மாவோயிஸ்ட்கள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் பீகாரில் 3 பேர் பலி

Bihar naxalites Gun shot killed 3 villagers in Gaya district பீகார் மாநிலத்தில் உள்ள கயா மாவட்டத்தில் இருக்கும் அம் கோலா எனும் கிராமத்தினுள் நேற்று இரவு திடீரென்று மாவோயிஸ்டு தீவிரவாதிகள் புகுந்தார்கள்.அப்பொழுது ஏராளமான மக்கள், அங்கே நடந்து கொண்டிருந்த ஒரு கலை நிகழ்ச்சியை கண்டு கிழித்து கொண்டிருந்தார்கள். அங்கே வந்து திடீரென கிராம மக்களை மாவோயிஸ்டுகள் முற்றுகையிட்டனர். பின்னர் அந்த கூட்டத்தில் இருந்த 7 பேரை மட்டும் கடத்திச்சென்றார்கள். அவர்களை அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் கொண்டு சென்றார்கள். கைகளை பின்புறமாக கட்டி காட்டுபகுதியில் அவர்களை வரிசையாக நிறுத்தி வைத்தார்கள். பின்பு தங்களிடம் உள்ள துப்பாக்கிகளால் கடத்தி வந்தவர்களை நோக்கி கண்மூடித்தனமாக சரமாரியாக சுட்டனர். மாவோயிஸ்டுகளுடைய இந்த கொலை வெறி தாக்குதலுக்கு 3 கிராமத்தினர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். இறந்தவர்களில் ஒருவர் சஞ்சய் யாதவ் ஆவார்.…

Read More