சென்னை: கடந்த ஜூலை 23 ஆம் தேதி செவிலியர் பணிக்கு தேர்வு நடைபெற்றது.ஆனால் தற்காலிக தேர்வு என்ற பெயரில் தகுதி மதிப்பெண்ணை விட குறைந்த மதிப்பெண் பெற்ற 56 பேரை தற்காலிகமாக தேர்வு செய்து, சான்றிதழ் சரிபார்ப்புக்கு அறிவிப்பாணை வெளியிட்டதை தடை விதிக்க கோரி சென்னையை சேர்ந்த செவிலியர் பட்டதாரி திவ்யபாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.அந்த மனு நீதிபதி தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பாணைக்கு தடை விதித்து ,மேலும் தகுதி மதிப்பெண்களுக்கு குறைவான மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்க தடை விதித்து உத்தரவிட்டார்.அக்டோபர் 14 ஆம் தேதிக்குள் மருத்துவ பணிகள் வாரியம் பதிலளிக்குமாறு உத்தரவிட்டார்.
Related posts
துாத்துக்குடி: வக்கீலை அவதூறாக பேசிய பெண் எஸ்.ஐ., பெண் காவலர் மீது வழக்குப் பதிவு
துாத்துக்குடி: துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் வழக்கறிஞர் முத்துசாமி என்பவரை அவதூறாக பேசியதாக, பெண் உதவி ஆய்வாளர் ஆரோக்கிய ஜென்சி மற்றும் பெண்...தீவிர சைபர் கிரைம் & நிதி மோசடிக்கான மையப்படுத்தப்பட்ட விசாரணை
சென்ட்ரல் க்ரைம் பிராஞ்ச் (சிசிபி) இப்போது சென்சிடிவ் வழக்குகளில் முன்னணியில் இருப்பதால், சைபர் கிரைம் மற்றும் பொருளாதாரக் குற்றங்களைச் சமாளிப்பதற்கான அணுகுமுறையை...யூடியூப் செய்பவர்கள் மற்றவர்களின் நற்பெயருக்கு தீங்கு விளைவிக்கக் கூடாது: சென்னை உயர் நீதிமன்றம்
21 March 2024: சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் ஒரு முக்கிய தீர்ப்பை வழங்கியது. யூடியூபர்கள் மற்றவர்களின் நல்ல பெயரைக் கெடுக்கும் விஷயங்களைச்...