வெளிநாட்டிற்கு செல்லும் பயணிகளுக்கு டூட்டி பிரீ ஷாப் கடைகளில் ஜிஎஸ்டி இல்லை: மும்பை உயர்நீதிமன்றம்

மும்பை : ஃப்ளெமிங்கோ டிராவல் ரீடெய்ல் லிமிடெட் நிறுவனம் மும்பை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது . அந்த மனு நீதிபதி ரஞ்சித் மோர் மற்றும் பாரதி டாங்க்ரே அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அந்த மனுவில் மும்பை சர்வதேச விமான நிலையத்தில் ஃப்ளெமிங்கோ டிராவல் ரீடெய்ல் லிமிடெட் நிறுவனம் டூட்டி பிரீ ஷாப் கடை வைத்துள்ளனர்.விற்பனை வரி துணை ஆணையர் விற்பனையை தொடர்ந்து உள்ளீட்டு வரிக்கடன் பணத்தை திரும்ப தர மறுத்துவிட்டார்.ஆனால் எங்களுக்கு இந்தியாவில் உள்ள எங்களுடைய மற்ற சர்வதேச விமான நிலைய டூட்டி பிரீ ஷாப் கடைக்கு உள்ளீட்டு வரிக் கடன் பணம் திரும்ப கிடைப்பதாக தெரிவித்தனர். மனுவை விசாரித்த நீதிபதி ரஞ்சித் மோர் மற்றும் பாரதி டாங்க்ரே அடங்கிய அமர்வு வெளிநாட்டிற்கு செல்லும் பயணிகளுக்கு டூட்டி பிரீ ஷாப் கடைகளில் ஜிஎஸ்டி இல்லை…

Read More

பிரதமர் மோடி மற்றும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை வரவேற்க பதாகைகளை அமைக்க அனுமதி – சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: நகராட்சி நிர்வாக ஆணையர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அக்டோபர் மாதம் 11-13 ஆம் தேதி மாமல்லபுரத்தில் மோடி மற்றும் ஜி ஜின்பிங் சந்திக்க உள்ளனர்.அவர்களை வரவேற்க பதாகைகளை அமைக்க அதிகாரிகள் அனுமதி வழங்கவில்லை. பதாகைகளை அமைக்க அனுமதி வழங்க கோரி மனுதாக்கல் செய்தனர்.அந்த மனு நீதிபதிகள் எம் சத்தியநாராயணன் மற்றும் என் சேஷசாயி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.மனுவை விசாரித்த நீதிபதிகள் பதாகைகளை அமைக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டனர். பதாகைகளை அமைக்க இருக்கும் விதிகளை அரசு பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்தனர்.

Read More

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரத்தின் ஜாமீன் மனு தள்ளுபடி – டெல்லி உயர்நீதிமன்றம்

டெல்லி :ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் தாக்கல் செய்த வழக்கமான ஜாமீன் மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. நீதிபதி சுரேஷ்குமார் கைட் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார். பாரின் மூத்த உறுப்பினர் மற்றும் முன்னாள் மத்திய நீதி அமைச்சர் என்பதால் சாட்சிகளை அழிக்க வாய்ப்பு உள்ளதாக நீதிபதி தெரிவித்தார்.

Read More

மதுபானம் வாங்குவதற்கான குறைந்தபட்ச வயது வரம்பு குடிப்பதற்கு பொருந்தாது: டெல்லி உயர்நீதிமன்றம்

டெல்லி :டெல்லி கலால் சட்டம், 2009 இன் 23 வது பிரிவை ரத்து செய்ய கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.மனு தலைமை நீதிபதி டி என் படேல் மற்றும் சி ஹரிசங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.மனுவை விசாரித்த நீதிபதிகள் மதுபானம் வாங்குவதற்கான குறைந்தபட்ச வயது வரம்பு வயது 25 ஆண்டுகள்,ஆனால் டெல்லி கலால் சட்டத்தின் கீழ் மது அருந்துவதற்கான குறைந்தபட்ச வயது 25 ஆண்டுகள் என்பது ஒருதவறான கருத்து என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.இதனால் டெல்லி கலால் சட்டம், 2009 இன் 23 வது பிரிவை ரத்து செய்ய கோரும் மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

Read More

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வி கே தஹில்ரமணி ராஜினாமாவை ஜனாதிபதி ஏற்று கொண்டார்

சென்னை :சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில்ரமணியை மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு பணிமாற்றம் செய்தனர் .இந்தியாவில் உள்ள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளில் மூத்தவரான நீதிபதி தஹில்ரமணி மேகாலயா. மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு பணிமாற்றம் உத்தரவை ரத்து செய்ய அவர் விடுத்த கோரிக்கையை உச்சநீதிமன்றத்தின் கொலீஜியம் அமைப்பு நிராகரித்தது.இதனால் அவர் ராஜினாமா செய்தார்.நேற்று ராஜினாமாவை ஜனாதிபதி ஏற்று கொண்டார்.

Read More

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரத்தின் நீதித்துறை காவல் அக்டோபர் 3 வரை நீட்டிப்பு

டெல்லி: சிறப்பு சிபிஐ நீதிபதி அஜய் லுமார் குஹார் இன்று ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரத்தின் நீதித்துறை காவலை அக்டோபர் 3 வரை நீட்டித்தார்.சிதம்பரம் ஏற்கனவே 14 நாட்கள் நீதித்துறை காவலில் உள்ளதாக சிதம்பரத்தின் மூத்த வழக்கறிஞர்களான கபில் சிபல் மற்றும் அபிஷேக் மனு சிங்வி ஆகியோர் வாதிட்டனர்.சிதம்பரம் உயர் இரத்த அழுத்தம் உள்ளிட்ட பல நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.சிதம்பரத்தின் நீதித்துறை காவல் அக்டோபர் 3 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Read More

ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்றத்தை ஏன் மனுதாரர் அணுக முடியவில்லை – உச்சநீதிமன்றம்

டெல்லி: அனுராதா பாசின் மற்றும் காஷ்மீர் டைம்ஸின் நிர்வாக ஆசிரியர் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.இந்த மனு நீதிபதிகள் ரஞ்சன் கோகோய்,போப்டே மற்றும் அப்துல் நசீர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.மனுவில் காஷ்மீரில் தகவல் தொடர்பு இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல் தொடர்பு இணைப்புகள் செயல்படாததால் ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்றத்தை அணுகமுடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கு நீதிபதி போப்டே கேள்வி எழுப்பினார்.பாதுகாப்பு தொடர்பான காரணங்களால் தகவல் தொடர்பு மூடப்பட்டுள்ளது.செய்தித்தாள்களை வெளியிடுவதில் எந்த தடையும் இல்லை, இப்பகுதியில் இருந்து பல செய்தித்தாள்கள் வெளியிடப்படுகின்றன என்று அரசு முதன்மை ஆதரவுரைஞர் தெரிவித்தார்.மனுதாரர் தானாக முன் வந்து முடியதாக தெரிவித்தார். இயல்பு நிலையை கொண்டு வர மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது.

Read More

காஷ்மீரில் குழந்தைகளை சட்டவிரோதமாக தடுத்து வைத்திருப்பதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு

டெல்லி: குழந்தை உரிமை நிபுணர் எனாக்ஷி கங்குலி மற்றும் பேராசிரியர் சாந்தா சின்ஹா தேசிய குழந்தைகள் உரிமைகள் ஆணையத்தின் தலைவர் ஆகியோர் பொதுநல வழக்கு தாக்கல் செய்தனர். காஷ்மீரில் குழந்தைகளை சட்டவிரோதமாக தடுத்து வைத்திருப்பதை ஊடகங்கள் தெரிவித்தது.சுதந்திரம் மற்றும் உயிர் இழப்பு மீறல்களை நீதித்துறை மறு ஆய்வு செய்ய வேண்டும் . தடுத்து வைக்கப்பட்டுள்ள குழந்தைகளை உயர்நீதிமன்றத்தின் சிறார் நீதிக் குழுவின் முன் ஆஜர்படுத்த வேண்டும் .அவர்களை சிறார் நீதிக் குழுவின் மேற்பார்வையின் கீழ் கொண்டு வர வேண்டும்.சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள குழந்தைகள் மற்றும் குழந்தைகளின் குடும்பங்களுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

விவாகரத்து வழக்கில் மனைவியின் விவரங்களை தவறாக கொடுத்த கணவர்: கர்நாடக உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

கர்நாடகா: விவாகரத்து மனுவில் மனைவியின் விவரங்களை தவறாக கொடுத்ததால் மனைவியால் மனுவிற்கு பதில் அளிக்க முடியவில்லை. ரேணு என்பவர் கர்நாடக உயர்நீதிமன்ற தர்வாட் கிளையில் விவாகரத்து மேல்முறையிடு மனுவை தாக்கல் செய்தார்.அந்த மனுவில் தெரிவித்தது என்னவென்றால் “என் பெற்றோர் வீடு ராஜஸ்தான் மாநிலம் ஷிரோனியில் உள்ளதால் அங்கு இணை உரிமைகளை மறுசீரமைத்தல் (restitution of conjugal rights) மனுவை தாக்கல் செய்தேன். அப்போது தான் என் கணவருக்கு விவாகரத்து கிடைத்தது பற்றி தெரியவந்தது. தீர்ப்பு நகலை பார்த்த பிறகு தான் எனது விவரங்களை தவறாக கொடுத்து மனுவிற்கு நான் பதில் அளிக்காத அடிப்படையில் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது தெரியவந்தது”என்று மனுவில் தெரிவித்திருந்தார்.இந்த மனு நீதிபதி சத்யநாராயணா மற்றும் நீதிபதி பாட்டில் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.மனுவை விசாரித்த நீதிபதிகள் விவாகரத்து வழக்கை புதிய வழக்காக நடத்த உத்தரவிட்டனர்.…

Read More

அயோத்தி வழக்கில் முஸ்லிமிற்கு சார்பாக வாதாடும் வழக்கறிஞரை மிரட்டியதால் சென்னை பேராசிரியருக்கு உச்சநீதிமன்றம் அவதூறு நோட்டீஸ்

டெல்லி: அயோத்தி வழக்கில் முஸ்லிமிற்கு சார்பாக வாதாடும் வழக்கறிஞர் தவான் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அந்த மனுவில் முஸ்லிமிற்கு சார்பாக வாதாடுவதால் நான் மிரட்டப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.எனக்கு சென்னையை சேர்ந்த 88 வயது பேராசிரியர் சண்முகம் என்பவர் மிரட்டல் கடிதம் ஒன்றை ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி அனுப்பி இருந்தார். மேலும் சஞ்சய் கலாய் பஜ்ரங்கி என்பவர் வாட்ஸ் அப் மூலம் மிரட்டல் செய்தி அனுப்பி இருந்தார் என்று தவான் தெரிவித்தார்.எனவே முஸ்லிமிற்கு சார்பாக வாதாடும் தவான் வழக்கறிஞரை மிரட்டியதால் பேராசிரியருக்கு உச்சநீதிமன்றம் அவதூறு நோட்டீஸ் அனுப்பியது.

Read More