India celebrates its 65th Republic Day நாடு முழுவதும் 65வது குடியரசு தினம் இன்று வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. தலைநகர் டெல்லி முதல் கன்னியாகுமரி வரை அனைத்துப் பகுதிகளிலும் குடியரசு தினத்தை அரசுத் தரப்பிலும், பொதுமக்களும் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடினர். குடியரசு தினத்தையொட்டி நாடு முழுவதும் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தலைநகர் டெல்லியில் கிட்டத்தட்ட 20,00 போலீஸாரும், ஆயுதப் படையினரும் தீவிர பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டிருந்தனர். டெல்லி முழுவதும் பல அடுக்குப் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு குடியரசு தின அணிவகுப்பும் நடந்ததால் இந்தக் கூடுதல் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இன்றைய குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஜப்பான் பிரதமர் ஷின்ஷோ கலந்து கொண்டார். அணிவகுப்பு நடந்த ராஜ்பாத் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அங்குள்ள 125 கட்டடங்களும் சீல் வைக்கப்பட்டிருந்தன.…
Read MoreYear: 2014
ஜனவரி 25 இந்திய தேசிய வாக்காளர் தினம்
National voters’ day to be observed today தேசிய வாக்காளர் தினம் என்பது இந்திய அரசாங்கத்தால் இளம் வாக்களர்களை ஊக்கபடுதுவதற்காக இந்த தினம் அனுசரிக்கபடுகிறது.ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25ஆம் தேதி “தேசிய வாக்காளர் தினம்” . ஒட்டு அளிப்பதை மக்கள் தங்கள் கடமை யாக கருத வேண்டும் .18 வயது நிரம்பிய இந்திய குடிமக்கள் அனைவரும் ஒட்டு அளிக்க தகுதி வாய்ந்தவர் .தேர்தல் என்பது பொதுவாக 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை வருகிறது .சதி,மதம் , இனம், என்ற வேறுபாடுகளை களைந்து 18 வயது நிரம்பிய இந்திய குடியுரிமை பெற்ற மக்கள் அனைவரும் ஓட்டளிக்க தகுதி உள்ளவர்கள் .வாக்காளர் அனைவரும் வாக்காளர் அடையாள அட்டை ஒன்று தேர்தல் ஆணையத்தால் வழங்கபடுகிறது. National voters’ day to be observed today Last year on Independence…
Read Moreதேசிய பாதுகாப்பு கருதி சமூக வலைத்தளங்களை ராணுவ வீரர்கள் பயன்படுத்த தடை
Social media banned for Army officers தேசிய பாதுகாப்பு கருதி ராணுவ பணியாளர்கள் பேஸ்புக், விசாட் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பயன்படுத்த கூடாது என்று ராணுவம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. சமூக வலைதள பயன்பாடு மூலம் ராணுவ அதிகாரிகள் பற்றியும் அவர்கள் வசிக்கும் இடம் பற்றியும் தகவல் வெளியாகும் என்ற செய்தியின் காரணமாக ராணுவம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சமீபகால்மாக சமூக வலைதளங்கள் மூலம் ராணுவத்தினர் உளவு பார்க்கப்பட்டதாக ஏற்கனவே புகார் எழுந்தது.இதையடுத்து வீரர்களின் இருப்பிடம் உள்ளிட்ட விவரங்கள் வெளியாவதை தடுக்க பேஸ்புக், வீசாட் போன்ற சமூக வலைதளங்களை பயன்படுத்த ராணுவம் தடை விதித்துள்ளது. இராணுவத்தினரின் இருப்பிடம், நடவடிக்கைகள் பற்றி தகவல்கள் வெளியானால் பாதுகாப்பு கேள்விக்குறியாக வாய்ப்பு உள்ளது என்பதால் இந்நடவடிக்கை எடுக்கப்படுள்ளது என்று ராணுவம் தெரிவித்துள்ளது.மேலும் சமீபத்தில் பாகிஸ்தான் உளவுத்துறை…
Read More2005ம் அண்டுக்கு முன்பு அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகள் எதுவிம் செல்லாது ரிசர்வ் வங்கி அறிவிப்பு
RBI’s move to withdraw pre-2005 currency notes is anarchic 2005–ம் ஆண்டுக்கு முன்பு அச்சிடப்பட்ட அனைத்து ரூபாய் நோட்டுகளையும் திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அச்சிடப்பட்டஆண்டு எண் இல்லாத அனைத்து ரூபாய் நோட்டுகளையும் வருகிற மார்ச் 31–ந்தேதிக்கு பிறகு திரும்ப பெறுவதாக வங்கி அறிவித்துள்ளது. நோட்டுகளை, வைத்து இருப்பவர்கள் ஏப்ரல் 1–ந்தேதி முதல் வங்கிகளில் கொடுத்து வேறு நோட்டு களை பெற்றுக்கொள்ளலாம் என்று வங்கி கூறியுள்ளது. அனைத்து வங்கிகளும் இதற்கான வசதிகளை ஏற்பாடு செய்ய ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டுள்ளது. மக்கள் எளிதாக நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என்று வங்கி அறிவித்துள்ளது.மேலும் ரூபாய் நோட்டுக்கள் செல்லுபடி ஆகும் என்றும் இதனால் பொதுமக்கள் பீதி அடைய தேவையில்லை என்றும் இந்த நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளது. கறுப்பு பணத்தை வெளிக்கொண்டு வருவதற்கும், கள்ளநோட்டு…
Read Moreமேற்கு வங்காள பஞ்சாயத்தில் இளம்பெண்ணுக்கு நடந்த கொடுமை
20-year-old tied to tree, gang-raped on orders of village council, say police மேற்கு வங்கத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஒரு இளம்பெண்ணுக்கு வேறு ஒரு சமூகத்தை சேர்ந்தவரோடு நட்பு இருந்ததால், அந்த பெண்ணை தண்டிக்க அக்கிராமத்து தலைவர் அப்பெண்ணை கிராமத்தில் வசித்த ஆண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்துமாறு தீர்ப்பு அளித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலம் பிர்ப்ஹம்மாவட்டத்தில் உள்ள சபல்பூல் கிராமத்தை சேர்ந்த 20 வயது இளம் பெண், அந்த பகுதியில் உள்ள ஒரு வாலிபரை காதலித்தார். இருவரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள். இது குறித்து கிராம பஞ்சாயத்தில் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து அந்த ஊர் பஞ்சாயத்தார் கூடி விசாரணை நடத்தினார்கள். வேறு சாதி வாலிபரை காதலித்ததற்காக அந்த பெண்ணுக்கும், வாலிபருக்கும் தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தார்.அபராத தொகையை…
Read Moreகனிணியில் பாஸ்வோர்ட் இல்லாமல் இனி கண் கருவிழியை பயன்பாடுத்தலாம்
EyeLock Myris Secures Computer With Eye Scan in Place of Password கை ரேகை எப்படி ஒவ்வொரு மனிதனுக்கும் வேறுபடுகிறதோ அதே போல் கண்ணில் இருக்கும் கருவிழி – இது ஒவ்வொருவருக்கும் வேறு மாதிரி இருக்கும். இதை வைத்து பல நாடுகளுக்கு இமிகிரேஷன் இல்லாமல் உள்ளே செல்ல முடியும் அளவுக்கு இந்த டெக்னாலஜி வளர்ந்துள்ளது. இது இப்போது மவுஸ் வடிவில் வந்துள்ளது நமது கணனி மற்றும் லேப்டாப்புக்கு. தை பொருத்தினால் இதில் உள்ள மவுஸை நீங்கள் உங்கள் கண் விழி மூலம் பார்த்தால் போதும் கணணி திறப்பது மட்டுமல்ல ஃபேஸ்புக் / டிவிட்டர் போன்ற அத்தனை சோஷியல் மீடியா/ வங்கி கணக்குகளுக்கு இனிமேல் பாஸ்வோர்ட் இல்லாமல் திறக்க இயலும். இது எவ்வகை பாஸ்வோர்ட்டையும் உடைக்கும் திறனான சாஃப்ட்வேருக்கு சவால் இந்த மவுஸ். EyeLock Myris…
Read Moreஅசத்திய அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த தமிழ் குழந்தைகள்
US Tamil Children have gave sweet surprise by saying Avvai’s old poetry அமெரிக்காவில் பிறந்த வளர்ந்த சுமார் 60 குழந்தைகள், சாஸ்தா தமிழ் அறக்கட்டளை நடத்திய அவ்வை அமுதம் போட்டியில், அவ்வையாரின் பொன்மொழிகளை அர்த்தத்துடன் ஒப்பித்து ஆச்சரியப்படுத்தியுள்ளனர். அமெரிக்காவில் பிறக்கும் தமிழ் குழந்தைகள் தமிழில் பேசுவதே பெரிய அதிசயமாக கருதப்பட்ட காலம் மலையேறி விட்டது. தமிழகக் குழந்தைகளுடன் போட்டி போடும் அளவுக்கு தமிழில் தேர்ச்சி பெற்று வருகிறார்கள் அமெரிக்க தமிழ்க் குழந்தைகள். அமெரிக்கா முழுவதிலும் பல்வேறு தன்னார்வ தமிழ்ப் பள்ளிகள் நடைபெறுகின்றன. மேலும் தமிழ் வழியில் ஏழாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு என ஆண்டு தோறும் வகுப்புகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. தமிழில் படிக்கும் குழந்தைகளுக்கு உயர்நிலைப் பள்ளியில் மொழிசார்ந்த மதிப்பெண்கள் பெற்றுத் தரவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குழந்தைகள் தமிழ் மறைகளை…
Read Moreநீரிழிவு நோயாளிகள் நொடிக்கு நொடி சக்கரையின் அளவை அறிந்து கொள்ள கான்டெக்ட் லென்ஸ்
Google to launch a contact lens to monitor sugar levels for diabetic patients உலகத்தில் 19 பேரில் ஒருவருக்கு இருக்கும் இலுப்பு நீர் (டயாபட்டிக்ஸ்) பிரச்சினையை நொடிக்கு நொடி அறிந்து கொள்ள கான்டெக்ட் லென்ஸ்..ரெடியாகியுள்லது..கூகுள் கண்ணாடிக்கு பிறகு கூகுள் ஒரு புரோட்டோ டைப் கான்டாக்ட் லென்ஸ்களை உருவாக்கியுள்ளது. இதை கண்ணில் அணிந்தால் இதனுள் இருக்கும் அப்டிக்கள் சென்ஸார் மற்றூம் சர்க்யூட் மூலம் உங்கள் உடம்பின் ஒவ்வொரு நிம்ட சர்க்கரை லெவல் மாற்றத்தை கண்டு கொள்ள முடியும். தற்போது நிறைய பேர் மருத்துவ பர்சோதனை செய்து கொள்வது இல்லை. இன்னும் பல பேர் ரத்தம் குத்தி சோதனை செய்ய தயக்கம். இன்னும் சில பேருக்கு ரத்த மாதிரி எடுக்கும் போது சரியாக இருக்கும் அப்புறம் வேலை காட்டும். அவர்கள் அடுத்த முறை எடுக்கும் போது…
Read Moreஇலங்கை தமிழர்கள் பகுதியில் தோண்டத் தோண்ட மனித எலும்புக் கூடுகள்
After Mass Grave Found in Sri Lanka, Fears of More மன்னார் மாவட்டத்தின் நாச்சிகுடா பகுதியில் தோண்டத் தோண்ட தமிழர் பிணங்களின் எலும்புக் கூடுகள் வந்த வண்ணம் உள்ளன. இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட எலும்புக் கூடுகள் எடுக்கப்பட்டுள்ளன. இதுபோல பல புதைகுழிகள் அந்தப் பகுதி முழுவதும் உள்ளதைப் பார்த்து, கண்ணிவெடி அகற்றும் பணியில் உள்ள வெளிநாட்டவர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இலங்கையில் கடந்த ஆண்டு நடந்த போரின் போது சுமார் 3 லட்சம் ஈழத் தமிழர்கள் அகதிகளாக தடுப்பு முகாம்களில் அடைக்கப்பட்டனர். அவர்களை, அவர்களது சொந்த ஊர்களில் மீண்டும் குடியேற்ற வேண்டும் என்று மேற்கத்திய நாடுகள் வற்புறுத்தியதால் இலங்கை பணிந்தது. என்றாலும் தமிழர் பகுதிகளில் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளை அகற்றிய பிறகுதான் மக்களை மீண்டும் குடியமர்த்த முடியும் என்று சிங்கள அரசு திட்டவட்டமாக கூறியது. அதன்படி தமிழர்களின்…
Read Moreகுஜராத்தில் 40 ஆண்டுகளாக வீட்டு வேலை பார்த்த ஒருவர்க்கு ரூ.600 கோடி சொத்து
Congress leader bequeaths property worth Rs 600 crore to servant குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் வசித்தவர் கஜ்ராஜ் சிங் ஜடேஜா. காங்கிரஸ் பிரமுகரான இவருக்கு திருமணமாகவில்லை. இவரிடம் வினுபாய் கன்ஜிபாய் ஜெய்பால் என்பவர் கடந்த 40 ஆண்டுகளாக வேலைக்காரராக பணியாற்றி வந்தார். அவருக்கு உணவாக்கி தருவது, உபசரிப்பது, கவனித்துக் கொள்வது என எல்லா பணிவிடைகளையும் வினுபாய் மட்டுமே செய்துள்ளார். மிகவும் விசுவாசமாகவும் நடந்து கொண்டுள்ளார். இவருக்கு ஜடேஜாவே திருமணம் செய்து வைத்தார். அவருடைய குழந்தைகளை இங்கிலாந்தில் படிக்க வைத்தார். இந்நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் உடல் நலக்குறைவால் ஜடேஜா காலமானார். அவருக்கு ரூ.600 கோடிக்கு வீடு, கார், பங்களா, நிலம் என பல சொத்துகள் உள்ளன. இதற்கு வாரிசு இல்லாததால், சொத்தை கைப்பற்ற உறவினர்கள் முயற்சி செய்தனர்.அப்போது, ஜடேஜா எழுதி வைத்திருந்த உயில் பற்றிய…
Read More