சென்னை :அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி அனிதா நீட் தேர்வு தோல்வியால் தற்கொலை செய்து கொண்டார். பிறகு நீட் தேர்வில் வெற்றி பெற பயிற்சி அளிக்க வேண்டும் என்று நீதிபதி கிருபாகரன் உத்தரவு பிறப்பித்திருந்தார்.நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றவில்லை என்று தமிழக அரசுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நலவழக்கு தாக்கல் செய்யப்பட்டது.இந்த வழக்கை நீதிபதி கிருபாகரன் முன் விசாரணைக்கு வந்தது .அரசு உரிய பயிற்சி அளிக்கவில்லை என்றும், அதனால் சில மாணவிகள் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவிகள் குடும்பங்களுக்கு தமிழக அரசு இழப்பீடு வழங்கியுள்ளதா? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.தமிழக அரசு இழப்பீடு மற்றும் மாணவிகளின் தற்கொலை விவரங்களையும் அறிக்கையாக 2 வாரங்களில் தாக்கல் செய்ய நீதிபதி தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.
Related posts
துாத்துக்குடி: வக்கீலை அவதூறாக பேசிய பெண் எஸ்.ஐ., பெண் காவலர் மீது வழக்குப் பதிவு
துாத்துக்குடி: துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் வழக்கறிஞர் முத்துசாமி என்பவரை அவதூறாக பேசியதாக, பெண் உதவி ஆய்வாளர் ஆரோக்கிய ஜென்சி மற்றும் பெண்...தீவிர சைபர் கிரைம் & நிதி மோசடிக்கான மையப்படுத்தப்பட்ட விசாரணை
சென்ட்ரல் க்ரைம் பிராஞ்ச் (சிசிபி) இப்போது சென்சிடிவ் வழக்குகளில் முன்னணியில் இருப்பதால், சைபர் கிரைம் மற்றும் பொருளாதாரக் குற்றங்களைச் சமாளிப்பதற்கான அணுகுமுறையை...யூடியூப் செய்பவர்கள் மற்றவர்களின் நற்பெயருக்கு தீங்கு விளைவிக்கக் கூடாது: சென்னை உயர் நீதிமன்றம்
21 March 2024: சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் ஒரு முக்கிய தீர்ப்பை வழங்கியது. யூடியூபர்கள் மற்றவர்களின் நல்ல பெயரைக் கெடுக்கும் விஷயங்களைச்...