சச்சின் தெண்டுல்கரை பாகிஸ்தான் பத்திரிக்கைகள் புகழ்ந்ததால் கடுப்பான தலிபான்கள் எச்சரிக்கை..

Pakistan Banned Taliban condemns Pakistan media for appreciating Sachin tendulkar and criticizing their country Cricket captain.

சச்சின் தெண்டுல்கரை பாகிஸ்தான் பத்திரிக்கைகள் புகழ்ந்ததால் கடுப்பான தலிபான்கள் எச்சரிக்கை..

இஸ்லாமாபாத்: கடந்த 16–ந்தேதி கிரிக்கெட் விளையாட்டில் சகாப்தமான தெண்டுல்கர் ஓய்வு பெற்றார். உலகம் முழுவதும் உள்ள பத்திரிக்கைகள் மற்றும் தொலைகாட்சிகள் அவரை புகழ்ந்து பாராட்டின. அதே போல பாகிஸ்தான் பத்திரிக்ககளும் தொலைகாட்சிகளும் சச்சின் டெண்டுல்கரை புகழ்ந்து தள்ளின.

சச்சின் தெண்டுல்கர் இல்லாததால் கிரிக்கெட் விளையாட்டு ஏழையாகி விடும் என அந்த நாட்டு பத்திரிகைகள் தெரிவித்தன. அவருடைய விளையாட்டுக்கு நிகரான வீரர் இல்லை என பாராட்டின.

இந்நிலையில் சச்சின் தெண்டுல்கரை புகழ்ந்து தள்ளுவதை பாகிஸ்தான் ஊடகங்கள் உடனடியாக நிறுத்த வேண்டும் என பாகிஸ்தான் ஊடகங்களுக்கு தலிபான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பாகிஸ்தான் நாட்டில் தெஹ்ரிக்– இ–தலிபான் எனும் தடை செய்யப்பட்ட அமைப்பு பாகிஸ்தான் ஊடகங்களுக்கு ஓர் எச்சரிக்கை வீடியோ பதிவினை அனுப்பி உள்ளது. அந்த வீடியோ பதிவினில் தலிபான் செய்தி தொடர்பாளர் சசிதுல்லா சக்த் கூறியுள்ளதாவது :-

பாகிஸ்தான் ஊடகங்கள் கடந்த சில வாரங்களாக தெண்டுல்கரை புகழ்ந்து வருகின்றன. பல பத்திரிகைகளில் பக்கம் பக்கமாக கட்டுரை எழுதபடுகிறது. தொலைகாட்சிகளில் சிறப்பு செய்திகள் தினமும் வருகிறது. இப்படி ஒரு இந்திய கிரிக்கெட் வீரரை பாராட்டுவது பாகிஸ்தானுக்கு இழுக்காகும்.

சச்சின் டெண்டுல்கர் ஒரு சிறந்த வீரர் என்பதில் சந்தேகம் இல்லை, அதற்காக அவரை இப்படி பாராட்ட வேண்டிய அவசியம் இல்லை. அதாலால் அவரை புகழ்ந்து எழுத வேண்டாம். சச்சின் ஒரு இந்தியர் என்பதை பாகிஸ்தான் மறந்து விட கூடாது.

அதே வேளையில் பாகிஸ்தான் ஊடகங்கள் அந்த நாட்டு கிரிகெட் அணியின் கேப்டன் மிஸ்பா–உல்– ஹக்கை அணியின் தோல்விக்காக மிகவும் மோசமாக விமர்சிக்கின்றன. ஊடகங்கள் தங்களது நாட்டு விளையாட்டு வீரர்களை விமர்சிப்பது கண்டனத்துக்கு உரியது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Pakistan Banned Taliban condemns Pakistan media for appreciating Sachin tendulkar and criticizing their country Cricket captain.

Related posts