பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த இந்திய ராணுவத்தை சேர்ந்தவர் கைது.

ISI spy arrested in jaipur

ஜெய்ப்பூர்.2013 மே 18: இந்திய ராணுவத்தில் எழுத்தர் வேலை செய்யும் அசாமை சார்ந்த சின்ஹா என்பவர் பாகிஸ்தான் உளவு நிறுவனமான ஐ எஸ் ஐ க்கு இந்திய ரகசியங்களை அனுப்பிய குற்றத்திற்காக காவல்துறை சிறப்பு உளவு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்திய ராணுவத்தில் வேலையில் சேர்ந்து கடத்த பல ஆண்டுகளாக நமது நாட்டு இராணுவத்தின் முக்கிய ரகசியங்களை ஒரு நேபாளநாட்டு ஏஜென்ட் மூலமாக விற்றது தெரிய வந்துள்ளது. உடனடியாக அவனை கைது செய்து விசாரித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கைது செய்யப்பட்ட அசாமை சார்ந்த சின்ஹா (வயது 43) என்பவர் 1995ம் ஆண்டு ஜெய்ப்பூரில் இந்திய ராணுவ எழுத்தர் வேலையில் சேர்ந்து 2000ம் ஆண்டு முதல் 2011 வரை சிலிகுரியில் உள்ள இந்திய ராணுவ கிடங்கில் தலைமை எழுத்தராக பணியாற்றி 2011ம் ஆண்டு ஜெய்பூர் க்கு மறுபடியும்  மாற்றலாகி வந்தவன்.

இவன் தன்னுடன் வேலை செய்த மற்றொரு இந்திய இராணுவதைச்சர்ந்தவர் மூலமாக ஐ.எஸ்.ஐ ஏஜண்டை அறிமுகமாகி, அடிக்கடி நேபால் காத்மண்டுவிருக்கு சென்று இந்திய ராணுவ நடமாட்டங்களை பகிர்ந்து கொண்டுள்ளான். மேலும் இவனுடன் தொடர்புடைய ஏனைய ராணுவ அதிகாரிகள் பற்றியும், ஒய்வு பெற்ற அதிகாரிகள் பற்றியும் பல்வேறு ரகசிய காவல்துறையினர் விசாரணை செய்துவருவதாக  என  உளவு பிரிவு தலைமை அதிகாரி திரு தினகர் தெரிவித்தார்.

இவனை 7 நாட்கள் காவல்துறையினர் பாதுகாப்பில் வைத்து விசாரித்து மே 20ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உள்ள்ளதாக தகவல் வெளியாகிஉள்ளது.

ISI spy arrested in jaipur

For the past several years, a Pakistan spy had been working with an Indian Army unit in Jaipur and used his position to leak sensitive strategic information about the Army to Pakistan’s Inter-Services Intelligence, police officials said on Friday.

Related posts