நாட்டிலேயே வரதட்சனை கொடுமையில் ஆந்திர மாநிலம் முதலிடத்தைப் பிடித்துள்ளது

Andhra Pradesh tops list in dowry cases in 2012 நாட்டிலேயே வரதட்சணை கொடுமையில் ஆந்திரா மாநிலம்தான் முதலிடத்தைப் பிடித்துள்ளது. வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதில் எந்த மாநிலம்தான் முன்னணியில் இருக்கிறது என்று ஒரு தேசியகுற்றப்பதிவு ஆணைய தகவல் தெரிவிக்கிறது. இதில் ஆந்திரா முதலிடத்தில் இருக்கிறது. அதாவது கடந்த 2012-ம் ஆண்டு மட்டும் சுமார் 2 ஆயிரத்து 511 வரதட்சணை கொடுமை வழக்குகள் ஆந்திராவில் பதிவாகி உள்ளன. ஆயிரத்து 487 வழக்குகளுடன் ஒடிசா மாநிலம் இரண்டாவது இடத்தைபிடித்துள்ளது. மேலும் பெண்கள் மீதான பிற வன்முறை தாக்குதலில் மத்திய பிரதேச மாநிலத்தில் ஒன்பதாயிரத்து 536-வழக்குகளும், தமிழ் நாட்டில் மூன்றாயிரத்து 838 வழக்குகளும் பதிவாகி யுள்ளதாக தேசியகுற்றப்பதிவு ஆணையம் தெரிவித்து உள்ளது. அருணாசலபிரதேசம் , இமாச்சலபிரதேசம், மணிப்பூர் , மேகாலயா, மிசோரம், நாகலாந்து, சிக்கிம், திரிபுரா மாநிலங்களில் வரதட்சணை கொடுமை…

Read More

இந்தியாவில் 645 மில்லியன் மக்கள் வறுமையிலேயே வாழ்வதாக ஆய்வில் கண்டறியப் பட்டுள்ளது

McKinsey pegs poverty line at Rs 1,336 per month இந்தியாவின் மக்கள் தொகையான 1.1 பில்லியனில் 55 சதவீதம் பேர்- அதாவது 645 மில்லியன் மக்கள் வறுமையிலேயே வாழ்வதாக ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தின் ஆய்வு ஒன்றில் கூறப்பட்டுவந்த நிலையில் நாட்டில் சுமார் 68 கோடி மக்களுக்கு அடிப்படை வசதி கிடைப்பதில் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாக சமீபத்தில் எடுக்கப் பட்ட மற்றொரு ஆய்வில் கண்டறியப் பட்டுள்ளது.  பாதுகாப்பு,கல்வி, சுகாதாரம், தண்ணீர், வீடு, எரிபொருள், மற்றும் சமூகபாதுகாப்பு, உடைகள், பொழுதுபோக்கு போன்றவற்றில் குறைந்த பட்ச தேவையை பூர்த்தி செய்வது அடிப்படை வசதிகளாக கருதப்பட்டு வருகிறது. இவை அனைத்தும் பூர்த்தி செய்வதற்காக தனிநபர் பொருளாதார மதிப்பீடு மூலம் புதிய வரி உருவாக்கப்பட்டு வருகிறது. இவற்றில் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட விதிமுறைகளை பயன்படுத்துவதன் மூலம் ஒரு தனி மனிதனின் மாத தேவைக்கு சராசரியாக…

Read More

இந்திய கபடி வீராங்கனை ஜார்கண்டில் வேலை கேட்டு போராட்டம்

Kabaddi champ sits on dharna கடந்த 2012-ம் ஆண்டு நடந்த பெண்கள் உலகக்கோப்பை கபடி போட்டியில் இந்திய அணி கோப்பையை வென்றது. வெற்றிப்பெற்று இந்தியா திரும்பிய இந்திய அணி வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த அணியில் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த வீராங்கனை விந்தியாவாசினியும் இடம் பெற்றிருந்தார். பின்னர் தனது சொந்த மாநிலத்திற்கு வந்த விந்தியாவாசினிக்கு அப்போது முதல்வராக இருந்த அர்ஜூன் முண்டாவின் அரசு வேலை தருவதாக உறுதியளித்தது. ஆனால் அந்த ஆட்சி முடிவுபெற்றது. அதையடுத்து ஆட்சிக்கு வந்த ஹேமந்த் சோரனும் இரண்டு முறை வேலை கொடுப்பதாக விந்தியாவாசினிக்கு உறுதியளித்தார். ஆனால், அவர்களின் வாக்குறுதிக்கு ஏற்ப வேலை கிடைக்கும் என்று எதிர்பார்த்த விந்தியாவாசினி ஏமாற்றம் அடைந்தார்.   நான்கு சகோதரிகளுடன் வாழ்ந்த அவரது குடும்பம் மிகவும் வறுமையில் வாடி வருகிறது. இதையடுத்து இந்தியாவிற்கு பெருமை அந்த…

Read More

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உலகிலேயே உயரமான பெண்ணிற்கு வளர்ச்சியை கட்டுபடுத்த அறுவை சிகிச்சை

AIIMS frees tallest woman from curse உலகின் மிக உயரமான பெண்ணுக்கு வளர்ச்சியின் வேகத்தையும் அளவையும் கட்டுப்படுத்த டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பிரத்யேக சிகிச்சை மேற்கொள்ளபட்டது.  7.8 அடி உயரத்தில் உலகின் மிக உயரமான பெண்ணுக்கு, மிக உயரமாக இருப்பது பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. பிறரை போல இல்லாமல் அளவில் மிக பெரிய கை, கால்களை கொண்டிருந்த இவர் சுமார் 15 வருடங்களாக வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடந்தார்.  தற்போது 25 வயதாகும் கின்னஸ் சாதனையாளரான அப்பெண் மேற்கு வங்கத்தை சேர்ந்தவர். இவருடைய நிலையை பார்த்து அவருக்கு உதவி புரிந்த ஆசிரியர் ஒருவர் அவரை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்ந்தார்.  பரிசோதனையின் போது அப்பெண்ணிற்கு மூளையில் கட்டி இருப்பது தெரியவந்தது. அக்கட்டி அதீத வளர்ச்சி ஏற்படும்படி ஹார்மோன்களை வெளியேற்றியதாக தெரிந்தது. தற்போது அவரின் மூலையில் இருந்த கட்டியை அகற்றிய…

Read More

அந்தமானில் அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றி சென்ற படகு கடலில் மூழ்கி 31 பேர் பலி

Andaman boat tragedy: Survivors narrate their ordeal at sea அந்தமான் தலைநகர் போர்ட் பிளேயர் அருகே சுற்றுலா பயணிகளை ஏற்றி சென்ற படகு ஒன்று கடலில் மூழ்கியது. இந்த துயர சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 31 என்று தெரிகிறது. காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர்கள் பலர் இதில் பலியாகியுள்ளனர்.   தலைநகர் போர்ட்ப்ளேர் அருகே நடுக்கடலில் இந்தப் படகு சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென்று படகு தள்ளாடியது. கண் இமைக்கும் நேரத்தில் படகு கடலில் கவிழ்ந்த போது மரண ஓலங்கள் எழுந்தன. கடற்கரையிலிருந்து சற்று தொலைவில் இந்த விபத்து ஏற்பட்டதால் மீட்புப் பணி மேற்கொள்ளப்பட்டது.கடலில் படகு முழ்கியதில் 31 பேர் பலியாகினர் என்று தகவல்கள் தெரிவித்துள்ளன. படகில் 46 சுற்றுலா பயணிகள் சென்றுள்ளனர் என்றும் அந்த தகவல் தெரிவித்துள்ளது. படகில் இருந்தவர்கள் தமிழகத்தின் காஞ்சிபுரத்தை சேர்ந்தவர்கள் என்று அங்கிருந்து…

Read More

இந்தியாவின் 65வது குடியரசு தினம் நாடு முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது

India celebrates its 65th Republic Day நாடு முழுவதும் 65வது குடியரசு தினம் இன்று வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. தலைநகர் டெல்லி முதல் கன்னியாகுமரி வரை அனைத்துப் பகுதிகளிலும் குடியரசு தினத்தை அரசுத் தரப்பிலும், பொதுமக்களும் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடினர். குடியரசு தினத்தையொட்டி நாடு முழுவதும் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தலைநகர் டெல்லியில் கிட்டத்தட்ட 20,00 போலீஸாரும், ஆயுதப் படையினரும் தீவிர பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டிருந்தனர்.  டெல்லி முழுவதும் பல அடுக்குப் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு குடியரசு தின அணிவகுப்பும் நடந்ததால் இந்தக் கூடுதல் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இன்றைய குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஜப்பான் பிரதமர் ஷின்ஷோ கலந்து கொண்டார். அணிவகுப்பு நடந்த ராஜ்பாத் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அங்குள்ள 125 கட்டடங்களும் சீல் வைக்கப்பட்டிருந்தன.…

Read More

ஜனவரி 25 இந்திய தேசிய வாக்காளர் தினம்

National voters’ day to be observed today தேசிய வாக்காளர் தினம் என்பது இந்திய அரசாங்கத்தால் இளம் வாக்களர்களை ஊக்கபடுதுவதற்காக இந்த தினம் அனுசரிக்கபடுகிறது.ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25ஆம் தேதி “தேசிய வாக்காளர் தினம்” . ஒட்டு அளிப்பதை மக்கள் தங்கள் கடமை யாக கருத வேண்டும் .18 வயது நிரம்பிய இந்திய குடிமக்கள் அனைவரும் ஒட்டு அளிக்க தகுதி வாய்ந்தவர் .தேர்தல் என்பது பொதுவாக 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை வருகிறது .சதி,மதம் , இனம், என்ற வேறுபாடுகளை களைந்து 18 வயது நிரம்பிய இந்திய குடியுரிமை பெற்ற மக்கள் அனைவரும் ஓட்டளிக்க தகுதி உள்ளவர்கள் .வாக்காளர் அனைவரும் வாக்காளர் அடையாள அட்டை ஒன்று தேர்தல் ஆணையத்தால் வழங்கபடுகிறது. National voters’ day to be observed today Last year on Independence…

Read More

தேசிய பாதுகாப்பு கருதி சமூக வலைத்தளங்களை ராணுவ வீரர்கள் பயன்படுத்த தடை

Social media banned for Army officers தேசிய பாதுகாப்பு கருதி ராணுவ பணியாளர்கள் பேஸ்புக், விசாட் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பயன்படுத்த கூடாது என்று ராணுவம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. சமூக வலைதள பயன்பாடு மூலம் ராணுவ அதிகாரிகள் பற்றியும் அவர்கள் வசிக்கும் இடம் பற்றியும் தகவல் வெளியாகும் என்ற செய்தியின் காரணமாக ராணுவம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.   சமீபகால்மாக சமூக வலைதளங்கள் மூலம் ராணுவத்தினர் உளவு பார்க்கப்பட்டதாக ஏற்கனவே புகார் எழுந்தது.இதையடுத்து வீரர்களின் இருப்பிடம் உள்ளிட்ட விவரங்கள் வெளியாவதை தடுக்க பேஸ்புக், வீசாட் போன்ற சமூக வலைதளங்களை பயன்படுத்த ராணுவம் தடை விதித்துள்ளது. இராணுவத்தினரின் இருப்பிடம், நடவடிக்கைகள் பற்றி தகவல்கள் வெளியானால் பாதுகாப்பு கேள்விக்குறியாக வாய்ப்பு உள்ளது என்பதால் இந்நடவடிக்கை எடுக்கப்படுள்ளது என்று ராணுவம் தெரிவித்துள்ளது.மேலும் சமீபத்தில் பாகிஸ்தான் உளவுத்துறை…

Read More

2005ம் அண்டுக்கு முன்பு அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகள் எதுவிம் செல்லாது ரிசர்வ் வங்கி அறிவிப்பு

RBI’s move to withdraw pre-2005 currency notes is anarchic 2005–ம் ஆண்டுக்கு முன்பு அச்சிடப்பட்ட அனைத்து ரூபாய் நோட்டுகளையும் திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அச்சிடப்பட்டஆண்டு எண் இல்லாத அனைத்து ரூபாய் நோட்டுகளையும் வருகிற மார்ச் 31–ந்தேதிக்கு பிறகு திரும்ப பெறுவதாக வங்கி அறிவித்துள்ளது. நோட்டுகளை, வைத்து இருப்பவர்கள் ஏப்ரல் 1–ந்தேதி முதல் வங்கிகளில் கொடுத்து வேறு நோட்டு களை பெற்றுக்கொள்ளலாம் என்று வங்கி கூறியுள்ளது. அனைத்து வங்கிகளும் இதற்கான வசதிகளை ஏற்பாடு செய்ய ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டுள்ளது. மக்கள் எளிதாக நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என்று வங்கி அறிவித்துள்ளது.மேலும் ரூபாய் நோட்டுக்கள் செல்லுபடி ஆகும் என்றும் இதனால் பொதுமக்கள் பீதி அடைய தேவையில்லை என்றும் இந்த நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளது. கறுப்பு பணத்தை வெளிக்கொண்டு வருவதற்கும், கள்ளநோட்டு…

Read More

மேற்கு வங்காள பஞ்சாயத்தில் இளம்பெண்ணுக்கு நடந்த கொடுமை

20-year-old tied to tree, gang-raped on orders of village council, say police மேற்கு வங்கத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஒரு இளம்பெண்ணுக்கு வேறு ஒரு சமூகத்தை சேர்ந்தவரோடு நட்பு இருந்ததால், அந்த பெண்ணை தண்டிக்க அக்கிராமத்து தலைவர் அப்பெண்ணை கிராமத்தில் வசித்த ஆண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்துமாறு தீர்ப்பு அளித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  மேற்கு வங்க மாநிலம் பிர்ப்ஹம்மாவட்டத்தில் உள்ள சபல்பூல் கிராமத்தை சேர்ந்த 20 வயது இளம் பெண், அந்த பகுதியில் உள்ள ஒரு வாலிபரை காதலித்தார். இருவரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள். இது குறித்து கிராம பஞ்சாயத்தில் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து அந்த ஊர் பஞ்சாயத்தார் கூடி விசாரணை நடத்தினார்கள். வேறு சாதி வாலிபரை காதலித்ததற்காக அந்த பெண்ணுக்கும், வாலிபருக்கும் தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தார்.அபராத தொகையை…

Read More