மோடி பிரதமராக நான் ஆதரிக்கிறேன் அன்னா ஹஸாரே

Anna Hazare ready to endorse Modi if he quits BJP நரேந்திர மோடி பாஜகவிலிருந்து விலகட்டும். அவர் பிரதமராக நான் முதல் ஆளாக ஆதரிக்கிறேன் என்று கூறியுள்ளார் அன்னா ஹஸாரே. அமெரிக்கா சென்றிருந்தபோது, அவரிடம் மோடியை ஆதரிப்பீர்களா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு இப்படிப் பதிலளித்துள்ளார் அன்னா. எனது ஆதரவு கிடைக்க வேண்டும் என்றால் மோடிமுதலில் பாஜகவை விட்டு விலக வேண்டும் என்று பதிலளித்தாராம் அன்னா. அப்படி இல்லாவிட்டால் எனது ஆதரவு கிடைக்காது என்றும் அவர் கூறினாராம். டெலவரே நகரில் ஆகஸ்ட் 20ம் தேதி நடந்த இந்திய அமெரிக்கர்களுடனான சந்திப்பி்ல் அன்னா கலந்து கொண்டார். அப்போது அவரிடம் பல கேள்விகளைக் கேட்டனர் இந்தியர்கள். எனக்கு அரசியல் கட்சிகள் மீது நம்பிக்கை இல்ல. மோடி பாஜகவில் உறுப்பினராக உள்ளார். பாஜக ஒரு அரசியல் கட்சி. எனவே என்னால் ஒரு கட்சியைச் சேர்ந்தவரை…

Read More

குரங்கின் வாயில் மது ஊற்றியதை தடுக்க முயன்றவர் கொலை

Man killed for opposing forcing of liquor down monkeys throat டெல்லியில் குரங்கிற்கு மது கொடுப்பதை தடுத்தவர் தலையில் கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, இவ்வழக்கில் குற்றவாளியை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். டெல்லியில் ரயில் நிலையத்திற்கு அருகே இர்பான் என்னும் நபர் ஒருவர், அவரது குரங்குகளை வைத்து வித்தைக்காட்டி சம்பாதித்துவந்தார். இம்மாதம் 14 ஆம் தேதி இரவு, இர்பான் வீதியில் மது அருந்திக்கொண்டிருந்தப்போது, அங்கு ராம் பாபு என்னும் ஒரு நபர் வந்தார். இருவரும் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். பின்னர், போதையில் இருந்த ராம் பாபு, இர்பானின் குரங்குகளுக்கு மதுவை கொடுக்க முயன்றார். இதனை கண்டு ஆத்திரமடைந்த இர்பான் ராம் பாபுவை தடுக்க முயன்றப்போது, அவர் இர்பானின் தலையில் ஒரு செங்கல்லை போட்டு கொலை செய்துள்ளார். இவ்வழக்கு தொடர்பாக ராம் பாபுவை…

Read More

ஜெகம் மோகன் ரெட்டி மருத்துவமனையில் அனுமதி

Jaganmohan Reddy indefinite fast stopped due to bad health. He has been shifted to hospital ஆந்திர மாநிலத்தில் தனி தெலுங்கானாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாய் ஜெகம் மொஹன் ரெட்டி 5 நாள்  உண்ணா விரதம் இருந்து வந்தார். திடீர் என இரவு அவர் உடல்நிலை மோசமானதால் அவரை மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதனால் அவர் கட்சி தொண்டர்கள் இடையே பரபரப்பு காணப்படுகிறது. Jaganmohan Reddy indefinite fast stopped due to bad health. He has been shifted to hospital HYDERABAD: Police tonight broke the five-day-old indefinite hunger strike of YSR Congress chief Y S Jaganmohan Reddy against the bifurcation of Andhra Pradesh, at the Chanchalguda jail here and got him shifted to…

Read More

ஜம்மு காஷ்மீரில் 5 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்

5 terrorist killed at Jammu and kashmir in midnight attack ஜம்மு காஷ்மீரில் நள்ளிரவு நடந்த சண்டையில் 5 தீவிர வாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். அதிகாலை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த இந்திய பாதுகாப்பு படையின் மீது தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் செய்தனர் இதனை எதிர்த்து பாதுகாப்பு படையினரும் சுட்டதில் 5 தீவிர வாதிகள் கொல்லப்பட்டனர் என பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர். 5 terrorist killed at Jammu and kashmir in midnight attack Five militants have died in an encounter with police and Army in Kangan area of Ganderbal district in Kashmir valley on Friday. Superintendent of Police (SP) Ganderbal Shahid Meraj Rather told the press that Hizbul Mujahideen’s Assadullah group…

Read More

40 குண்டுவெடிப்பு வழக்குகளில் தேடப்பட்டு வந்த தீவிரவாதி கைது.

Yasin Bhatkal Caught at last புதுடெல்லி : பெங்களூர், புனே உட்பட 40 குண்டுவெடிப்பு வழக்குகளில் தேடப்பட்டு வந்த இந்தியன் முஜாகிதீன் அமைப்பின் தலைவன்  யாசின் பட்கல்  இந்திய , நேபாள எல்லையில் கைது செய்யப்பட்டான். இந்தியன் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பின் நிறுவனர் யாசின் பட்கல் (30) இந்திய , நேபாள எல்லையில் வடக்கு பீகார் மாநிலத்தில் கடந்த 5 ஆண்டுகளாக பதுங்கியிருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது.  அதன்பேரில் உளவுப்படை மற்றும் பீகார் போலீசார் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில் யாசின் பட்கல் கைது செய்யப்பட்டான். அவனுடன் இந்தியன் முஜாகிதீன் அமைப்பின் தலைவர் பீகார் மாநிலம் சமஸ்திபூரை சேர்ந்த தகசீன் அக்தர் வாசிம் அக்தர் ஷேக்(23), உத்தரப்பிரதேச மாநிலம் அஜம்காரை சேர்ந்த அசதுல்லா அக்தர் ஜாவீத் அக்தர் (26), வாகஸ் என்கிற அகமது (26) ஆகிய…

Read More

எந்த நேரமும் டீசல் விலை உயரலாம் ரூ5-6/- அதிகரிக்க வாய்ப்பு

petrol and diesel prices hike டீசல் விலை உயர்வு குறித்து நாளை அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. நாட்டின் பொருளாதார நெருக்கடி தொடர்பாக மத்திய அரசுக்கு சிக்கல் அதிகரித்து வரும் நிலையில், டீசல் விலையை உயர்த்துவது குறித்து நிதி அமைச்சர் ப. சிதம்பரத்துடன் பெட்ரோலிய அமைச்சர் வீரப்ப மொய்லி ஆலோசனை நடத்தினார். கச்சா எண்ணெய் இறக்குமதி செலவைக் குறைக்கும் வகையில் டீசல் விலையை லிட்டருக்கு 4 ரூபாய் வரை அதிகரிப்பது தொடர்பாக இருவரும் விரிவாக பேசியதாக கூறப்படுகிறது. எண்ணெய் நிறுவனங்கள் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை கூடி விலை நிர்ணயம் செய்து வரும் நிலையில், டீசல் விலை உயர்வு குறித்து நாளை அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது. English Summary: petrol and diesel prices hike Brace for a sharp rise in petrol and diesel…

Read More

தட்டைக் கழுவ மறுத்த சிறுவனை சுட்டுக் கொன்ற வாடிக்கையாளர்

boy shot dead for refusing to clean plates தட்டைக் கழுவி உணவு பரிமாற மறுத்த சிறுவனை ஆத்திரத்தில் சுட்டுக் கொன்ற வாடிக்கையாளரை உத்திரப்பிரதேச போலீசார் தேடி வருகின்றனர். உத்தரப்பிரதேசம், முஜாபர்நகர் அருகில் உள்ள ஷாலி மாவட்டத்தில் உள்ள சிறிய ஹோட்டல் ஒன்றில் 11வயது சிறுவன் ஒருவன் வேலை பார்த்து வந்தான். அச்சிறுவன் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவன் எனச் சொல்லப்படுகிறது. சம்பவத்தன்று, ஹோட்டலுக்கு சாப்பிட வந்த ஜக்பால் என்ற வாடிக்கையாளர், தட்டு அசுத்தமாக இருப்பதாகக் கூறி, தட்டை மீண்டும் கழுவி எடுத்து வருமாறு அச்சிறுவனிடம் கூறியுள்ளார். ஆனால், அதனைச் செய்ய சிறுவன் மறுத்ததாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஜக்பால், மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அச்சிறுவனைச் சுட்டுக் கொன்றுள்ளான். இதில், சம்பவ இடத்திலேயே அச்சிறுவன் பரிதாபமாக பலியானான். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார்,…

Read More

14 சிறுமிகளை மிரட்டிக் கற்பழித்த விடுதிக்காப்பாளர் கைது

Hostel warden arrested for raping 14 girls in Arunachal pradesh அருணாச்சலப் பிரதேசத்தில், தனியார் பள்ளி விடுதி ஒன்றில் தங்கி கல்வி பயின்று வந்த மாணவிகள் 14 பேரை மிரட்டி பலாத்காரம் செய்து வந்த வேற்று மாநிலத்தைச் சேர்ந்த விடுதி காப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார். அருணாச்சலப் பிரதேசம், மேற்கு சியாங் மாவட்டத்தில் உள்ள லிகாபாய் என்ற ஊரில் உள்ள தனியார் பள்ளிக்குச் சொந்தமான விடுதி ஒன்றில் 3 முதல் 16வயது வரை உள்ள மாணவிகள் பலர் தங்கியுள்ளனர். அந்த விடுதிக்கு வேற்று மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் விடுதிக் காப்பாளராக இருந்து வந்துள்ளார். இவர் கடந்த 3 ஆண்டுகளாக விடுதியில் தங்கியுள்ள 3 முதல் 13 வயது வரை உள்ள சிறுமிகளை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். இவரது மிரட்டலுக்கு பயந்த மாணவிகள் சம்பத்தை…

Read More

ஓம் பூரியைக் கைது செய்ய இடைக்காலத் தடை!

Om Puri granted anticipatory bail till Aug 30  மனைவியை உருட்டுக்கட்டையால் தாக்கிய குற்றச்சாட்டில் பிரபல நடிகர் ஓம் பூரியைக் கைது செய்ய இடைக் காலத் தடை விதித்துள்ளது நீதிமன்றம். அர்த், ஆக்ரோஷ், ஆரோகன் படங்களில் சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றவர் நடிகர் ஓம் பூரி. காந்தி படத்திலும் முக்கிய கேரக்டரில் நடித்தார். இந்தியில் முன்னணி ஹீரோக்களுடன் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். ஓம் பூரி தனது இரண்டாவது மனைவி நந்திதாவுடன் மும்பையில் உள்ள வீட்டில் வசித்து வந்தார். திடீரென அவரது முதல் மனைவி சீமா கபூர், மீண்டும் வந்து சேர்ந்து கொண்டார். இதனால் நந்திதாவுக்கும் ஓம் பூரிக்கும் பெரும் சண்டை ஏற்பட்டுவிட்டது. இதனால் வீட்டுக்குப் போவதைத் தவிர்த்த ஓம் பூரி, செலவுக்குப் பணம் தருவதையும் நிறுத்திவிட்டாராம். இதைக் கேட்ட நந்திதாவை கைகளாலும் உருட்டுக்கட்டையாலும் தாக்கினாராம்…

Read More

குத்தாட்டம் போட்ட எம்.எல்.ஏ-கட்சியை விட்டு நீக்கியுள்ளார் அகிலேஷ்

உல்லாச நகரமான கோவாவில் உள்ள பனாஜியில் குத்தாட்டம் போட்ட உத்தரபிரதேச மாநில சமாஜ்வாதி கட்சி எம்.எல்.ஏ. மகேந்திர சிங்கை கோவா காவல் துறையினர் நேற்று முன்தினம் கைது செய்தனர். பனாஜி நகரில் உள்ள உல்லாச நடன விடுதி ஒன்றில் குத்தாட்டம், கும்மாளம் மற்றும் விபசாரம் நடப்பதாக கோவா காவல் துறைக்கு தகவல் வந்தது. இதனையடுத்து, அந்த விடுதிக்கு விரைந்த காவல் துறையினர் , தன்னிலை மறந்து போதையில் குத்தாட்டம் போட்டுக் கொண்டிருந்த சிலரை கைது செய்தனர். பஞ்சாப், டெல்லி, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களை சேர்ந்த 6 பெண்களையும் அந்த விடுதியிலிருந்து காவல் துறையினர் மீட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த சமாஜ்வாதி கட்சி எம்.எல்.ஏ. மகேந்திர சிங் என்பதை அறிந்த காவல் துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். உத்தரபிரதேச சமாஜ்வாதி கட்சி மூத்த…

Read More