டெல்லி:டெல்லி விமான நிலையத்தில் தோட்டாக்களை எடுத்துச்செல்ல அனுமதிக்க ஆவணங்கள் எதாவது இருக்கிறதா என விசாரித்தனர் . எதையும் அளிக்காததால் அவரை போலீசார் கைது செய்ததாக கூறப்படுகிறது.டெல்லி விமான நிலையத்தில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் எம்.எல்.ஏ. மொத்தம் பத்து தோட்டாக்களுடன் விமானத்தில் பயணிக்க முயன்றார். பீகார் மாநிலத்தில் உள்ள மதேபுரா தொகுதியின் எம்.எல்.ஏ. சந்திர சேகர் ஆவார் . அவர் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியைச் சேர்த்தவர். இவர் பிப்ரவரி 20ஆம் தேதி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்துள்ளார். அவர் பையில் 10 தோட்டாக்கள் இருப்பதை விமான நிலைய சோதனையில் கண்டு பிடித்தனர் . அந்த தோட்டாக்கள் அனைத்தும் 3.15 போர் ரகம் என்று தெரியவந்தது . இதனால் அவர் விமானத்தில் பயணிப்பதை அதிகாரிகள் தடுத்தனர் . தோட்டாக்களை எடுத்துச்செல்ல அனுமதி ஆவணங்கள் இருக்கிறதா…
Read MoreAuthor: Tamil News Online
அரக்கோணம் அருகே சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த நபர் கைது!
வேலூர் :அரக்கோணம் அடுத்து உள்ள களத்தூர் பகுதியில் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பாஸ்கர் என்பவரை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர் .வேலூர் மாவட்டம் அரக்கோணம் அடுத்த உள்ள களத்தூர் பகுதியை சேர்ந்த பாஸ்கரன் (வயது 35) அதே பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது. இந்த காரணமாக சிறுமிக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது . இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர் சிறுமியிடம் கேட்டு உறுதியும் செய்தனர்.இது குறித்து அரக்கோணம் அனைத்து மகளீர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் களத்தூர் பகுதியை சேர்ந்த பாஸ்கரன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.இந்த தகவலை பற்றி செய்தியாளர்கள் அனைத்து மகளீர் காவல் நிலையத்தில் விசாரித்தபோது அதுபோன்ற சம்பவம் நடைபெறவில்லை என்று கூறி மறைக்க முயற்சி…
Read Moreபாகிஸ்தான் தேசிய கொடியை எரித்த சிஆர்பிஎப் வீரர் சுப்பிரமணியனின் ஊர் மக்கள்
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சிஆர்பிஎப் வீரர் சுப்பிரமணியனின் ஊரில் பாகிஸ்தானுக்கு எதிராக போராட்டம் நடத்தி பாகிஸ்தான் தேசிய கொடியை எரித்தனர்.புல்வாமா தீவிரவாத தாக்குதலில் பலர் வீரமரணம் அடைத்தனர் ,அதில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சவாலாப்பேரி கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன் அவரும் வீரமரணம் அடைந்தார். சுப்பிரமணியன் கொல்லப்பட்ட காரணத்தால் அவரது கிராமத்தினர் கோபத்தில் உள்ளனர். இதனால் ஊரே சோகத்தில் ஆழ்ந்துள்ளது. சுப்பிரமணியனின் நண்பர்கள் மற்றும் கிராம மக்கள் இணைந்து பாகிஸ்தான் நாட்டின் தேசிய கொடியை எரித்து தங்களது கோபத்தை வெளிப்படுத்தினர்.மேலும், தீவிரவாத தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த அடில் அகமது தார் உருவ பொம்மை எரித்து கோஷங்களை எழுப்பினர்.
Read Moreகாஷ்மீர் தாக்குதலில் தமிழகத்தை சேர்ந்த 2 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்
காஷ்மீர்:காஷ்மீரில் பாதுகாப்புப்படை வீரர்கள் மீது ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பில் உள்ள நபர் நடத்திய தாக்குதலில், தமிழக வீரர்கள் 2 பேர் வீர மரணம் அடைத்தனர்.அதில் ஒருவர் பெயர் சுப்ரமணியன் மற்றவரின் உடல் இதுவரை கண்டறியப்படவில்லை என்று கூறப்படுகிறது. பயங்கர தாக்குதலில் மொத்தம் 44 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். அதில் கேரளா மற்றும் கர்நாடகாவை சேர்ந்த 2 பேரும் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது . நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது . இந்த தாக்குதலில் தமிழக வீரர் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சுப்ரமணியன் வீரமரணம் அடைந்தது தற்போது தெரிய வந்துள்ளது. இந்த செய்தி கேட்டு சுப்ரமணியனின் உறவினர்கள் , நண்பர்கள் மற்றும் பலர் கண்கலங்கியுள்ளனர்.சுப்ரமணி சவலாப்பேரி கிராமத்தைச் சேர்ந்த கணபதி என்பவரின் மகன் ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியிடப்படவில்லை. சிஆர்பிஎப் மூலம்…
Read Moreகாஷ்மீரில் நடந்த பெரிய தீவிரவாத தாக்குதலில் 42 வீரர்கள் பலி
ஸ்ரீநகர்: புல்வாமா மாவட்டத்தின் அவந்திபோரா டவுன் பகுதியில் தற்கொலை தீவிரவாதி தாக்குதலில் ஈடுபட்ட ஒருவன் 350 கிலோ வெடி மருந்து காரை ரிசர்வ் போலீஸ் படையினர் சென்ற பேருந்து மீது மோதினான். இதில் ரிசர்வ் போலீஸ் படையினர் 42 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர் மற்றும் பலர் படுகாயம் அடைந்தனர். ஜம்முவிலிருந்து ஸ்ரீநகர் நோக்கி சென்று கொண்டிருந்த ரிசர்வ் போலீஸ் படையின் 70 பஸ்கள் ஒன்றன் பின் ஒன்றாக சென்று கொண்டிருந்தபோது, இந்த தாக்குதல் நடந்ததாக கூறப்படுகிறது.பஸ் மீது வாகனத்தால் மோதப்பட்டதும், அருகே மிகப்பெரிய சத்தத்தோடு மர்ம பொருள் வெடித்தது. இதையடுத்து துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது . ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத குழு இந்த தாக்குதலை நடத்தியத்திற்கு பொறுப்பேற்றுள்ளது. அடில் அகமது என்ற தீவிரவாதியை கைது செய்துள்ளனர் .…
Read Moreஉடல்நிலை சரியில்லாத தாயை கவனிக்க விடுமுறை கேட்டும் கிடைக்காததால் காவலர் தற்கொலை
நாகப்பட்டனம்: தாய் பாசத்தால் தற்கொலை செய்து கொண்ட காவலர் .நாகை மாவட்டத்தில் உள்ள தேத்தாகுடி வடக்கு கிராமத்தை சேர்ந்தவர் மாமணி (45). மாமணி மயிலாடுதுறையில் மதுவிலக்கு பிரிவில் கோர்ட் வழக்குகளை பார்க்கும் பணியில் இருந்துள்ளார். அவர் குடும்பத்தில் மனைவி வளர்மதி , மாமதி என்ற 12 வயது மகளும், சுவைமணி என்ற 9 வயது மகனும் உள்ளனர். மாமணியுடன் அவரது தந்தை சுப்பிரமணியன் மற்றும் தாய் சரோஜினி வசித்து வந்தனர். மாமணியின் தாய் சரோஜினிக்கு உடல்நிலை சரியில்லை . கடந்த வாரம் அவரது தாயின் உடல்நிலை மிகவும் மோசமானதை அடுத்து இன்ஸ்பெக்டரிடம் மாமணி தொலைபேசி மூலம் விடுமுறை கேட்டதாக கூறப்படுகிறது. இன்ஸ்பெக்டர் விடுமுறை மறுத்ததாக கூறப்படுகிறது . மனமுடைந்த மாமணி 6 நாள் விடுமுறை கோரிய கடிதத்தை எழுதி காவல் நிலையத்தில் வைத்து விட்டு தனது ஊருக்கு…
Read Moreநகைச்சுவை நடிகர் கருணாகரன் மீது போலீசில் புகார் கொடுத்த இயக்குனர்
சென்னை: கடந்த பிப்ரவரி 7 ம் தேதி சீயோன் இயக்கிய ‘பொதுநலன் கருதி’ என்ற திரைப்படம் வெளியானது. ‘பொதுநலன் கருதி’ படத்தின் விளம்பரப்படுத்துதல் நிகழ்ச்சிக்கு நடிகர் கருணாகரன் வரவில்லை என்று கூறப்படுகிறது . இது தொடர்பாக அவரது வருத்தத்தை இயக்குனர் சீயோன் நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்தார் . இதற்கு கருணாகரன் இணை தயாரிப்பாளர் விஜய் ஆனந்திற்கு தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்தாகக் கூறப்படுகிறது. இதனால் இயக்குனர் சீயோன் மற்றும் படத்தின் இணை தயாரிப்பாளர் விஜய் ஆனந்த் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் நடிகர் கருணாகரன் மீது புகார் அளித்துள்ளனர். இந்த படத்தில் நடிக்க கருணாகரனுக்கு 25 லட்சம் ரூபாய் பணம் கொடுக்கப்பட்டது. ஆனால் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் விளம்பரப்படுத்துதல் நிகழ்ச்சிகளுக்கு அழைத்தும் நடிகர் கருணாகரன் வரவில்லை. செய்தியாளர்களை சந்தித்த இயக்குனர் சீயோன் , எங்களுக்கு…
Read Moreசந்தியாவை நான் கொல்லவில்லை என்று கோர்ட்டில் கூறிய சைக்கோ பாலகிருஷ்ணன்!
சென்னை: சந்தியாவை நான் கொல்லவில்லை என ஆலந்தூர் நீதிமன்றத்தில் அவரது கணவர் திடீர் என்று கூறியுள்ளார்.சென்னை ஜாபர்கான்பேட்டையை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் இவருடைய மனைவி பெயர் சந்தியா. பாலகிருஷ்ணன் சினிமா துறையில் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர்.சந்தியாவுக்கு சினிமாவில் நடிக்க ஆசை இருந்தது.ஆனால் இதை விரும்பாத பாலகிருஷ்ணன் கோபமடைந்துள்ளார். பின்னர் சந்தியாவிடம் நடிக்கும் ஆசையை விட்டு விடுமாறு கூறியும் அதற்கு மறுத்துள்ளார் . கடந்த 19-ஆம் தேதி சந்தியாவுக்கு வாய்ப்பு வாங்கித் தருவதாக கூறி தனது வீட்டுக்கு அழைத்துள்ளார் பாலகிருஷ்ணன். நம்பி சென்ற சந்தியாவிடம் நடிக்கும் எண்ணத்தை விட்டுவிடுமாறு கூறியும் மறுத்துள்ளார் . இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.வீட்டை விட்டு வெளியே செல்ல முயன்ற சந்தியாவை தடுத்த பாலகிருஷ்ணன் சுத்தியலால் அடித்தது கொன்றதாக கூறப்படுகிறது .உயிரிழந்த சந்தியாவின் உடலை வெட்டி வீசியதாக காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.பாலகிருஷ்ணன் ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.…
Read Moreஉத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை அலையவைத்த மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜி
லோக்சபா தேர்தலையொட்டி மேற்கு வங்கத்தில் அதிக தொகுதிகளில் கைப்பற்றிவிட வேண்டும் என பாஜக பொதுக்கூட்டங்களை நடத்த அக்கட்சி திட்டமிட்டுள்ளது. இதன் ஒருபகுதியாக பிரதமர் நரேந்திர மோடி சில தினங்களுக்கு முன்பு துர்காபூரில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார்.பிறகு உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தை பிரச்சாரம் செய்ய கொண்டு வந்துள்ளது பாஜக தலைமை. சிபிஐ மற்றும் கொல்கத்தா போலீஸ் கமிஷனர் இடையே மோதலால் கோபத்தில் போராட்டத்தில் குதித்த மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜி ஆதித்யநாத்தை அலைக்கழித்துவிட்டார். இருமுறை யோகி ஆதித்யநாத் ஹெலிகாப்டர் தரையிறங்க மேற்கு வங்க அரசு அனுமதி மறுத்தது. மேற்குவங்க மாநிலம் புருலியா பகுதி பாஜக கூட்டத்தில் பங்கேற்க வந்த யோகி ஆதித்யநாத்தின் ஹெலிகாப்டர் தரையிறங்க அனுமதி வழங்காததால் அண்டை மாநிலமான பாஜக ஆளும் ஜார்கண்ட்டில் இறங்கி அங்கேயிருந்து கார் மூலமாக புருலியா சென்று கூட்டத்தில் கலந்து…
Read More15 ஆண்களை கல்யாணம் செய்து நகை, பணம் மோசடி செய்த மகாலட்சுமி
மன்னார்குடி:15 ஆண்களை கல்யாணம் செய்து ஏமாற்றி நகை, பணத்தை எடுத்து சென்றுள்ளார் மகாலட்சுமி.மன்னார்குடியை சேர்ந்த உதயகுமார் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார்.இவருக்கு ஏற்கனவே கல்யாணமாகி விவாகரத்து ஆனதால் 2-வது கல்யாணம் செய்து கொள்ள மேட்டர்மோனி மூலமாக ஒரு திருச்சியை சேர்ந்த பெண்ணை தேர்ந்தெடுத்தார். இவர்களுக்கு 2017-ம் வருடம் திருமணம் நடைபெற்றது. பிறகு வேலை சம்மந்தமாக உதயகுமார் சிங்கப்பூருக்கு சென்றுள்ளார். ஒருநாள் மகாலட்சுமி நான் கர்ப்பமாக இருப்பதாக போனில் உதயகுமாரிடம் தெரிவித்தார். இதை அறிந்த உதயகுமார் சிங்கப்பூரில் இருந்து மன்னார்குடிக்கு வந்தார் .மகாலட்சுமிக்கு சந்தோஷப்படுத்த எதுவுமே சொல்லாமல் திடீரென வீட்டுக்கு வந்தார். ஆனால் அவருக்கு அங்கே பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. வீடு பூட்டியிருந்தது. அதனால் பக்கத்து வீட்டுக்காரர்களிடம் விசாரித்தபோது, வீட்டிலிருந்த எல்லா பொருட்களையும் எடுத்துக்கொண்டு கொண்டு மகாலட்சுமி எப்போவே போய் விட்டதாக சொன்னார்கள். செல்போன் ஸ்விட்ச் ஆப் என்பதால்…
Read More