சென்னை:வருமான வரித்துறையினர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை தொழிலதிபர் மார்ட்டின் இடங்களில் சோதனை நடத்தினர். இந்நிலையில் மார்ட்டின் குழும காசாளர் பழனிச்சாமி மர்மமான முறையில் காரமடை அருகே உள்ள குட்டையில் கடந்த 3-ம் தேதி சடலமாக மீட்கப்பட்டார். காசாளர் பழனிச்சாமி தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.கடந்த 5 ம் தேதி கோவையில் உள்ள அரசு மருத்துவமனையில் உடல் ஆய்வுக் கூறு நடத்தப்பட்டது. சந்தேகத்தின் அடிப்படையில் பழனிச்சாமியின் மகன் ரோஹின் குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் கோவை எட்டாவது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ராமதாஸ் வழக்கில் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.நீதிபதி ராமதாஸ் நடத்திய விசாரணையில் உடல் கூறு ஆய்வு அறிக்கை முழுமையாக இல்லாததால், மீண்டும் உடல் கூறு ஆய்வு நடத்த உத்தரவிட்டார்.
Related posts
துாத்துக்குடி: வக்கீலை அவதூறாக பேசிய பெண் எஸ்.ஐ., பெண் காவலர் மீது வழக்குப் பதிவு
துாத்துக்குடி: துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் வழக்கறிஞர் முத்துசாமி என்பவரை அவதூறாக பேசியதாக, பெண் உதவி ஆய்வாளர் ஆரோக்கிய ஜென்சி மற்றும் பெண்...தீவிர சைபர் கிரைம் & நிதி மோசடிக்கான மையப்படுத்தப்பட்ட விசாரணை
சென்ட்ரல் க்ரைம் பிராஞ்ச் (சிசிபி) இப்போது சென்சிடிவ் வழக்குகளில் முன்னணியில் இருப்பதால், சைபர் கிரைம் மற்றும் பொருளாதாரக் குற்றங்களைச் சமாளிப்பதற்கான அணுகுமுறையை...புதிய கிரிமினல் மசோதாக்கள் சட்ட வல்லுனர்களிடமிருந்து மாறுபட்ட எதிர்வினைகளைப் பெறுகின்றன
“காலனித்துவ ஆதிக்கத்தை” முடிவுக்குக் கொண்டுவரும் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகஸ்ட் 11 அன்று மூன்று...