பெண் எஸ்.ஐயின் கழுத்தில் தாலி கட்ட முயன்ற போலீஸ்காரர் !

பெண் எஸ்.ஐயின் கழுத்தில் தாலி கட்ட முயன்ற போலீஸ்காரர் ! சென்னை: கல்யாணம் ஆன பெண் எஸ்ஐ-யின் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டி தாலி கட்ட முயன்ற போலீஸ் இப்போது புழலில் கம்பி எண்ணி கொண்டுள்ளார். சென்னை நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் எஸ்.ஐ.யாக வேலை பார்த்து வருபவர் மணிமேகலை அவருக்கு வயது 24. நுங்கம்பாக்கம் காவல் குடியிருப்பிலேயே வசித்து வருகிறார். இதற்கு முன்பு காட்பாடியில் பயிற்சி எஸ்.ஐ,.யாக பணியாற்றி வந்தபோது அதே சமயத்தில் , ஊர் காவல் படை காவலராக மணிமேகலையுடன் வேலை பார்த்தவர் பாலசந்திரன். இவர் மணிமேகலையை ஒருதலை காதல் செய்துத்துள்ளார் . சில நாளில் மணிமேகலைக்கு வேறு ஒருவருடன் கல்யாணம் ஆகிவிட்டது. ஆனால் அதையும் மீறி பாலச்சந்திரன் மணிமேகலையை அடிக்கடி தன்னை காதலிக்குமாறு தொந்தரவு செய்து வந்துள்ளார். மணிமேகலை பல முறை கண்டித்து பாலச்சந்திரனுக்கு மணிமேகலையை மறக்க முடியவில்லை. இதனால் நேரில் எச்சரிக்கை கொடுக்கலாம் என்று மணிமேகலை பாலச்சந்திரனை எழும்பூருக்கு வரவைத்தார் . மணிமேகலை பாலச்சந்திரனிடம், தனக்கு காதலில் விருப்பம் இல்லை என்றும், ஏற்கனவே கல்யாணம் நடந்ததை பற்றியும் சொல்லி எச்சரித்தார் . பிறகு திடீரென பாலசந்திரன் மணிமேகலையின் கழுத்தில் கத்தியை வைத்துகொண்டு தாலி கட்ட முயற்சி செய்தார் .பதறிபோன மணிமேகலை சத்தம் போட்டதும், போலீசார் விரைந்து சென்று பாலசந்திரனை மடக்கி பிடித்தனர். இதுகுறித்து மணிமேகலை எழும்பூர் காவல் நிலையத்தில் புகாரும் அளித்துள்ளார் . பிறகு காவல்துறை வழக்கு பதிவு செய்து கைது புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.

சென்னை:சென்னை நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் எஸ்.ஐ.யாக வேலை பார்த்து வருபவர் மணிமேகலை அவருக்கு வயது 24. நுங்கம்பாக்கம் காவல் குடியிருப்பிலேயே வசித்து வருகிறார். இதற்கு முன்பு காட்பாடியில் பயிற்சி எஸ்.ஐ,.யாக பணியாற்றி வந்தபோது அதே சமயத்தில் , ஊர் காவல் படை காவலராக மணிமேகலையுடன் வேலை பார்த்தவர் பாலசந்திரன். இவர் மணிமேகலையை ஒருதலை காதல் செய்துத்துள்ளார் . சில நாளில் மணிமேகலைக்கு வேறு ஒருவருடன் கல்யாணம் ஆகிவிட்டது. ஆனால் அதையும் மீறி பாலச்சந்திரன் மணிமேகலையை அடிக்கடி தன்னை காதலிக்குமாறு தொந்தரவு செய்து வந்துள்ளார். மணிமேகலை பல முறை கண்டித்து பாலச்சந்திரனுக்கு மணிமேகலையை மறக்க முடியவில்லை. இதனால் நேரில் எச்சரிக்கை கொடுக்கலாம் என்று மணிமேகலை பாலச்சந்திரனை எழும்பூருக்கு வரவைத்தார். மணிமேகலை பாலச்சந்திரனிடம், தனக்கு காதலில் விருப்பம் இல்லை என்றும், ஏற்கனவே கல்யாணம் நடந்ததை பற்றியும் சொல்லி எச்சரித்தார் . பிறகு…

Read More

உ.பியில் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் இடையே முடிவான லோக்சபா தொகுதி

உ.பியில் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் இடையே முடிவான லோக்சபா தொகுதி டெல்லி: உத்தர பிரதேசம் மாநிலத்தில் லோக்சபா தேர்தலின் போது பாஜக ,காங்கிரசுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் அகிலேஷ் யாதவும், மாயாவதியும் கூட்டணிக்கு முடிவு செய்துள்ளார்கள் . இருவரும் தொகுதிகளை பங்கிட்டு கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது . அகிலேஷ் யாதவும், மாயாவதியும் சந்தித்து பேசியிருப்பது தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் அமைச்சரவையில் அகிலேஷ் மற்றும் மாயாவதி கட்சி உறுப்பினர்களுக்கு அமைச்சர் பொறுப்பு எதையும் காங்கிரஸ் அளிக்கவில்லை என்பதால் இந்த சந்திப்பு நடைபெற்றதாக தெரிகிறது. உத்தரப்பிரதேசத்தில் மொத்த லோக்சபா தொகுதிகளில் இரு கட்சிகளும் தலா 37 தொகுதிகளை பிரித்து கொண்டதாக கூறப்படுகிறது . சோனியா மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் போட்டியிடும் அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளில் வேட்பாளர்களை இந்த கூட்டணி நிறுத்த போவதில்லை என தெரியவந்துள்ளது. சமீபத்தில் நடைபெற்ற கோரக்பூர், புல்பூர் இடைத்தேர்தலில் அகிலேஷ் யாதவ் , மயவாதிடம் 2 தொகுதிகளை இழந்தது பாஜக .கடந்த லோக்சபா தேர்தலின்போது பாஜக கூட்டணி உத்தர பிரதேசத்தில் அதிக இடங்களை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

டெல்லி: உத்தர பிரதேசம் மாநிலத்தில் லோக்சபா தேர்தலின் போது பாஜக ,காங்கிரசுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் அகிலேஷ் யாதவும், மாயாவதியும் கூட்டணிக்கு முடிவு செய்துள்ளார்கள் . இருவரும் தொகுதிகளை பங்கிட்டு கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது . அகிலேஷ் யாதவும், மாயாவதியும் சந்தித்து பேசியிருப்பது தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் அமைச்சரவையில் அகிலேஷ் மற்றும் மாயாவதி கட்சி உறுப்பினர்களுக்கு அமைச்சர் பொறுப்பு எதையும் காங்கிரஸ் அளிக்கவில்லை என்பதால் இந்த சந்திப்பு நடைபெற்றதாக தெரிகிறது. உத்தரப்பிரதேசத்தில் மொத்த லோக்சபா தொகுதிகளில் இரு கட்சிகளும் தலா 37 தொகுதிகளை பிரித்து கொண்டதாக கூறப்படுகிறது . சோனியா மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் போட்டியிடும் அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளில் வேட்பாளர்களை இந்த கூட்டணி நிறுத்த போவதில்லை என தெரியவந்துள்ளது. சமீபத்தில் நடைபெற்ற கோரக்பூர், புல்பூர்…

Read More