அமெரிக்காவை எச்சரித்து விளாதிமிர் புதின் அறிக்கை

putin warns US action against syria சிரியா மீது அமெரிக்கா ஒருதலைப்பட்சமாக தாக்குதல் நடத்தக் கூடாது என்று ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக அமெரிக்காவைச் சேர்ந்த ஏ.பி. செய்தி நிறுவனத்துக்கும் ரஷ்ய அரசின் சேனல்-1 தொலைக்காட்சிக்கும் அவர் அளித்த பேட்டியில் கூறியது: சிரியாவுக்கு எதிரி நாடுகளின் தாக்குதலில் இருந்து பாதுகாப்பு அளிக்கக் கூடிய எஸ்-300 ரக ஏவுகணைகளின் பாகங்களை ரஷியா வழங்கியுள்ளது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அனுமதியின்றி சிரியா மீது தாக்குதல் நடத்த மேற்கத்திய நாடுகள் முடிவு செய்தால் சிரியாவுக்கு கூடுதலாக ஏவுகணை பாகங்கள் விற்பனை செய்யப்படும். சிரியாவில் கிளர்ச்சியாளர்களை எதிர்த்து ராணுவம் போரிட்டு வருகிறது. இந்தச் சூழ்நிலையில் ராணுவம் ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியது என்று கூறுவது கேலிக்குரியது. அந்த ஆயுதங்களைப் பயன்படுத்தினால் அதையே சாக்காகக் கூறி தங்கள் நாட்டின் மீது தடைகள் விதிக்கப்படவும்,…

Read More

சீனாவில் உள்ள ஆற்றில் 100 டன் மீன்கள் செத்து மிதந்தன

China chemical spill kills thousands of fish சீனாவின் ஹூபெய் மாகாணத்தின் பியுஹே ஆற்றில் இரசாயன தொழிற்சாலையின் அம்மோனிய கழிவுகள் கலந்தன. இதனையடுத்து அந்த ஆற்றில் இருந்த மீன்கள் எல்லாம் செத்து மிதந்தன. உடனடியாக அப்பகுதிக்கு வந்த சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் செத்து மிதந்த 100 டன் மீன்களை வெளியே எடுத்து சேகரித்தனர். கொட்டப்பட்டிருந்த அந்த இறந்த மீன்கள் பனித்திட்டுகள் போன்று காட்சியளித்தன. இதனால் அப்பகுதி மீனவர்கள் அனைவரும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்த வருடம் தொடக்கத்தில் ஷாங்காய் மாகாண ஆற்றில் இதுபோன்று 16 ஆயிரம் பன்றிகள் செத்து மிதந்து வந்த சம்பவம் அதிர்ச்சியூட்டியது. இதற்கு அந்த ஆற்றின் கரையில் இருந்த பன்றி பண்ணை மீது குற்றம் சாட்டப்பட்டது. இப்போது 100 டன் மீன்கள் இறந்துபோனதற்கு ஹூபெய் மாகாண ஒரு ரசாயன தொழிற்சாலை மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பொருளாதாரத்தில் முன்னேறி வரும்…

Read More

ஆப்கன் பார்லிமென்ட்டில் இந்துக்களுக்கு இடஒதுக்கீடு

Afghanistan: Karzai passes legislation to reserve seats for Hindus and Sikhs in National Assembly ஆப்கானிஸ்தானில் வாழும் இந்து மற்றும் சீக்கிய மக்களுக்கும் பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் வழங்கும் வகையில் பாராளுமன்ற மேல்சபையில் சிறப்பு இடங்களை ஒதுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர். அப்படி தனியாக சிறப்பு இருக்கைகளை ஒதுக்க முடியாது என ஆப்கானிஸ்தான் அரசியலமைப்பு சட்ட வல்லுனர்கள் மறுத்து விட்டனர். இந்நிலையில், வரும் பாராளுமன்ற மக்களவை தேர்தலில் இந்து மற்றும் சீக்கிய மதத்தை சேர்ந்தவர்களுக்கு 2 தொகுதிகளை ஒதுக்கி ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமித் கர்சாய் இன்று உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் தற்போது 250 ஆக இருக்கும் பாராளுமன்ற மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையில் இனி ஒரு இந்துவும், ஒரு சீக்கியரும் இடம் பெறுவர் என்பது குறிப்பிடத்தக்கது. பாராளுமன்றம் செயல்படாத வேளைகளில் சில சிறப்பு அறிவிப்புகளை வெளியிடும்…

Read More

நோக்கியா நிறுவனத்தை வாங்குகிறது மைக்ரோசாப்ட் நிறுவனம்.

Microsoft buys Nokia உலகின் முன்னணி கைபேசி தயாரிப்பு நிறுவனமான நோக்கியாவை மைக்ரோசாப்ட் நிறுவனம் வாங்கவுள்ளது. மிக வேகமாக மாறிவரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு நிறுவனங்கள் போட்டிப்போட தொடங்கவிட்டதால், சாம்சங், சோனி, ஆப்பிள் போன்றன நோக்கியாவின் இடத்தை ஆக்கிரமிக்க ஆரம்பித்துவிட்டது. இந்நிலையில் நெருக்கடியான சூழலில் நோக்கியாவை வாங்க மைக்ரோசாப்ட் முடிவு செய்துள்ளது. அதாவது 7.17 பில்லியன் டொலர்களுக்கு நோக்கியாவை வாங்குகிறது. மேலும் நோக்கியா நிறுவனத்தின் தலைமை செயல் இயக்குனரான ஸ்டீபன் எலோப் மீண்டும் மைக்ரோசாப்டிலேயே இணைவார் என்றும் தெரிகிறது. இவர் மைக்ரோசாப்டில் இருந்து தான் நோக்கியாவுக்குச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மைக்ரோசாப்ட்டின் இப்போதைய தலைவரான பால்மர் விரைவில் பதவி விலக உள்ள நிலையில், ஸ்டீபன் எலோப் மைக்ரோசாப்ட்டின் தலைவாரகவும் வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. Microsoft and Nokia today announced that the “Boards of Directors for both companies have decided to enter…

Read More

கருப்பைபுற்றுநோய் பாதித்த பெண் இரட்டை குழந்தைகளை சுமந்து கர்ப்பம்

Australian team creates IVF history with ovarian tissue transplant ஆஸ்திரேலியாவில் கருப்பை புற்றுநோய் பாதித்தால் தாயாக இயலாத நிலையில் இருந்த ஒரு பெண்ணிற்கு புதிய மருத்துவ முறைப்படி சிகிச்சை அளித்ததால் அவர் தற்போது இரட்டை குழந்தைகளை சுமந்து கர்ப்பமாக உள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வலி என்ற பெண் கருப்பையில் புற்றுநோய் பாதித்தது. இதற்கு சிகிச்சை மேற்கொண்டதால் வலியால் எப்போதும் தாயாக முடியாத நிலை ஏற்பட்டது.. 26 வயதான அப்பெணிற்கு மருத்துவர்கள் உதவ முயன்றனர். அதன்படி, வலிக்கு புற்றுநோய்க்கு சிகிச்சை செய்தபோது வெட்டியெடுக்கப்பட்ட கருப்பையின் நோய் தாக்காத பகுதியின் திசுக்கள் பாதுகாக்கப்பட்டிருந்தன.  அவற்றைப் பயன்படுத்துவதன்மூலம் அவருக்கு கருமுட்டை வளருவதற்கு மருத்துவர்கள் முயற்சித்தனர். கருப்பை திசு மாற்று சிகிச்சைக்கு பிறகு சில வருடங்களின் தொடர் முயற்சிக்குப் பின், தற்போது வலி 26 வாரம் கர்ப்பமாக உள்ளார். அவர் இரட்டைக்…

Read More

பாலியல் குற்றவாளி ஏரியல் காஸ்ட்ரோ சிறையில் தற்கொலை

Cleveland kidnapper Ariel Castro found hanging in prison cell மூன்று பெண்களைக் கடத்தி வந்து கிட்டத்தட்ட பத்தாண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக 1000 ஆண்டுகள் சிறைத்தண்டனைப் பெற்ற ஏரியல் காஸ்ட்ரோ என்ற கைதி சிறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டான். அமெரிக்கா, ஓஹையோ மாநிலத்தில் வாழ்ந்து வந்த ஏரியல் காஸ்ட்ரோ (53) என்ற ஆசாமி, கடந்த 2002ஆம் ஆண்டு முதல் 2004ஆம் ஆண்டிற்குள் மிச்சேல் நைட் (20), அமெண்டா பெர்ரி (17), கினா டிஜெசஸ் (14) என்ற மூன்று பெண்களை கடத்திச் சென்று வீட்டுச்சிறையில் வைத்து பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளான். பத்தாண்டுகளுக்கும் மேலாக ஏரியலின் கட்டுப்பாட்டில் சிறை பட்டுக்கிடந்த அவர்களில் ஒரு பெண், கடந்த மே மாதம் அங்கிருந்து தப்பினார். அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் ஏரியல் கைது செய்யப்பட்டான். பின்னர், வீட்டில்…

Read More

ஐரோப்பாவிலேயே மிக பெரிய நூலகத்தை மலாலா யூசஃபாய் திறந்தார்

Malala Yousafzai opens Europe’s biggest library in UK தாலிபான்களால் தலையில் குண்டடிபட்டு உயிர் பிழைத்த பாகிஸ்தான் மாணவி மலாலா யூசப்சாய் ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொது நூலகத்தை திறந்து வைத்துள்ளார். தாலிபான்களால் சுடப்பட்டு தலையில் குண்டடிபட்ட பாகிஸ்தான் பள்ளி மாணவி மலாலா யூசப்சாய்(16) சிகிச்சைக்காக இங்கிலாந்தில் உள்ள ராணி எலிசபெத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சைக்குப் பிறகு அவர் உயிர் பிழைத்தார். இந்த சம்பவத்தை அடுத்து அவரது குடும்பம் இங்கிலாந்தில் உள்ள பிர்மிங்காம் நகரில் செட்டிலாகிவிட்டது. தற்போது மலாலா பிர்மிங்காமில் உள்ள எட்க்பாஸ்டன் உயர்நிலைப் பள்ளியில் படித்து வருகிறார். இந்நிலையில் பிர்மிங்காம் பகுதியில் 189 மில்லியன் பவுண்ட் செலவில் பொது நூலகம் கட்டப்பட்டது. ஐரோப்பாவிலேயே மிகப் பெரிய நூலகம் இது தான். இந்த நூலகத்தை மலாலா திறந்து வைத்தார். பிர்மிங்காம் தான் இங்கிலாந்தின் இதயத்துடிப்பு. இந்த…

Read More

ஃப்ரீஸருக்கு பதிலாக 11 வயது மகளை விற்ற தாய்

Argentine woman swaps 11 year old daughter for a freezer அர்ஜெண்டினாவில் ஒரு ஃப்ரீஸருக்காக பெற்ற மகளை தாயே விற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அர்ஜெண்டினாவை சேர்ந்தவர் பாப்லா செசரினா. இவருக்கு வயது 30. நான்கு குழந்தைகளின் தாயான இவரின் கணவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.  இந்நிலையில், பியுனோவ் எய்ர்ஸ் அருகேயுள்ள பெர்னல் தொழிற்பேட்டையில் குழந்தை தொழிலாளர்களை அடைத்து வைத்து வேலை வாங்குவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.  விரைந்து சென்ற போலீசார், அங்குள்ள அலுமினியம் தொழிற்சாலையில் வேலை செய்த சிறுவர், சிறுமிகளை மீட்டனர். விசாரணையின் போது அச்சிறுமி, ஃப்ரீஸருக்கு ஆசைப்பட்ட என் தாய் என்னை ஒருவரிடம் விற்றுவிட்டார். அவர்கள் என்னை தொழிற்சாலையில் வேலைக்கு அனுப்பினர். நான் இங்கு பாலியல் தொந்தரவு, மன உளைச்சல் ஆகியவற்றிற்கு ஆளாகியுள்ளேன் எனத்தெரிவித்து போலீசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.  இதனையடுத்து,…

Read More

காதலனிடம் திருடிய பணத்தை குடலில் மறைத்த பெண்

Woman accused hides $5,000 in a body part அமெரிக்காவை சேர்ந்த ஒரு பெண் அவரது காதலனிடமிருந்து திருடிய பணத்தை ஏடாகூடமான இடத்தில் வைத்து அவதிப்பட்டுள்ளார்.  அமெரிக்காவின் டென்னிசே நகரை சேர்ந்தவர் கிறிஸ்டி பிளாக் . 43 வயதான இவர் அவரது காதலனிடம் திருடிய பணத்தை குடலில் மறைத்து வைத்துள்ளார். பிறகு அந்த பணத்தை வெளியேற்ற முடியாததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது காதலரிடமிருந்து கிறிஸ்டி 5000 டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.3 லட்சத்து 25 ஆயிரம்) திருடினார். அதை ஆசனவாய் வழியாக திணித்து குடல் பகுதியில் மறைத்து வைத்தார். பின்னர் அப்பணத்தை வெளியே எடுக்க முயற்சி செய்தார்.ஆனால், அதை வெளியே எடுக்க முடியவில்லை. அவர் மேற்கொண்ட முயற்சி காரணமாக அவருக்கு ரத்தப்போக்கு ஏற்படவே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். அங்கு தீவிர சிகிச்சைக்கு பின் குடல் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பணம் வெளியே…

Read More

ஜப்பான் மற்றும் கனடாவில் நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின

Earthquake in Japan and Canada ஜப்பான் மற்றும் கனடாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. ஜப்பானின் தெற்கு பகுதியில் இன்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் தலைநகர் டோக்கியோவிலும் அதை சுற்றியுள்ள பகுதியிலும் கட்டிடங்கள் குலுங்கின. இதை தொடர்ந்து பீதி அடைந்த மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி ஓட்டம் பிடித்தனர். சிறிது நேரம் தெருக்களில் தஞ்சம் அடைந்தனர். அங்கு 6.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானதாக அறிவிக்கப்பட்டது. டோக்கியோவின் தெற்கு பகுதியில் பூமிக்கு அடியில் 400 கி.மீட்டர் ஆழத்தில் இது உருவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பொருட்சேதம் மற்றும் உயர் சேதம் குறித்த எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. சுனாமி எச்சரிக்கையும் விடுக்கவில்லை. கனடாவில் வான்குவர் தீவில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. தொடக்கத்தில் 6.2 ரிக்டர் அளவில் பதிவானதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் அது 6 ரிக்டர் ஆக பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நில டுக்கம் காரணமாக…

Read More