U/S, 12 குடும்ப வன்முறைச் சட்டத்தின் விண்ணப்பங்களை முதல் விசாரணை தேதியிலிருந்து 60 நாட்களுக்குள் முடிவுக்கு கொண்டுவர மாஜிஸ்திரேட் கட்டுப்பட்டுள்ளார் : கர்நாடக உயர் நீதிமன்றம்

U/S, 12 குடும்ப வன்முறைச் சட்டத்தின் விண்ணப்பங்களை முதல் விசாரணை தேதியிலிருந்து 60 நாட்களுக்குள் முடிவுக்கு கொண்டுவர மாஜிஸ்திரேட் கட்டுப்பட்டுள்ளார் : கர்நாடக உயர் நீதிமன்றம்

கர்நாடகா : குடும்ப வன்முறையில் இருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம், 2005, பிரிவு 12 ன் கீழ் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பத்தை, அது சமர்ப்பிக்கப்பட்ட நாளிலிருந்து இரண்டு மாதங்களுக்குள் (அறுபது நாட்களுக்குள்) மாஜிஸ்திரேட் முடிவு எடுக்க வேண்டும், என்று கர்நாடக உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
ராஜம்மா. எச் அவர்கள் குற்றவியல் மற்றும் ஜீவனாம்சம் கோரி தாக்கல் செய்த விண்ணப்ப மனுவை ஏற்ற, பெங்களூரு பெருநகர மாஜிஸ்திரேட்டுக்கு, ஜீவனாம்சம் கோரிய குற்றவியல் விண்ணப்பத்திற்கு , இரண்டு வார காலத்திற்குள் மனுதாரர் தாக்கல் செய்த மனுவை முடித்துவைக்குமாறு நீதிபதி எம்.நாகபிரசன்னாவின் தனி நீதிபதி அமர்வு, உத்தரவிட்டது.
மனுதாரர் தனக்கு ஆதரவாக ஜீவனாம்சம் கோரி இடைக்கால மனுவை 12-11-2021 அன்று தாக்கல் செய்தார். 20-12-2021 அன்று வழக்கில் அறிவிப்பு வெளியிடப்பட்டது, அதன் பிறகு, பராமரிப்பு கோரிய அவரது விண்ணப்பம் பரிசீலிக்கப்படவில்லை.இதனால் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட இடைநிலை/முக்கிய விண்ணப்பத்தை மூன்று மாதங்களுக்குள் முடித்துவைக்க உத்தரவிடுமாறு கோரி மனுதாரர் உயர் நீதிமன்றத்தை அணுகினார்.
ஒவ்வொரு விண்ணப்பமும் சட்டத்தின் 12வது பிரிவின்படி சமர்ப்பிக்கப்பட்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் மாஜிஸ்திரேட்டால் தீர்மானிக்கப்பட வேண்டும் என்று வழக்கறிஞர் ராகவேந்திர கவுடா. கே,வாதிட்டார். எனவே விதிகளுக்கு இணங்காததால், இடைக்கால விண்ணப்பத்தை மாஜிஸ்திரேட் விரைந்து முடிக்க உத்தரவிடக் கோரினார்.
“எனவே, மனுதாரருக்கு இந்த நீதிமன்றத்தின் மாண்டமஸ் அல்லது பராமரிப்புக்கான விண்ணப்பத்தை விரைவாகத் தீர்ப்பதற்கு கற்றறிந்த மாஜிஸ்திரேட்டுக்கு உத்தரவு பெற உரிமை உண்டு. ஆகவே ” பராமரிப்புக்கான விண்ணப்பத்தை விரைவாகத் தீர்ப்பதற்கு உயர் நீதிமன்றம் மாஜிஸ்திரேட்டுக்கு உத்தரவிட்டது. .”
உயர்நீதிமன்ற உத்தரவின் நகல் கிடைத்த நாளிலிருந்து இரண்டு வாரங்களுக்குள் மனுதாரர் தாக்கல் செய்த மனுவை தீர்த்து வைக்குமாறு மாஜிஸ்திரேட்டுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Related posts