திருச்சி: கோபி கண்ணன் திருச்சியில் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். அவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளன. திருச்சியில் உள்ள பீமநகர் பகுதியில் அவரது மாமனார் வீட்டில் வசித்து வந்தார். நேற்று மாலை தனது வீட்டின் அருகே மகளுக்கு சைக்கிள் ஓட்ட கற்று கொடுத்தபோது திடீரென வந்த 6 பேர் கொண்ட கும்பல் கோபி கண்ணனை மகள் கண் முன்னே வெட்டிப் படுகொலை செய்ததாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த உதவி ஆணையர் மணிகண்டன் விசாரணை நடத்தி உடலை பிரேதப் பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தார். அந்த பகுதியில் சிசிடிவி கேமராக்களில் காட்சிப் பதிவுகளை காவல்துறையினர் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related posts
அதிர்ச்சி: அண்ணா பல்கலைக்கழகத்தில் 2000 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை!
தமிழகத்தின் மிகப்பெரிய தொழில்நுட்பக் கல்வி நிறுவனமான அண்ணா பல்கலைக்கழகத்தில் அதிர்ச்சியூட்டும் மோசடி அம்பலமாகியுள்ளது. மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் வகையில், சுமார் 2000-க்கும்...எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களுக்குள் சண்டை: ஐந்து பேருக்கு காயம்!
சென்னை: எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில் இன்று (2024-07-20) மதியம் வழக்கறிஞர்கள் இரு தரப்பினருக்கு இடையே நடந்த மோதலில் ஐந்துக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்களுக்கு...திருநெல்வேலி சிறுவனை காதல் வலை வீசி மயக்கிய 24 வயது பெண் – போக்சோ வழக்கு பதிவு!
July 13 2024; திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி (Nanguneri) பகுதியைச் சேர்ந்த 17 வயது பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் ஒருவரை, அதே...