வழக்கறிஞரை தாக்கிய போலீஸார்: மன்னிப்பு கடிதத்துடன் ரூ.1001 வழங்க மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவு

Madras High Court Madurai Bench

ஹெல்மெட் அணியாமல் சென்ற வழக்கறிஞரை தாக்கிய போலீஸார்: மன்னிப்பு கடிதத்துடன் ரூ.1001 வழங்க மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவு ஹெல்மெட் அணியாமல் சென்றதால் தாக்கப்பட்ட வழக்கறிஞருக்கு சம்பந்தப்பட்ட போலீஸார் இருவர் தலா ரூ.1001 வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நெல்லை மாவட்டம் புளியங்குடி வீரிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் வேலுச்சாமி. உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞராக உள்ளார். இவர் தீபாவளி விடுமுறைக்காக சொந்த ஊருக்கு சென்றிருந்தார். புளியங்குடி- சங்கரன்கோவில் சாலையில் கடந்த அக். 25-ல் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் வந்த வேலுச்சாமியை போலீஸார் தடுத்து நிறுத்தினர். அப்போது வேலுசாமிக்கும் போலீஸாருக்கு இடையே தகராறு நடைபெற்றது. இதையடுத்து போலீஸாரை தாக்க முயன்றது, ஆள்மாறாட்டம் உட்பட 5 பிரிவுகளில் புளியங்குடி போலீஸார் வழக்கு பதிவு செய்து வேலுச்சாமியை கைது செய்தனர்.…

Read More

ஏர் இந்தியா நிறுவனம் ஊனமுற்ற மருத்துவருக்கு சரியான நேரத்தில் சக்கர நாற்காலி வழங்காததற்கு 20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் – கர்நாடக உயர்நீதிமன்றம்

கர்நாடகா :மருத்துவர் ராஜலட்சுமி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.மனு நீதிபதி பி வீரப்பா முன் விசாரணைக்கு வந்தது. ஏர் இந்தியா விமான நிறுவனம் ஊனமுற்ற மருத்துவருக்கு சக்கர நாற்காலியை வழங்க தாமதப்படுத்தியதால் அவர் மற்றும் அவரது வயதான தாயார் பெரும் மன அதிர்ச்சி மற்றும் உடல் ரீதியான துன்பங்களுக்கு ஆளானார்கள்.இதனால் ஏர் இந்தியா நிறுவனம் ஊனமுற்ற மருத்துவருக்கு சரியான நேரத்தில் சக்கர நாற்காலி வழங்காததற்கு 20 லட்சம் இழப்பீடு வழங்குமாறு நீதிபதி ஏர் இந்தியாவுக்கு உத்தரவிட்டார்.

Read More

ஆள்துளை கிணறு பணி தொடங்குவதற்கு முன் உச்சநீதிமன்றம் பிறப்பித்த கட்டாயம் பின்பற்ற வேண்டிய விதிகள்

டெல்லி:ஆழ்துளை கிணற்றில் குழந்தைகள் தவறி விழும் நிகழ்வுகள் நாடு முழுவதும் அதிகரித்ததைத் தொடர்ந்து 2010ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் கட்டாயம் பின்பற்ற வேண்டிய விதிகள் குறித்து உத்தரவு பிறப்பித்தது.புதிய ஆழ்துளை கிணறு பணி தொடங்குவதற்கு முன்பும் நிறைவடைந்த பின்பும் சம்பந்தப்பட்டவர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் அளிக்க வேண்டும்.ஆழ்துளை கிணற்றை முழுமையாக மூட இரும்பு மூடி பொருத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது.ஆழ்துளை கிணற்றில் விழுந்து யாராவது உயிரிழந்தால் இடத்தின் உரிமையாளரும் ,தோண்டிய ஒப்பந்ததாரரும் தான் பொறுப்பு என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

Read More

ஆன்-லைன் மூலம் பட்டாசுகளை விற்க தடை : சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: ஷேக் அப்துல்லா கடந்த ஆண்டு ஆன் லைன் மூலம் பட்டாசுகளை விற்க தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.சென்னை உயர்நீதிமன்றம் பட்டாசுகள் விற்க தடை விதித்து உத்தரவிட்டது. அந்த உத்தரவை அமல்படுத்தவில்லை என்று கூறி காவல்துறைக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ஷேக் அப்துல்லா தொடர்ந்தார்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆதிகேசவலு ஆன் லைன் மூலம் பட்டாசு விற்பனை செய்யும் இணையதளங்களை முடக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டார்.

Read More

பண மோசடி வழக்கில் டி.கே.சிவகுமாருக்கு டெல்லி ஐகோர்ட் ஜாமீன் வழங்கியது

டெல்லி: பண மோசடி வழக்கில் காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் மீது அமலாக்க இயக்குநரகம் வழக்கு பதிவு செய்தது.செப்டம்பர் 3 ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் கைது செய்யப்பட்டார். தற்போது ​​அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமாருக்கு டெல்லி உயர் நீதிமன்றம் புதன்கிழமை ஜாமீன் வழங்கியது.அவர் நீதிமன்றத்தின் அனுமதியின்றி நாட்டை விட்டு வெளியேற முடியாது என்று நீதிபதி தெரிவித்தார்.

Read More

ஆன்லைன் மோசடி மூலம் இழந்த தொகையை வாடிக்கையாளர்களிடமிருந்து வங்கிகளால் மீட்டெடுக்க முடியாது – கேரள உயர்நீதிமன்றம்

எர்ணாகுளம்:மூன்றாம் நபர்கள் தங்கள் கணக்குகளில் இருந்து ஆன்லைனில் பணம் மோசடி பரிவர்த்தனைகள் செய்ததாக குற்றம் சாட்டிய இருவர் கேரளா உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.மனு நீதிபதி ஏ. முஹம்மது முஸ்டாக் முன் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி கடன் கணக்கில் இருந்து திரும்ப பெறுவதற்கு மனுதாரர்கள் தான் பொறுப்பு என்பதை சிவில் நீதிமன்றம் மூலம் நிரூபிக்காமல் அவர்கள் பொறுப்பேற்க முடியாது.மேலும் மனுதாரர்களால் செலுத்தப்பட்ட தொகை அதே முறையில் மோசடி பரிவர்த்தனை செய்யப்பட்டிருந்தால் தீர்ப்பின் நகலைப் பெற்ற நாளிலிருந்து இரண்டு வாரங்களுக்குள் அந்த பணத்தை திருப்பி செலுத்த வேண்டும் என்று நீதிபதி தெரிவித்தார்.மோசடி பரிவர்த்தனைக்கு யார் காரணமோ அவர்கள் தான் பொறுப்பேற்க முடியும் என்று நீதிபதி தெரிவித்தார்.

Read More

வெளிநாட்டிற்கு செல்லும் பயணிகளுக்கு டூட்டி பிரீ ஷாப் கடைகளில் ஜிஎஸ்டி இல்லை: மும்பை உயர்நீதிமன்றம்

மும்பை : ஃப்ளெமிங்கோ டிராவல் ரீடெய்ல் லிமிடெட் நிறுவனம் மும்பை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது . அந்த மனு நீதிபதி ரஞ்சித் மோர் மற்றும் பாரதி டாங்க்ரே அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அந்த மனுவில் மும்பை சர்வதேச விமான நிலையத்தில் ஃப்ளெமிங்கோ டிராவல் ரீடெய்ல் லிமிடெட் நிறுவனம் டூட்டி பிரீ ஷாப் கடை வைத்துள்ளனர்.விற்பனை வரி துணை ஆணையர் விற்பனையை தொடர்ந்து உள்ளீட்டு வரிக்கடன் பணத்தை திரும்ப தர மறுத்துவிட்டார்.ஆனால் எங்களுக்கு இந்தியாவில் உள்ள எங்களுடைய மற்ற சர்வதேச விமான நிலைய டூட்டி பிரீ ஷாப் கடைக்கு உள்ளீட்டு வரிக் கடன் பணம் திரும்ப கிடைப்பதாக தெரிவித்தனர். மனுவை விசாரித்த நீதிபதி ரஞ்சித் மோர் மற்றும் பாரதி டாங்க்ரே அடங்கிய அமர்வு வெளிநாட்டிற்கு செல்லும் பயணிகளுக்கு டூட்டி பிரீ ஷாப் கடைகளில் ஜிஎஸ்டி இல்லை…

Read More

செவிலியர் பணிக்கு தகுதி மதிப்பெண்ணை விட குறைவான மதிப்பெண்கள் பெற்றவர்களை நியமிக்க தடை-சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: கடந்த ஜூலை 23 ஆம் தேதி செவிலியர் பணிக்கு தேர்வு நடைபெற்றது.ஆனால் தற்காலிக தேர்வு என்ற பெயரில் தகுதி மதிப்பெண்ணை விட குறைந்த மதிப்பெண் பெற்ற 56 பேரை தற்காலிகமாக தேர்வு செய்து, சான்றிதழ் சரிபார்ப்புக்கு அறிவிப்பாணை வெளியிட்டதை தடை விதிக்க கோரி சென்னையை சேர்ந்த செவிலியர் பட்டதாரி திவ்யபாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.அந்த மனு நீதிபதி தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பாணைக்கு தடை விதித்து ,மேலும் தகுதி மதிப்பெண்களுக்கு குறைவான மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்க தடை விதித்து உத்தரவிட்டார்.அக்டோபர் 14 ஆம் தேதிக்குள் மருத்துவ பணிகள் வாரியம் பதிலளிக்குமாறு உத்தரவிட்டார்.

Read More

பிரதமர் மோடி மற்றும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை வரவேற்க பதாகைகளை அமைக்க அனுமதி – சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: நகராட்சி நிர்வாக ஆணையர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அக்டோபர் மாதம் 11-13 ஆம் தேதி மாமல்லபுரத்தில் மோடி மற்றும் ஜி ஜின்பிங் சந்திக்க உள்ளனர்.அவர்களை வரவேற்க பதாகைகளை அமைக்க அதிகாரிகள் அனுமதி வழங்கவில்லை. பதாகைகளை அமைக்க அனுமதி வழங்க கோரி மனுதாக்கல் செய்தனர்.அந்த மனு நீதிபதிகள் எம் சத்தியநாராயணன் மற்றும் என் சேஷசாயி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.மனுவை விசாரித்த நீதிபதிகள் பதாகைகளை அமைக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டனர். பதாகைகளை அமைக்க இருக்கும் விதிகளை அரசு பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்தனர்.

Read More

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரத்தின் ஜாமீன் மனு தள்ளுபடி – டெல்லி உயர்நீதிமன்றம்

டெல்லி :ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் தாக்கல் செய்த வழக்கமான ஜாமீன் மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. நீதிபதி சுரேஷ்குமார் கைட் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார். பாரின் மூத்த உறுப்பினர் மற்றும் முன்னாள் மத்திய நீதி அமைச்சர் என்பதால் சாட்சிகளை அழிக்க வாய்ப்பு உள்ளதாக நீதிபதி தெரிவித்தார்.

Read More