வைகையில் “மணல் அள்ளுவது” தொடர்பான மனு மீது அரசு பதிலளிக்க உத்தரவு : சென்னை உயர்நீதிமன்றம்

வைகையில் “மணல் அள்ளுவது” தொடர்பான மனு மீது அரசு பதிலளிக்க உத்தரவு : சென்னை உயர்நீதிமன்றம்

மதுரை: வைகை ஆற்றுப்படுகையில் மணல் அள்ளுவதை எதிர்த்து தொடரப்பட்ட இரண்டு பொதுநல வழக்குகள் (பிஐஎல்) மீது பதில் அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
மதுரை : சிவகங்கை மானாமதுரையில் உள்ள கிட்டத்தட்ட 25 கிராமங்களுக்கு வைகை ஆறு மட்டுமே நீர் ஆதாரமாக உள்ளது, இது சுமார் 10,000 ஏக்கர் விவசாய நிலத்தின் பாசனத்திற்கு உதவுகிறது. ஆனால், அதை கருத்தில் கொள்ளாமல், மானாமதுரை வைகை ஆற்றுப்படுகையில் உள்ள மணல் குவாரிக்கு சிவகங்கை கலெக்டர் அனுமதி அளித்தார் என சிவகங்கை, மானாமதுரை தாலுக்காவில் உள்ள கல்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த வழக்குரைஞரான பி. மாயாசாகு, குற்றம் சாட்டினார். ஆற்றுப் படுகையில் மணல் அள்ளுவதால் நிலத்தடி நீர் குறைந்து கிராம மக்கள் பாதிக்கப்படுவதாகச் சுட்டிக்காட்டிய அவர், அனுமதியை ரத்து செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார். இதேபோன்ற மனுவை அதே தாலுக்காவை சேர்ந்த எம்.செல்வகண்ணன் என்பவர் தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சுரேஷ்குமார், விஜயகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு வக்கீல் கூறுகையில், தற்போது அப்பகுதியில் குவாரிகள் இயங்கவில்லை என்றும், மணல் குவாரியின் அனுமதியை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். இதை பதிவு செய்த நீதிபதிகள், கவுன்டர் தாக்கல் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு மனு மீதான விசாரணையை ஒரு மாதத்திற்கு ஒத்தி வைத்தார்.

Related posts