இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு : 121 கோடி

இந்தியாவின் மொத்த மக்கள் தொகை 121 கோடியே 7 லட்சத்து 26 ஆயிரத்து 932.

Census 2011

மத்திய உள்துறை மந்திரி சுஷில் குமார் ஷிண்டே ஏப்ரல் 30ம் தேதி பாராளுமன்றத்தில் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பான அறிக்கையை வெளியிட்டார். அவ்வறிக்கையில் 1-3-2011 நிலவரத்தின் படி மேற்குறிப்பிட்ட தொகை கணக்கிடப்பட்டுள்ளது. கடந்த 2001ம் ஆண்டு மக்கள் தொகையை விட இது 1 கோடியே 81 லட்சத்து 96 ஆயிரம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. அதிகரித்த மக்கள் தொகையில் 90 லட்சத்து 99 ஆயிரம் பெண்களும், 90 லட்சத்து 97 ஆயிரம் ஆண்களும் அடங்குவர். தற்போதைய மக்கள் தொகை அதிகரிப்பு முந்தைய கணக்கெடுப்பை விட 17.7 சதவீதம் என்று தெரிய வந்துள்ளது. இதில் பீகார் மாநிலத்தில் மட்டும் 25.4 சதவீதம் மக்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 83 கோடியே 33 லட்சத்து 50 ஆயிரம் பேர் கிராமப் புறங்களில் வசிக்கின்றனர். பெருநகரம் மற்றும் நகர்புறங்களில் 37 கோடியே 71 லட்சத்து 76 ஆயிரத்து 932 பேர் வசிப்பதாக அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நகர்புற மக்கள் தொகையில் அதிகம் பேர் (97.5 சதவீதம்) டெல்லியிலும், 62.2 சதவீதம் பேர் கோவாவிலும், 52.1 சதவீதம் பேர் மிசோரத்திலும், 48.4 சதவீதம் பேர் தமிழ் நாட்டிலும், 45.2 சதவீதம் பேர் மகாராஷ்டிராவிலும் வசிக்கின்றனர் என அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts