சென்னை:சென்னை- சேலம் இடையே 10 ஆயிரம் கோடி செலவில் 8 வழிச்சாலை அமைக்க தமிழக அரசு அறிவித்தது. 1,900 ஹெக்டர் நிலங்களை சேலம், தர்மபுரி, காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் உள்ள நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதை கைவிடக்கோரி 5 மாவட்ட விவசாயிகள் மற்றும் பொது மக்கள் போராட்டம் நடத்தினார்கள். இந்த திட்டத்துக்கு தடை விதித்து, திட்டத்தை ரத்து செய்யக் கோரியும் விவசாயிகள் ,தர்மபுரி எம்.பி அன்புமணி ராமதாஸ் மற்றும் பலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர்.இந்த வழக்குகள் நீதிபதிகள் சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் அமர்வு முன்பு விசாரணை 6 மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வந்தது. இந்த சென்னை – சேலம் 8 வழிச்சாலை திட்டத்திற்காக ஐந்து மாவட்டங்களிலும் நிலங்களை கையகப்படுத்த தடை விதிக்கப்பட்டது.இந்த திட்டத்திற்கு மத்திய சுற்றுசுழல் அமைச்சகம்…
Read Moreகிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் வழக்கில் தண்டனைக் காலத்தை குறைப்பது குறித்து உச்சநீதிமன்றம் உத்தரவு
டெல்லி :கடந்த 2013-ம் ஆண்டு மே மாதத்தில் நடந்த ஐபிஎல் போட்டில் இடம் பெற்றிருந்த கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் ,அங்கீத் சவான், அஜித் சண்டிலா ஆகியோர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் போட்டியிட்டனர். அவர்கள் ஸ்பாட் பிக்ஸிங்முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது . இதனால் மூன்று வீரர்களுக்கும் வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது.இதை எதிர்த்து கேரள உயர் நீதிமன்றத்தில் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் வழக்குத் தொடர்ந்தார். வழக்கை விசாரித்து ஸ்ரீசாந்த்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவதாக கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்தது.ஆனால், இதை எதிர்த்து பிசிசிஐ தரப்பில் முறையீடு செய்யப்பட்டது, இதனால் ஸ்ரீசாந்த் மீதான தடையை உறுதி செய்து கேரள உயர்நீதிமன்றம் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதை உச்சநீதிமன்றத்தில் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் ,பிசிசிஐ தாக்கல் செய்த மனுவை நாங்கள் பரிசீலித்தோம். இந்த வழக்கை…
Read Moreஓய்வூதியம் பெறுவதற்கு உச்சவரம்பு கிடையாது என்று கேரள உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது.
டெல்லி:கேரள உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் ‘வருங்கால வைப்பு நிதித் திட்டத்தின் கீழ் வரும் அனைத்து ஊழியர்களுக்கும் ஓய்வூதியம் பெறுவதற்கு உரிமை உண்டு’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. கேரள உயர் நீதிமன்றம் அளித்த அந்த தீர்ப்பை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது.ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியருக்கு ,வருங்கால வைப்பு நிதியாக (EPF) 12% அவரின் சம்பளத்தில் இருந்தும் , 12% நிறுவனத்தின் சார்பில் இருந்தும் சேர்த்து வைக்கப்படும். நிறுவனத்தின் சார்பில் இருந்தும் 3.67% மட்டுமே வருங்கால வைப்பு நிதி திட்டத்திற்கு (EPF) அளிக்கப்படும். மீதமுள்ள 8.33% பணியாளர் ஓய்வூதியத் திட்டம் (EPS) பங்களிப்பாக வைப்பு வைக்கப்படும் . 1.9.2014-ம் தேதிக்குப் பிறகு பணியாளர் ஓய்வூதியத் திட்டத்தில் உறுப்பினர்களாக இல்லாதவர்களுக்கும் , புதிதாக வேலைக்குச் சேர்பவர்களுக்கும் வருங்கால வைப்புநிதி ஆணையம் 2018-ல் ஓய்வூதியம் பெறுவதற்கு உரிமை இல்லாதவர்கள் என்கிற நிபந்தனையை…
Read Moreசீருடை பணியாளர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலர் மீது உயர்நீதிமன்றம் வழக்கு!
சென்னை:சீருடை பணியாளர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலர் நீதிமன்றத்திற்கு போலி அறிக்கை அளித்ததால் உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது.2018ம் ஆண்டு கை ரேகை பிரிவில் எஸ்.ஐ பணிக்காக தேர்வு குறித்த வழக்கு நடைபெற்றது வருகிறது.அந்த வழக்கில் சீருடை பணியாளர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலர் போலி அறிக்கைகளை சமர்பித்ததாக கூறப்படுகிறது.அதனால் உயர்நீதிமன்றம் தாமாகவே முன்வந்து சீருடை பணியாளர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது.இந்த வழக்கின் விசாரணை வருகின்ற ஏப்ரல் 5ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Read Moreசென்னை உயர்நீதிமன்றம்: இளம்பெண் கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றக்கோரிய மனு தள்ளுபடி
சென்னை: அரியலூர் மாவட்டம் செந்துநை அருகே 17 வயது இளம்பெண் கொலை செய்யப்பட்டார். இது சம்மந்தமாக மணிகண்டன் உட்பட 3 பேரை காவல்துறை கைது செய்தனர். வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றினால் நீதி கிடைக்கும் என்று இளம்பெண்ணின் தாய் கருதினார்.இதை அடுத்து இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற கோரி இளம்பெண்ணின் தாய் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் தாக்கல் செய்தார்.அந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
Read Moreகொடநாடு விவகாரம்: ஸ்டாலின் பேச தடைகோரிய மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்
சென்னை: தேர்தல் பிரச்சாரத்தின் போது கொடநாடு விவகாரம் பற்றி மு.க.ஸ்டாலின் பேச தடை விதிக்க கோரி தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.கொடநாடு கொலை மற்றும் கொள்ளை விவகாரத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு தொடர்பு உள்ளதாக கூறி மு.க.ஸ்டாலின் பேசினார்.இதனால் மு.க.ஸ்டாலின் மீது சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது .இந்த வழக்கை விசாரித்த சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் . ஸ்டாலினை நேரில் ஆஜராக உத்தரவிட்டது. இந்த அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி மு.க.ஸ்டாலின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு,இதை விசாரித்த உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டது. கொடநாடு விவகாரம் தொடர்பான வழக்கு நிலுவையில் இருந்து வரும் நிலையில் அதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் பேச தடை விதிக்க வேண்டும் என…
Read Moreதிருமாவளவனுக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு
சென்னை:திருமாவளவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.அதில் தன் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், தனக்கு 24 மணி நேரமும் காவல்துறை பாதுகாப்பு வழங்கக்கோரி அந்த மனுவில் தெரிவித்திருந்தார்.அந்த மனு நீதிபதி சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது.தனக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படவில்லை என்று திருமாவளவன் தரப்பில் கூறப்பட்டது.இதனையடுத்து, திருமாவளவனுக்கு வழங்கப்பட்டு வரும் பாதுகாப்பு குறித்து காவல்துறை விரிவான பதில் மனுவை தாக்கல் செய்யுமாறு தமிழக டி.ஜி.பி.க்கு நீதிபதி உத்திரவிட்டார் .பிறகு அந்த வழக்கு விசாரணையை வருகிற 3-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
Read Moreகுழந்தைக்கு பாலியல் வன்கொடுமை அதற்கு உடந்தையாக இருந்த தாய்
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த தம்பதிக்கு மூன்று வயதில் பெண் குழந்தை உள்ளது. கடந்த 10 நாள்களுக்கு முன்பு மனைவியையும் குழந்தையையும் காணவில்லை என்று காவல்துறையில் கணவர் புகார் அளித்தார்.பிறகு சில நாள்கள் கழித்து உறவினர் வீட்டுக்குச் சென்றதாகக் கூறி மனைவி குழந்தையுடன் வீடு திரும்பினார்.குழந்தைக்கு உடல் நலம் குறைவு ஏற்பட்டது .அதனால் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். மருத்துவர் குழந்தையை பரிசோதித்த போது பாலியல் வன்கொடுமை பற்றி அறிந்து அதிர்ச்சியடைந்தார்.இதை தம்பதியிடம் தெரிவித்தார்.இதை கேட்டு தந்தையும் அதிர்ச்சி அடைந்தார் .தாயிடம் மருத்துவர் என்ன நடந்தது என்று கேட்டபோது உண்மையை மறைத்து பிறகு ஒப்புக்கொண்டார் . சம்பந்தப்பட்ட காவல் நிலையத்துக்கு மருத்துவமனை தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கும்மிடிப்பூண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. விசாரணையில் குழந்தையின்…
Read Moreமாணவர்கள் பாதுகாப்பு உறுதி கோரி வழக்கு: பரிசீலிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
அரசு உதவிபெறும் பள்ளிக்கு தீயணைப்புத் துறையின் தடையில்லா சான்று ரத்து செய்த விவகாரத்தில் அங்கு பயிலும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் வளர்மதி என்பவர் தாக்கல் செய்த மனுவில், கொருக்குப்பேட்டையில் உள்ள அரசு உதவிபெறும் தனியார் பள்ளியின் கட்டடத்துக்கான தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை வழங்கிய தடையில்லாச் சான்று உரிமம் கடந்த 2018-ஆம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது. இதனால் அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. எனவே அந்தப் பள்ளியின் வளாகத்தில் உள்ள வணிக ரீதியான கட்டடங்களை அப்புறப்படுத்தவும், தீயணைப்பு தடுப்பு உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் ஏற்படுத்த உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். இந்த மனு நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.…
Read Moreமருந்தாளுநர் பணியிடங்களுக்கானத் தேர்வில் பி.பார்ம் பட்டதாரிகள் மற்றும் ஏனைய பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம் : உயர்நீதிமன்றம் உத்தரவு
மருந்தாளுநர் பணியிடங்களுக்கானத் தேர்வில் பி.பார்மில் பட்டயப் படிப்பு படித்தவர்கள் மட்டுமின்றி பட்டதாரிகளும் விண்ணப்பிக்க அனுமதிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் நவீன் குமார் தாக்கல் செய்த மனுவில், நான் பி.பார்ம் படிப்பில் இளம்நிலை பட்டம் பெற்றுள்ளேன். மார்ச் 1-ஆம் தேதி மருத்துவப் பணிகள் இயக்குநர், தமிழகத்தில் அரசு மருந்தாளுநர்கள் பணிக்கானத் தேர்வு தொடர்பான அறிவிக்கை ஒன்றை வெளியிட்டார். இந்தத் தேர்வுக்கு பி.பார்மில் பட்டயப் படிப்பை முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என கல்வித் தகுதி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தத் தேர்வில் பட்டயப் படிப்பு படித்தவர்கள் மட்டுமின்றி பட்டதாரிகளும் விண்ணப்பிக்க அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம்பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், பி.பார்ம் பட்டதாரிகளுக்கு அரசு மற்றும்…
Read More

