குற்றவியல் நீதி முறையை விரிவாக மாற்றியமைப்பதன் மூலம் மட்டுமே வெறுக்கத்தக்க பேச்சைச் சரிபார்க்க நடவடிக்கைகளை வழங்க முடியும் என்று குழுவின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். குற்றவியல் நீதி முறையை விரிவாக மாற்றியமைப்பு புதுடில்லி: ஐபிசி, சிஆர்பிசி, தகவல் தொழில்நுட்பச் சட்டம் மற்றும் வெறுக்கத்தக்க பேச்சைக் குறிக்கும் ஒரு விரிவான வரையறை ஆகியவற்றை ஒரு நிபுணர் குழு பரிந்துரைத்த மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, பரிந்துரைகள் இன்னும் செயலில் உள்ளன, உறுப்பினர்களில் ஒருவர் குற்றவியல் அவசர சட்டதிருத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். “பல விஷயங்களில் குற்றவியல் சட்டத்தை மாற்ற வேண்டிய அவசரம் உள்ளது, ஆனால் அதற்கு நேரம் எடுக்கும். வெறுக்கத்தக்க பேச்சை ஒழுங்குபடுத்துவது காலத்தின் தேவை என்பதால், நாங்கள் வழங்கிய பரிந்துரைகள் பரந்த ஆலோசனைக்கு வைக்கப்பட வேண்டும். நாங்கள் ஞானத்தின் உரிமையாளர்கள் அல்ல, ஆனால் நாங்கள் அளித்த பரிந்துரைகளைப் பார்க்க வேண்டும்…
Read MoreCategory: தமிழ் சிறகுகள் By Saravvanan R
வழக்கறிஞர்களை நியமனம் செய்வதிலிருந்து தீர்ப்பாயங்களுக்கு விலக்கும் விதிகளை PIL சவால் செய்கிறது: ஐகோர்ட் மத்திய அரசு நிலைப்பாட்டை நாடுகிறது
விசாரணையின் போது, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சேதன் சர்மா, உச்சநீதிமன்றத்திலும் விதிகள் சவால் செய்யப்பட்டுள்ளன, மேலும் அங்கு தீர்ப்பு நிலுவையில் உள்ளது. புதுடில்லி: வக்கீல்கள் விண்ணப்பிக்க தடை விதித்ததாகக் கூறி தீர்ப்பாயங்களில் நீதித்துறை உறுப்பினர்களை நியமிப்பதற்கான விதிகளை சவால் செய்த பொதுநல மனுவுக்கு பதிலளிக்குமாறு தில்லி உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை கேட்டுக் கொண்டது. பிரதம நீதியரசர் டி.என். படேல் மற்றும் நீதிபதி பிரதீக் ஜலான் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் நிதி பிரதம நீதியரசர் டி.என். படேல் மற்றும் நீதிபதி பிரதீக் ஜலான் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் நிதி, சட்டம் மற்றும் நீதி அமைச்சகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது. ஒரு வழக்கறிஞரின் வேண்டுகோளில் தங்கள் நிலைப்பாட்டைக் கோரி, மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் நீதித்துறை உறுப்பினர்களுக்கான விண்ணப்பங்களை அழைக்கும் சமீபத்திய விளம்பரத்தையும் சவால் செய்துள்ளார். (கேட்). மனுதாரர்-வழக்கறிஞர் அருண்குமார் பன்வார் சார்பில்…
Read Moreரிசர்வ் வங்கி அனுமதி பெறாமல் செயல்படும் கூகுள் பே நிறுவனத்திற்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!
இணையதள பயன்பாட்டாளர்களின் இடையே பணப் பரிவர்த்தனையில் மிகவும் பிரபலமாக இருக்கக் கூடிய செயலி கூகுள் டிஜிட்டல் நிறுவனத்தின் கூகுள் பே ஆப். வங்கிக்குச் செல்ல வேண்டியதில்லை, ஏடிஎம் தேடி அலைய தேவையில்லை, வரிசை இல்லை, ஆப் – இல் அனுப்பிய பணம் நேரடியாக வாங்கிக் கணக்கை வந்து சேரும் வசதி எனப் பல்வேறு வசதிகளைக் கொண்டு, மக்களின் மனதைக் கொள்ளை கொண்டு விட்டது கூகுள் பே செயலி. எனினும் இந்த கூகுள் பே செயலிக்கு ஆர்பிஐ அனுமதி பெறவில்லை, இந்திய அரசின் வணிக சட்டங்களுக்குள் இது அடங்கவில்லை, ஆப் -இல் பயனீட்டாளர்கள் பதியும் ஆதார், பான் உள்பட தனி நபர் விவரங்களுக்குப் பாதுகாப்பு கிடையாது. இந்நிறுவனத்துக்கு நோடல் அமைப்பு கிடையாது. பணப் பரிவர்த்தனைகளைப் பற்றிய முறையான தரவு சேமிப்பில்லை என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளுடன், வழக்கறிஞர் அபிஜித் மிஸ்ரா பொது நல…
Read Moreமாணவர்கள் பாதுகாப்பு உறுதி கோரி வழக்கு: பரிசீலிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
அரசு உதவிபெறும் பள்ளிக்கு தீயணைப்புத் துறையின் தடையில்லா சான்று ரத்து செய்த விவகாரத்தில் அங்கு பயிலும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் வளர்மதி என்பவர் தாக்கல் செய்த மனுவில், கொருக்குப்பேட்டையில் உள்ள அரசு உதவிபெறும் தனியார் பள்ளியின் கட்டடத்துக்கான தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை வழங்கிய தடையில்லாச் சான்று உரிமம் கடந்த 2018-ஆம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது. இதனால் அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. எனவே அந்தப் பள்ளியின் வளாகத்தில் உள்ள வணிக ரீதியான கட்டடங்களை அப்புறப்படுத்தவும், தீயணைப்பு தடுப்பு உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் ஏற்படுத்த உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். இந்த மனு நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.…
Read Moreமருந்தாளுநர் பணியிடங்களுக்கானத் தேர்வில் பி.பார்ம் பட்டதாரிகள் மற்றும் ஏனைய பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம் : உயர்நீதிமன்றம் உத்தரவு
மருந்தாளுநர் பணியிடங்களுக்கானத் தேர்வில் பி.பார்மில் பட்டயப் படிப்பு படித்தவர்கள் மட்டுமின்றி பட்டதாரிகளும் விண்ணப்பிக்க அனுமதிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் நவீன் குமார் தாக்கல் செய்த மனுவில், நான் பி.பார்ம் படிப்பில் இளம்நிலை பட்டம் பெற்றுள்ளேன். மார்ச் 1-ஆம் தேதி மருத்துவப் பணிகள் இயக்குநர், தமிழகத்தில் அரசு மருந்தாளுநர்கள் பணிக்கானத் தேர்வு தொடர்பான அறிவிக்கை ஒன்றை வெளியிட்டார். இந்தத் தேர்வுக்கு பி.பார்மில் பட்டயப் படிப்பை முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என கல்வித் தகுதி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தத் தேர்வில் பட்டயப் படிப்பு படித்தவர்கள் மட்டுமின்றி பட்டதாரிகளும் விண்ணப்பிக்க அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம்பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், பி.பார்ம் பட்டதாரிகளுக்கு அரசு மற்றும்…
Read Moreசெயற்கை மழைத் திட்டம் வாய்ப்பு உள்ளதா ?. அறிக்கை அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
செயற்கை மழைத் திட்டம் வாய்ப்பு உள்ளதா ?. அறிக்கை அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு சென்னை, மார்ச் 31 2019 தண்ணீர்ப் பற்றாக்குறையைப் தீர்க்க செயற்கை மழையை பொழிய வைக்கும் திட்டம் ஏதும் இருக்கிறதா ?. என்று என மத்திய மற்றும் மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர்நீதி மன்ற மதுரைக்கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது. இது பற்றி மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு கோரி கடந்த 16 -ஆம் தேதி பொதுப்பணித் துறை உயர் அதிகாரி களுக்கு மனு அனுப்பினேன். ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. என்அய்டிஅய்- என்ற தனி யார் அமைப்பு நடத்திய ஆராய்ச்சியில், 2020-ஆம் ஆண்டு தமிழகத்தில் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்படும் என தெரிவித்துள்ளது. எனவே, தமிழகத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்…
Read Moreபுதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர் தகுதி நீக்கம் சரிதான் : உயர்நீதிமன்றம் உறுதி செய்து உத்தரவு
புதுச்சேரி தட்டாஞ்சாவடி சட்டமன்ற உறுப்பினரை சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்றதால் தகுதிநீக்கம் செய்து புதுச்சேரி சட்டப்பேரவை செயலாளர் உத்தரவு பிறப்பித்திருந்தார். அந்த உத்தரவு சரிதான் என உயர்நீதிமன்றம் உறுதி செய்து உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் தட்டாஞ்சாவடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அசோக் ஆனந்த். இவர் என்.ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் . புதுச்சேரி மாநிலத்தின் பொதுப்பணித் துறையில் தலைமைப் பொறியாளராக பணியாற்றி வந்த இவரது தந்தை வருமானத்துக்கு கூடுதலாக சொத்து குவித்தது சம்பந்தமாக, கடந்த 2008-ஆம் ஆண்டு சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இவ்வழக்கில் குற்றத்துக்கு உடந்தையாக இருந்ததாக அசோக் ஆனந்த் உள்ளிட்டவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இவ்வழக்கை விசாரித்த புதுச்சேரி சி.பி.ஐ நீதிமன்றம், சட்டமன்ற உறுப்பினர் அசோக் ஆனந்த் மற்றும் அவரது தந்தை ஆனந்தன் ஆகியோருக்கு தலா ஓர் ஆண்டு சிறை தண்டனை விதித்தது. மேலும் வருமானத்துக்கு…
Read Moreசொத்து வரி உயர்த்தப்பட்டதை எதிர்த்து வழக்கு: ஆவணங்களை தாக்கல் செய்ய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
சொத்து வரி உயர்த்தப்பட்டதை எதிர்த்து திமுக சட்டமன்ற உறுப்பினர் எ.வ.வேலு தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அது சம்பந்தப்பட்ட ஆவணங்களைத் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர், எ.வ.வேலு தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, நகரப் பஞ்சாயத்துகளில் இருக்கும் குடியிருப்புக் கட்டிடங்களுக்கு சொத்து வரியை 50 சதவீதமும், குடியிருப்பு இல்லாத இடங்களுக்கு சொத்து வரியை 100 சதவீதமும் உயர்த்தி கடந்த 2018-ஆம் ஆண்டு தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையின் அடிப்படையில் திருவண்ணாமலை நகராட்சியில் சொத்துவரி உயர்த்தப்பட்டுள்ளது. எனவே இந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம்பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், ஒவ்வொரு குடியிருப்புக்கும் தனித்தனியாக…
Read Moreமத்திய,மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை கேள்வி
மதுரை: வனப்பகுதியில் கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்ட தீ விபத்துகள் எத்தனை? என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. உலக வங்கி நிதியில் எவ்வளவு செலவிடப்பட்டுள்ளது ?. அந்த நிதி மூலம் நடவு செய்யப்பட்ட மரங்கள் எவ்வளவு? என மத்திய,மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் மாநில வாரியாக மத்திய அரசும்,மாவட்ட வாரியாக மாநில அரசும் பதிலளிக்க உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. News in English Centre and State government were asked to answer queries on the extent of deforestation by Madras High Court Madurai : Agreeing with the concerns raised by a public interest litigation petition on the need to safeguard forest areas, the Madurai Bench of the Madras…
Read Moreஇந்தியாவில் நடப்பது மன்னர் ஆட்சியா? மக்கள் ஆட்சியா? – உயர்நீதிமன்றம் கண்டனம்
மதுரை: 19 மார்ச் : வேட்பாளர்கள், தாங்கள் போட்டியிடும் தொகுதிக்கு உட்பட்ட பிரச்சினைகளுக்கான தீர்வுகள் குறித்து பிரத்யேகமான தேர்தல் அறிக்கை வெளியிடவேண்டும் என தேர்தல் ஆணையம் எல்லா வேட்பாளர்களுக்கும் உத்தரவிட வேண்டும் என்று உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக பதிலளிக்காத 9 அரசியல் கட்சிகளுக்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இத்தொகை போர் விதவைகள் சங்கத்திற்கு இரண்டு வார கால அவகாசத்திற்குள் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த வழக்கில் இன்று விசாரணை நடைபெற்ற போது, அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு பற்றி கருத்து தெரிவித்த நீதிபதிகள், பாஜக, கம்யூனிஸ்ட் கட்சிகள் தவிர்த்து பெரும்பாலான ஏனைய கட்சிகள் அனைத்தும் வாரிசு அரசியலையே ஊக்குவிப்பதாக தெரிவித்தார்கள். இந்தியாவை சுமார் 500 குடும்பங்கள் மட்டும் தான் ஆட்சி செய்கிறது. இங்கு நடப்பது மக்கள் ஆட்சியா? மன்னர் ஆட்சியா?…
Read More