சென்னை: ஷேக் அப்துல்லா கடந்த ஆண்டு ஆன் லைன் மூலம் பட்டாசுகளை விற்க தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.சென்னை உயர்நீதிமன்றம் பட்டாசுகள் விற்க தடை விதித்து உத்தரவிட்டது. அந்த உத்தரவை அமல்படுத்தவில்லை என்று கூறி காவல்துறைக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ஷேக் அப்துல்லா தொடர்ந்தார்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆதிகேசவலு ஆன் லைன் மூலம் பட்டாசு விற்பனை செய்யும் இணையதளங்களை முடக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டார்.
Read MoreAuthor: Tamil News Online
பண மோசடி வழக்கில் டி.கே.சிவகுமாருக்கு டெல்லி ஐகோர்ட் ஜாமீன் வழங்கியது
டெல்லி: பண மோசடி வழக்கில் காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் மீது அமலாக்க இயக்குநரகம் வழக்கு பதிவு செய்தது.செப்டம்பர் 3 ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமாருக்கு டெல்லி உயர் நீதிமன்றம் புதன்கிழமை ஜாமீன் வழங்கியது.அவர் நீதிமன்றத்தின் அனுமதியின்றி நாட்டை விட்டு வெளியேற முடியாது என்று நீதிபதி தெரிவித்தார்.
Read Moreஆன்லைன் மோசடி மூலம் இழந்த தொகையை வாடிக்கையாளர்களிடமிருந்து வங்கிகளால் மீட்டெடுக்க முடியாது – கேரள உயர்நீதிமன்றம்
எர்ணாகுளம்:மூன்றாம் நபர்கள் தங்கள் கணக்குகளில் இருந்து ஆன்லைனில் பணம் மோசடி பரிவர்த்தனைகள் செய்ததாக குற்றம் சாட்டிய இருவர் கேரளா உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.மனு நீதிபதி ஏ. முஹம்மது முஸ்டாக் முன் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி கடன் கணக்கில் இருந்து திரும்ப பெறுவதற்கு மனுதாரர்கள் தான் பொறுப்பு என்பதை சிவில் நீதிமன்றம் மூலம் நிரூபிக்காமல் அவர்கள் பொறுப்பேற்க முடியாது.மேலும் மனுதாரர்களால் செலுத்தப்பட்ட தொகை அதே முறையில் மோசடி பரிவர்த்தனை செய்யப்பட்டிருந்தால் தீர்ப்பின் நகலைப் பெற்ற நாளிலிருந்து இரண்டு வாரங்களுக்குள் அந்த பணத்தை திருப்பி செலுத்த வேண்டும் என்று நீதிபதி தெரிவித்தார்.மோசடி பரிவர்த்தனைக்கு யார் காரணமோ அவர்கள் தான் பொறுப்பேற்க முடியும் என்று நீதிபதி தெரிவித்தார்.
Read Moreவெளிநாட்டிற்கு செல்லும் பயணிகளுக்கு டூட்டி பிரீ ஷாப் கடைகளில் ஜிஎஸ்டி இல்லை: மும்பை உயர்நீதிமன்றம்
மும்பை : ஃப்ளெமிங்கோ டிராவல் ரீடெய்ல் லிமிடெட் நிறுவனம் மும்பை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது . அந்த மனு நீதிபதி ரஞ்சித் மோர் மற்றும் பாரதி டாங்க்ரே அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அந்த மனுவில் மும்பை சர்வதேச விமான நிலையத்தில் ஃப்ளெமிங்கோ டிராவல் ரீடெய்ல் லிமிடெட் நிறுவனம் டூட்டி பிரீ ஷாப் கடை வைத்துள்ளனர்.விற்பனை வரி துணை ஆணையர் விற்பனையை தொடர்ந்து உள்ளீட்டு வரிக்கடன் பணத்தை திரும்ப தர மறுத்துவிட்டார்.ஆனால் எங்களுக்கு இந்தியாவில் உள்ள எங்களுடைய மற்ற சர்வதேச விமான நிலைய டூட்டி பிரீ ஷாப் கடைக்கு உள்ளீட்டு வரிக் கடன் பணம் திரும்ப கிடைப்பதாக தெரிவித்தனர். மனுவை விசாரித்த நீதிபதி ரஞ்சித் மோர் மற்றும் பாரதி டாங்க்ரே அடங்கிய அமர்வு வெளிநாட்டிற்கு செல்லும் பயணிகளுக்கு டூட்டி பிரீ ஷாப் கடைகளில் ஜிஎஸ்டி இல்லை…
Read Moreசெவிலியர் பணிக்கு தகுதி மதிப்பெண்ணை விட குறைவான மதிப்பெண்கள் பெற்றவர்களை நியமிக்க தடை-சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை: கடந்த ஜூலை 23 ஆம் தேதி செவிலியர் பணிக்கு தேர்வு நடைபெற்றது.ஆனால் தற்காலிக தேர்வு என்ற பெயரில் தகுதி மதிப்பெண்ணை விட குறைந்த மதிப்பெண் பெற்ற 56 பேரை தற்காலிகமாக தேர்வு செய்து, சான்றிதழ் சரிபார்ப்புக்கு அறிவிப்பாணை வெளியிட்டதை தடை விதிக்க கோரி சென்னையை சேர்ந்த செவிலியர் பட்டதாரி திவ்யபாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.அந்த மனு நீதிபதி தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பாணைக்கு தடை விதித்து ,மேலும் தகுதி மதிப்பெண்களுக்கு குறைவான மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்க தடை விதித்து உத்தரவிட்டார்.அக்டோபர் 14 ஆம் தேதிக்குள் மருத்துவ பணிகள் வாரியம் பதிலளிக்குமாறு உத்தரவிட்டார்.
Read Moreபிரதமர் மோடி மற்றும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை வரவேற்க பதாகைகளை அமைக்க அனுமதி – சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை: நகராட்சி நிர்வாக ஆணையர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அக்டோபர் மாதம் 11-13 ஆம் தேதி மாமல்லபுரத்தில் மோடி மற்றும் ஜி ஜின்பிங் சந்திக்க உள்ளனர்.அவர்களை வரவேற்க பதாகைகளை அமைக்க அதிகாரிகள் அனுமதி வழங்கவில்லை. பதாகைகளை அமைக்க அனுமதி வழங்க கோரி மனுதாக்கல் செய்தனர்.அந்த மனு நீதிபதிகள் எம் சத்தியநாராயணன் மற்றும் என் சேஷசாயி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.மனுவை விசாரித்த நீதிபதிகள் பதாகைகளை அமைக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டனர். பதாகைகளை அமைக்க இருக்கும் விதிகளை அரசு பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்தனர்.
Read Moreஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரத்தின் ஜாமீன் மனு தள்ளுபடி – டெல்லி உயர்நீதிமன்றம்
டெல்லி :ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் தாக்கல் செய்த வழக்கமான ஜாமீன் மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. நீதிபதி சுரேஷ்குமார் கைட் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார். பாரின் மூத்த உறுப்பினர் மற்றும் முன்னாள் மத்திய நீதி அமைச்சர் என்பதால் சாட்சிகளை அழிக்க வாய்ப்பு உள்ளதாக நீதிபதி தெரிவித்தார்.
Read Moreமதுபானம் வாங்குவதற்கான குறைந்தபட்ச வயது வரம்பு குடிப்பதற்கு பொருந்தாது: டெல்லி உயர்நீதிமன்றம்
டெல்லி :டெல்லி கலால் சட்டம், 2009 இன் 23 வது பிரிவை ரத்து செய்ய கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.மனு தலைமை நீதிபதி டி என் படேல் மற்றும் சி ஹரிசங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.மனுவை விசாரித்த நீதிபதிகள் மதுபானம் வாங்குவதற்கான குறைந்தபட்ச வயது வரம்பு வயது 25 ஆண்டுகள்,ஆனால் டெல்லி கலால் சட்டத்தின் கீழ் மது அருந்துவதற்கான குறைந்தபட்ச வயது 25 ஆண்டுகள் என்பது ஒருதவறான கருத்து என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.இதனால் டெல்லி கலால் சட்டம், 2009 இன் 23 வது பிரிவை ரத்து செய்ய கோரும் மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
Read Moreமருத்துவ கலந்தாய்வை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு
மதுரை: மதுரையை சேர்ந்த சோம்நாத், நேயா, ஸ்ரீலயா ஆகியோர் வெளிமாநிலத்தவர்கள் பங்கேற்ற தமிழக மருத்துவ கல்லூரிகளுக்கான கலந்தாய்வை ரத்து செய்து மீண்டும் புதிய மருத்துவ கலந்தாய்வு நடத்த கோரி மனுதாக்கல் செய்தனர்.மனு நீதிபதி எம்.சுந்தர் முன் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி எம்.சுந்தர் தமிழகத்தில் இருப்பிட சான்றிதழ் பெறுவதில் விதிமீறல் ஏதேனும் செய்திருந்தால் மாணவர்களின் சான்றிதல்களை மீண்டும் சரிபார்க்கலாம் என்று தெரிவித்தார்.ஆனால் மீண்டும் புதிய மருத்துவ கலந்தாய்வு நடத்துவது வாய்ப்பு இல்லை என நீதிபதி தெரிவித்தார்.
Read Moreசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வி கே தஹில்ரமணி ராஜினாமாவை ஜனாதிபதி ஏற்று கொண்டார்
சென்னை :சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில்ரமணியை மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு பணிமாற்றம் செய்தனர் .இந்தியாவில் உள்ள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளில் மூத்தவரான நீதிபதி தஹில்ரமணி மேகாலயா. மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு பணிமாற்றம் உத்தரவை ரத்து செய்ய அவர் விடுத்த கோரிக்கையை உச்சநீதிமன்றத்தின் கொலீஜியம் அமைப்பு நிராகரித்தது.இதனால் அவர் ராஜினாமா செய்தார்.நேற்று ராஜினாமாவை ஜனாதிபதி ஏற்று கொண்டார்.
Read More