமணியனின் ஊரில் பாகிஸ்தானுக்கு எதிராக போராட்டம் நடத்தி பாகிஸ்தான் தேசிய கொடியை எரித்தனர்.புல்வாமா தீவிரவாத தாக்குதலில் பலர் வீரமரணம் அடைத்தனர் ,அதில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சவாலாப்பேரி கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன் அவரும் வீரமரணம் அடைந்தார். சுப்பிரமணியன் கொல்லப்பட்ட காரணத்தால் அவரது கிராமத்தினர் கோபத்தில் உள்ளனர். இதனால் ஊரே சோகத்தில் ஆழ்ந்துள்ளது. சுப்பிரமணியனின் நண்பர்கள் மற்றும் கிராம மக்கள் இணைந்து பாகிஸ்தான் நாட்டின் தேசிய கொடியை எரித்து தங்களது கோபத்தை வெளிப்படுத்தினர்.மேலும், தீவிரவாத தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த அடில் அகமது தார் உருவ பொம்மை எரித்து கோஷங்களை எழுப்பினர்.

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சிஆர்பிஎப் வீரர் சுப்பிரமணியனின் ஊரில் பாகிஸ்தானுக்கு எதிராக போராட்டம் நடத்தி பாகிஸ்தான் தேசிய கொடியை எரித்தனர்.புல்வாமா தீவிரவாத தாக்குதலில் பலர் வீரமரணம் அடைத்தனர் ,அதில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சவாலாப்பேரி கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன் அவரும் வீரமரணம் அடைந்தார். சுப்பிரமணியன் கொல்லப்பட்ட காரணத்தால் அவரது கிராமத்தினர் கோபத்தில் உள்ளனர். இதனால் ஊரே சோகத்தில் ஆழ்ந்துள்ளது. சுப்பிரமணியனின் நண்பர்கள் மற்றும் கிராம மக்கள் இணைந்து பாகிஸ்தான் நாட்டின் தேசிய கொடியை எரித்து தங்களது கோபத்தை வெளிப்படுத்தினர்.மேலும், தீவிரவாத தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த அடில் அகமது தார் உருவ பொம்மை எரித்து கோஷங்களை எழுப்பினர்.

Read More

காஷ்மீர் தாக்குதலில் தமிழகத்தை சேர்ந்த 2 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்

காஷ்மீர் தாக்குதலில் தமிழகத்தை சேர்ந்த 2 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர் காஷ்மீர்:காஷ்மீரில் பாதுகாப்புப்படை வீரர்கள் மீது ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பில் உள்ள நபர் நடத்திய தாக்குதலில், தமிழக வீரர்கள் 2 பேர் வீர மரணம் அடைத்தனர்.அதில் ஒருவர் பெயர் சுப்ரமணியன் மற்றவரின் உடல் இதுவரை கண்டறியப்படவில்லை என்று கூறப்படுகிறது. பயங்கர தாக்குதலில் மொத்தம் 44 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். அதில் கேரளா மற்றும் கர்நாடகாவை சேர்ந்த 2 பேரும் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது . நாடு முழுவதும் அதிர்ச்சி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது . இந்த தாக்குதலில் தமிழக வீரர் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சுப்ரமணியன் வீரமரணம் அடைந்தது தற்போது தெரிய வந்துள்ளது. இந்த செய்தி கேட்டு சுப்ரமணியனின் உறவினர்கள் , நண்பர்கள் மற்றும் பலர் கண்கலங்கியுள்ளனர்.சுப்ரமணி சவலாப்பேரி கிராமத்தைச் சேர்ந்த கணபதி என்பவரின் மகன் ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியிடப்படவில்லை. சிஆர்பிஎப் மூலம் அவரது குடும்பத்துக்கு தகவல் தெரிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது. சுப்ரமணியனுக்கு அண்மையில் தான் திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது . தாக்குதல் நடந்த அன்று மதியம் அவரது குடும்பத்தினருடன் தொலைபேசியில் பேசியதாக கூறப்படுகிறது. சுப்ரமணியனுடன் பலியான மற்றொரு தமிழக வீரர் பற்றி தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

காஷ்மீர்:காஷ்மீரில் பாதுகாப்புப்படை வீரர்கள் மீது ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பில் உள்ள நபர் நடத்திய தாக்குதலில், தமிழக வீரர்கள் 2 பேர் வீர மரணம் அடைத்தனர்.அதில் ஒருவர் பெயர் சுப்ரமணியன் மற்றவரின் உடல் இதுவரை கண்டறியப்படவில்லை என்று கூறப்படுகிறது. பயங்கர தாக்குதலில் மொத்தம் 44 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். அதில் கேரளா மற்றும் கர்நாடகாவை சேர்ந்த 2 பேரும் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது . நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது . இந்த தாக்குதலில் தமிழக வீரர் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சுப்ரமணியன் வீரமரணம் அடைந்தது தற்போது தெரிய வந்துள்ளது. இந்த செய்தி கேட்டு சுப்ரமணியனின் உறவினர்கள் , நண்பர்கள் மற்றும் பலர் கண்கலங்கியுள்ளனர்.சுப்ரமணி சவலாப்பேரி கிராமத்தைச் சேர்ந்த கணபதி என்பவரின் மகன் ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியிடப்படவில்லை. சிஆர்பிஎப் மூலம்…

Read More

காஷ்மீரில் நடந்த பெரிய தீவிரவாத தாக்குதலில் 42 வீரர்கள் பலி

காஷ்மீரில் நடந்த பெரிய தீவிரவாத தாக்குதலில் 42 வீரர்கள் பலி ஸ்ரீநகர்: புல்வாமா மாவட்டத்தின் அவந்திபோரா டவுன் பகுதியில் தற்கொலை தீவிரவாதி தாக்குதலில் ஈடுபட்ட ஒருவன் 350 கிலோ வெடி மருந்து காரை ரிசர்வ் போலீஸ் படையினர் சென்ற பேருந்து மீது மோதினான். இதில் ரிசர்வ் போலீஸ் படையினர் 42 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர் மற்றும் பலர் படுகாயம் அடைந்தனர். ஜம்முவிலிருந்து ஸ்ரீநகர் நோக்கி சென்று கொண்டிருந்த ரிசர்வ் போலீஸ் படையின் 70 பஸ்கள் ஒன்றன் பின் ஒன்றாக சென்று கொண்டிருந்தபோது, இந்த தாக்குதல் நடந்ததாக கூறப்படுகிறது.பஸ் மீது வாகனத்தால் மோதப்பட்டதும், அருகே மிகப்பெரிய சத்தத்தோடு மர்ம பொருள் வெடித்தது. இதையடுத்து துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது . ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத குழு இந்த தாக்குதலை நடத்தியத்திற்கு பொறுப்பேற்றுள்ளது. அடில் அகமது என்ற தீவிரவாதியை கைது செய்துள்ளனர் . அடில் அகமது கடந்த வருடம்தான் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பில் சேர்த்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. தீவிரவாத தாக்குதலுக்கு, தேசிய மாநாட்டு கட்சி தலைவர் ஓமர் அப்துல்லா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதேபோல் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பலர் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர் . இந்த சம்பவம் பற்றி மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஜம்மு காஷ்மீர் உயர் காவல்துறை அதிகாரிகளை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நடந்த விவரங்களை கேட்டதாக கூறப்படுகிறது . 20 வருடங்களில் காஷ்மீரில் நடத்தப்பட்ட மிகப்பெரிய தீவிரவாத தாக்குதல் இதுவே ஆகும் .

ஸ்ரீநகர்: புல்வாமா மாவட்டத்தின் அவந்திபோரா டவுன் பகுதியில் தற்கொலை தீவிரவாதி தாக்குதலில் ஈடுபட்ட ஒருவன் 350 கிலோ வெடி மருந்து காரை ரிசர்வ் போலீஸ் படையினர் சென்ற பேருந்து மீது மோதினான். இதில் ரிசர்வ் போலீஸ் படையினர் 42 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர் மற்றும் பலர் படுகாயம் அடைந்தனர். ஜம்முவிலிருந்து ஸ்ரீநகர் நோக்கி சென்று கொண்டிருந்த ரிசர்வ் போலீஸ் படையின் 70 பஸ்கள் ஒன்றன் பின் ஒன்றாக சென்று கொண்டிருந்தபோது, இந்த தாக்குதல் நடந்ததாக கூறப்படுகிறது.பஸ் மீது வாகனத்தால் மோதப்பட்டதும், அருகே மிகப்பெரிய சத்தத்தோடு மர்ம பொருள் வெடித்தது. இதையடுத்து துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது . ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத குழு இந்த தாக்குதலை நடத்தியத்திற்கு பொறுப்பேற்றுள்ளது. அடில் அகமது என்ற தீவிரவாதியை கைது செய்துள்ளனர் .…

Read More

உடல்நிலை சரியில்லாத தாயை கவனிக்க விடுமுறை கேட்டும் கிடைக்காததால் காவலர் தற்கொலை

உடல்நிலை சரியில்லாத தாயை கவனிக்க விடுமுறை கேட்டும் கிடைக்காததால் காவலர் தற்கொலை நாகப்பட்டனம்: தாய் பாசத்தால் தற்கொலை செய்த காவலர் .நாகை மாவட்டத்தில் உள்ள தேத்தாகுடி வடக்கு கிராமத்தை சேர்ந்தவர் மாமணி (45). மாமணி மயிலாடுதுறையில் மதுவிலக்கு பிரிவில் கோர்ட் வழக்குகளை பார்க்கும் பணியில் இருந்துள்ளார். அவர் குடும்பத்தில் மனைவி வளர்மதி , மாமதி என்ற 12 வயது மகளும், சுவைமணி என்ற 9 வயது மகனும் உள்ளனர். மாமணியுடன் அவரது தந்தை சுப்பிரமணியன் மற்றும் தாய் சரோஜினி வசித்து வந்தனர். மாமணியின் தாய் சரோஜினிக்கு உடல்நிலை சரியில்லை . கடந்த வாரம் அவரது தாயின் உடல்நிலை மிகவும் மோசமானதை அடுத்து இன்ஸ்பெக்டரிடம் மாமணி தொலைபேசி மூலம் விடுமுறை கேட்டதாக கூறப்படுகிறது. இன்ஸ்பெக்டர் விடுமுறை மறுத்ததாக கூறப்படுகிறது . மனமுடைந்த மாமணி 6 நாள் விடுமுறை கோரிய கடிதத்தை எழுதி காவல் நிலையத்தில் வைத்து விட்டு தனது ஊருக்கு தாயை கவனிக்க சென்று விட்டார்.. பிறகு மீண்டும் பணிக்கு செல்ல காவல்நிலையத்திற்கு போன் செய்து தனது விடுமுறை கோரிக்கை பற்றி விசாரித்த போது மறுக்கப்பட்டதை சக காவலர் தெரிவித்தார். இதனால் மனமுடைந்த மாமணி வீட்டிலேயே விஷம் அருந்தினார் . இதுகுறித்து தகவல் அறிந்த உறவினர்கள் சிகிச்சைக்காக அவரை தஞ்சை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். இதுகுறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாகப்பட்டனம்: தாய் பாசத்தால் தற்கொலை செய்து கொண்ட காவலர் .நாகை மாவட்டத்தில் உள்ள தேத்தாகுடி வடக்கு கிராமத்தை சேர்ந்தவர் மாமணி (45). மாமணி மயிலாடுதுறையில் மதுவிலக்கு பிரிவில் கோர்ட் வழக்குகளை பார்க்கும் பணியில் இருந்துள்ளார். அவர் குடும்பத்தில் மனைவி வளர்மதி , மாமதி என்ற 12 வயது மகளும், சுவைமணி என்ற 9 வயது மகனும் உள்ளனர். மாமணியுடன் அவரது தந்தை சுப்பிரமணியன் மற்றும் தாய் சரோஜினி வசித்து வந்தனர். மாமணியின் தாய் சரோஜினிக்கு உடல்நிலை சரியில்லை . கடந்த வாரம் அவரது தாயின் உடல்நிலை மிகவும் மோசமானதை அடுத்து இன்ஸ்பெக்டரிடம் மாமணி தொலைபேசி மூலம் விடுமுறை கேட்டதாக கூறப்படுகிறது. இன்ஸ்பெக்டர் விடுமுறை மறுத்ததாக கூறப்படுகிறது . மனமுடைந்த மாமணி 6 நாள் விடுமுறை கோரிய கடிதத்தை எழுதி காவல் நிலையத்தில் வைத்து விட்டு தனது ஊருக்கு…

Read More