சென்னை: கடந்த ஆண்டு மே மாதம் ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் மாசுபடுவதாக கூறி பொதுமக்கள் மாபெரும் போராட்டம் நடத்தினர். அதில் மூன்று அப்பாவி பொதுமக்கள் காவல்துறை நடத்திய துப்பாக்கிசூட்டில் உயிரிழந்தனர்.இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.இதனால் தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தமாக மூடி சீல் வைத்து உத்தரவிட்டது. ஆலையை திறக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சசிதரன், ஆஷா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.இந்த வழக்கை விசாரிக்க தனக்கு விருப்பமில்லை என நீதிபதி சசிதரன் கூறி விலகியுள்ளார். இந்த வழக்கை விசாரிக்க வேறு நீதிபதி நியமிக்கப்படுவார் என கூறப்படுகிறது.
Related posts
எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களுக்குள் சண்டை: ஐந்து பேருக்கு காயம்!
சென்னை: எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில் இன்று (2024-07-20) மதியம் வழக்கறிஞர்கள் இரு தரப்பினருக்கு இடையே நடந்த மோதலில் ஐந்துக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்களுக்கு...திருநெல்வேலி சிறுவனை காதல் வலை வீசி மயக்கிய 24 வயது பெண் – போக்சோ வழக்கு பதிவு!
July 13 2024; திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி (Nanguneri) பகுதியைச் சேர்ந்த 17 வயது பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் ஒருவரை, அதே...பாடகர் ஆர். சுசித்ரா மீது சென்னை உயர்நீதிமன்றம் தடை உத்தரவு
சென்னை உயர்நீதிமன்றம், பின்னணி பாடகர் ஆர். சுசித்ரா (RJ சுசி) அவரது முன்னாள் கணவர் நடிகர் கார்த்திக் குமார் பற்றி எந்த...