விதிமீறி கட்டப்பட்ட பில்ரோத் மருத்துவமனை கட்டிடத்தை இடிக்கத் தடையில்லை: உயர் நீதிமன்றம்

சென்னை:அமைந்தகரையில் உள்ள பில்ரோத் தனியார் மருத்துவமனை விதிமீறி 5 மாடி கட்டிடங்கள் கட்டப்பட்டதாக வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் கட்டப்பட்ட 5 மாடிகளுக்கும் சீல் வைக்குமாறு சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டது. 2006 ஆம் ஆண்டுக்கு முன்பே கட்டிடம் கட்டப்பட்டதால், அந்த கட்டிடங்களை வரைமுறைப்படுத்தக்கோரி தனியார் மருத்துவமனை தரப்பில் மனுதாக்கல் செய்துள்ளதாக கூறியுள்ளது.அந்த மனு நிலுவையில் இருப்பதால், நடவடிக்கை எடுக்க தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இந்த வழக்கு நீதிபதிகள் ஆதிகேசவலு அமர்வு முன்பு விசராணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் அப்போது வரைமுறைப்படுத்தக்கோரி விண்ணப்பித்திருந்தாலும், விதிமீறல் கட்டடத்தின் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு தடை இல்லை என்று தெரிவித்தனர்.

Related posts