காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் திருமணம் முடிந்த உடன் தம்பதிக்குள் பிரச்சினை நடந்ததால் திருமண மண்டபத்துக்கே வழக்கறிஞர்களை வரவழைத்து இருவரும் விவாகரத்து பெற்றனர். திருமணத்துக்கு முதல் நாள் மாப்பிள்ளை அழைப்பு, விருந்து என கல்யாண மண்டபமே திருவிழாவாக காட்சி அளித்தது.காலை முகூர்த்த நேரத்தில் இருவருக்கும் திருமணம் நல்லபடியாக நடந்தது. இதையடுத்து உறவினர்களின் பரிசு பொருட்களை பெறுவதும், புகைப்படம் எடுப்பதில் தம்பதினர் ஓய்வில்லாமல் இருந்தார். இதைத் தொடர்ந்து இருவரும் சேர்ந்து உணவு அருந்த உணவுக் கூடத்துக்கு சென்றனர். அங்கு நன்றாக பேசிக் கொண்டிருந்த இருவரிடையே திடீரென உணவு விஷயத்தில் சண்டை ஏற்பட்டது. பின்னர் சரியாகிவிடும் என பார்த்தால் அது அதிகமாக முற்றியது. இரு வீட்டாரும் சமாதானம் செய்யவில்லை .அவர்களும் உணவுக் கூடத்தில் சண்டையிட்டனர்.பிறகு காவல்துறையினர் வந்தும் பயனில்லை .பின்னர் புதுமணத் தம்பதினர் தங்களது வழக்கறிஞர்களை திருமண மண்டபத்துக்கு வரவழைத்தனர். பிறகு…
Read MoreAuthor: Tamil News Online
தமிழக டிஜிபி :காவல்துறையினர் கைப்பேசி பயன்படுத்த கட்டுப்பாடு மீறினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்
தமிழ்நாடு:பணியில் உள்ள தமிழக காவல்துறையினர் கட்டுப்பாட்டை மீறி கைப்பேசி பயன்படுத்தினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக டிஜிபி டி.கே. ராஜேந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்தாண்டு நவம்பர் மாதத்தின் போது டிஜிபி ராஜேந்திரன் சுற்றறிக்கை ஒன்றை வெளிட்டார். அதில் அனைத்து பிரிவில் உள்ள காவல்துறையினரும் பணியின் போது கைப்பேசி பயன்படுத்தக் கூடாது என உத்தரவிட்டிருந்தார். ஆனால் சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தின் போது ஆறு காவலர்கள் கைப்பேசி பயன்படுத்தியதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதுமட்டும் இல்லாமல் அவர்களை காத்திருப்போர் பட்டியலுக்கு மாதப்பட்டனர், மன்னிப்புக் கடிதம் எழுதி கொடுத்த பிறகு விடுவிக்கப்பட்டனர். டிஜிபி ராஜேந்திரன் நேற்று முன்தினம் தமிழகத்தில் உள்ள அனைத்து பிரிவு காவல்துறைக்கும் மீண்டும் ஒரு சுற்றறிக்கையை வெளிட்டுள்ளார். அதில் குறிப்பிட்டுள்ளது என்னவென்றால் பணியில் ஈடுபடும் காவலர்கள் கைப்பேசியை தங்கள் வசம் எடுத்து செல்லக்கூடாது ,அதை…
Read Moreகொடநாடு கொலைவழக்கில் குற்றவாளிகளின் ஜாமீனை ரத்து செய்ய மனுத்தாக்கல்
கொடநாடு :கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் சயான் மற்றும் மனோஜ் குற்றவாளிகளின் ஜாமினை ரத்து செய்ய உதகை மாவட்ட நீதிமன்றத்தில் அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொடநாட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட்டில் காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டார் . அதே சமயத்தில் கொள்ளையும் நடைபெற்றது.இந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கில் 11 பேர் ஈடுபட்டதாக காவல்துறை தெரிவித்தனர். இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தார். இரண்டாம் குற்றவாளியான சயானின் மனைவி மற்றும் குழந்தையுடன் காரில் விபத்தில் உயிரிழந்தனர். சயான் மற்றும் உயிர்தப்பினார்.அவர் படுகாயத்துடன் சயான் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கேரள மாநிலத்தை சேர்ந்த திபு, ஜிதின் ஜாய், ஜம்சீர் அலி, சந்தோஷ் சமி, மனோஜ், உதயகுமார், சதீசன், வாளையார் மனோஜ்…
Read Moreகும்பகோணத்தில் ரவுடி சக்திவேல் வெட்டிக்கொலை!
கும்பகோணம் : ராமகிருஷ்ணா நகர் மாதுளை பேட்டை தெருவில் வசித்த ரவுடி சக்திவேல் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சங்கரின் மகன் சக்திவேல் வயது 25 அந்த பகுதியில் ரவுடி என்று கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக இவருக்கு மற்றவர்களுக்கும் மோதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது . நேற்று இரவு கும்பகோணம் உள்ள பத்தடி பகுதியிலிருந்து வந்த இருபதுக்கும் மேற்பட்டோர் சக்திவேலை சரமாரியாக வெட்டி உடலை அங்குள்ள பாதாள சாக்கடையில் போட்டு விட்டு அந்த கும்பல் ஓடி விட்டதாக கூறப்படுகிறது. இதை அறிந்த காவல் துறையினர் பாதாள சாக்கடையில் இருந்து சடலத்தை கைப்பற்றி இது சம்மந்தமாக விசாரணை நடத்தி வருகின்றனர் . இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Read Moreகுடி போதையில் பிரசவம் பார்த்த ஆண் நர்ஸ்..
ஜெய்ப்பூர்: ஆண் நர்ஸ் குடி போதையில் பெண்ணுக்கு பிரசவம் பார்த்ததால் குழந்தை கொடூரமாக இறந்துவிட்டது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மர் மாவட்டத்தை சேர்ந்த திலோக்பதி , அவரின் மனைவி தீக்ஷா கன்வர் நிறைமாத கர்ப்பிணி என்பதால் திலோக்பதி ராம்காரில் உள்ள அரசு சுகாதார மையத்தில் மனைவியை சேர்த்தார்.ஆனால் பணியில் டாக்டர் மற்றும பெண் நர்சுகளும் அங்கு இல்லாததால் கவலை அடைந்தார் . குடி போதையில் ஆண் நர்ஸ் அமிர்த்லால் மற்றும் உதவியாளரும் அங்கு இருந்தார். வலியால் பெண் துடிப்பதை பார்த்ததும் தானே பிரசவம் பார்க்க ஆரம்பித்தார். இந்த பிரசவத்தில் தலைக்கு பதிலாக இந்த குழந்தையின் கால் முதலில் வந்தது .பிரசவத்தின் போது குழந்தையின் உடல் மட்டும் வந்துவிட்டது , ஆனால் தலை கர்ப்ப பையிலேயே தங்கிவிட்டது. பிறகு மனைவியை ஜோத்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தபோது பரிசோதித்த டாக்டர்கள், குழந்தையின்…
Read Moreபொறாமையால் இளம் தம்பதி தூக்கிட்டு தற்கொலை
திருப்பூர்:பல்லடம் பகுதியைச் சேர்ந்த தம்பதி முத்துக்கிருஷ்ணன் – லாவண்யா. இருவருக்கும் ஒன்றரை வருடம் முன் கல்யாணம் ஆகியும் தம்பதிக்கு குழந்தை கிடையாது. லாவண்யா முத்துகிருஷ்ணனை விட கொஞ்சம் அதிகம் படித்தவர் என்பதால் பொறாமை பிரச்சனையை இருந்து வந்தது. முத்துக்கிருஷ்ணன் பனியன் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார் . இவர்களுக்குள் பொறாமை பிரச்சனையால் அடிக்கடி சண்டை ஏற்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. நேற்றுமுன்தினம் இரவு சண்டை நடந்துள்ளது. அக்கம்பக்கம் வீட்டில் உள்ளவர்கள் வழக்கம்போல் சண்டை என்று கண்டு கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது . நேற்று காலையில் அவர்களது வீடு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் போலீசுக்கு தகவலை அறிந்து போலீசாரும் விரைந்து வந்து கதவை உடைத்த போது இருவரும் ஒரே புடவையை கழுத்தில் சுற்றியபடி தூக்கில் சடலமாக தொங்கி கொண்டிருந்தனர்.இருவரின் உடல்களையும் மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் .…
Read Moreகள்ளக்குறிச்சி 33வது மாவட்டமாக உதயமானது: முதல்வா் அறிவிப்பு
சட்டப்பேரவை கூட்டத்தில் இன்று கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக அறிவித்து உத்தரவிட்டுள்ளாா் முதல்வா் பழனிசாமி . முதல்வரின் அறிவிப்பைத் தொடா்ந்து தமிழகத்தின் 33வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி உதயமாகியுள்ளது . கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக அறிவித்து சட்டப்பேரவையில் முதல்வா் பழனிசாமி இன்று உத்தரவிட்டார்.முதல்வரின் அறிவிப்பைத் தொடா்ந்து சட்டப்பேரவை உறுப்பினா்கள் முதல்வருக்கு நன்றி தொிவித்தனா். தமிழகத்தில் தற்போது 32 மாவட்டங்கள் உள்ளன. இந்நிலையில் விழுப்புரம் பெரிய மாவட்டம் என்பதாலும் , அரசு பணிகளை முடிப்பதில் கடினம் என்பதால் கள்ளக்குறிச்சி மக்கள் கோாிக்கை விடுத்திருந்தனா். அதே கோாிக்கையை சட்டப்பேரவை உறுப்பினா்களும் முன்வைத்தனா். இன்று சட்டப்பேரவை கூட்டத்தின் போது முதல்வா் பழனிசாமி விழுப்புரத்தில் இருந்து கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக அறிவிப்பதாக முதல்வா் தொிவித்தாா். விழுப்புரம் மாவட்டத்தில் 11 சட்டப்பேரவை, 2 மக்களவை தொகுதிகள் இருந்து வந்தன. இந்நிலையில் தமிழகத்தின் 33வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி உதயமானது…
Read Moreபெண் எஸ்.ஐயின் கழுத்தில் தாலி கட்ட முயன்ற போலீஸ்காரர் !
சென்னை:சென்னை நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் எஸ்.ஐ.யாக வேலை பார்த்து வருபவர் மணிமேகலை அவருக்கு வயது 24. நுங்கம்பாக்கம் காவல் குடியிருப்பிலேயே வசித்து வருகிறார். இதற்கு முன்பு காட்பாடியில் பயிற்சி எஸ்.ஐ,.யாக பணியாற்றி வந்தபோது அதே சமயத்தில் , ஊர் காவல் படை காவலராக மணிமேகலையுடன் வேலை பார்த்தவர் பாலசந்திரன். இவர் மணிமேகலையை ஒருதலை காதல் செய்துத்துள்ளார் . சில நாளில் மணிமேகலைக்கு வேறு ஒருவருடன் கல்யாணம் ஆகிவிட்டது. ஆனால் அதையும் மீறி பாலச்சந்திரன் மணிமேகலையை அடிக்கடி தன்னை காதலிக்குமாறு தொந்தரவு செய்து வந்துள்ளார். மணிமேகலை பல முறை கண்டித்து பாலச்சந்திரனுக்கு மணிமேகலையை மறக்க முடியவில்லை. இதனால் நேரில் எச்சரிக்கை கொடுக்கலாம் என்று மணிமேகலை பாலச்சந்திரனை எழும்பூருக்கு வரவைத்தார். மணிமேகலை பாலச்சந்திரனிடம், தனக்கு காதலில் விருப்பம் இல்லை என்றும், ஏற்கனவே கல்யாணம் நடந்ததை பற்றியும் சொல்லி எச்சரித்தார் . பிறகு…
Read Moreஉ.பியில் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் இடையே முடிவான லோக்சபா தொகுதி
டெல்லி: உத்தர பிரதேசம் மாநிலத்தில் லோக்சபா தேர்தலின் போது பாஜக ,காங்கிரசுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் அகிலேஷ் யாதவும், மாயாவதியும் கூட்டணிக்கு முடிவு செய்துள்ளார்கள் . இருவரும் தொகுதிகளை பங்கிட்டு கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது . அகிலேஷ் யாதவும், மாயாவதியும் சந்தித்து பேசியிருப்பது தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் அமைச்சரவையில் அகிலேஷ் மற்றும் மாயாவதி கட்சி உறுப்பினர்களுக்கு அமைச்சர் பொறுப்பு எதையும் காங்கிரஸ் அளிக்கவில்லை என்பதால் இந்த சந்திப்பு நடைபெற்றதாக தெரிகிறது. உத்தரப்பிரதேசத்தில் மொத்த லோக்சபா தொகுதிகளில் இரு கட்சிகளும் தலா 37 தொகுதிகளை பிரித்து கொண்டதாக கூறப்படுகிறது . சோனியா மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் போட்டியிடும் அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளில் வேட்பாளர்களை இந்த கூட்டணி நிறுத்த போவதில்லை என தெரியவந்துள்ளது. சமீபத்தில் நடைபெற்ற கோரக்பூர், புல்பூர்…
Read Moreகர்ப்பிணிக்கு எச்ஐவி ரத்தம் அளித்த இளைஞர் பலி…
விருதுநகர்: 4 நாட்களுக்கு முன் கர்ப்பிணிக்கு எச்ஐவி பாதிக்கப்பட்ட ரத்தத்தை கொடுத்த 19 வயது இளைஞர் ராமநாதபுரத்தில் தற்கொலைக்கு முயன்றார். தற்கொலைக்கு முயன்ற இளைஞர் சிகிச்சை பலனின்றி பலியாகி உள்ளார். இந்த இளைஞர் தெரியாமல் செய்திருந்தாலும் குற்றஉணர்ச்சியால் தற்கொலைக்கு முயன்றார் என கூறப்படுகிறது . இந்த இளைஞர் வெளிநாடு செய்வதற்காக மதுரையில் மருத்துவப் பரிசோதனை செய்த பிறகு தான் அவருக்கு எச்ஐவி பாதிப்பு இருப்பது பற்றி தெரியவந்தது. இதை அறிந்த அந்த இளைஞர் சிவகாசி அரசு மருத்துவமனைக்குச் சென்று அது எச்ஐவி பாதிப்பு உள்ள ரத்தம் என்றும் அதை யாருக்கும் செலுத்த வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.இதை மீறியும் கர்ப்பிணிக்கு எச்ஐவி பாதிக்கப்பட்டதை அறிந்து தற்கொலைக்கு முயன்றார் .
Read More