கொடைக்கானல்: உயர்நீதிமன்ற உத்தரவின்ப்படி கொடைக்கானலில் விதிமீறி கட்டிய கட்டடங்களுக்கு ‘சீல்’ வைத்து முடக்கும் நகராட்சி நிர்வாகத்தின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் முற்றுகையிட்டார்கள். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் 1993 ‘மாஸ்டர் பிளான்’ கட்டுமான வரைமுறைமீறி கட்டப்பட்ட கட்டடங்களை மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு படி கடந்த மாதம் நகராட்சி நிர்வாகத்தினர் 43 கட்டடங்களுக்கு ‘சீல்’ செய்து, மின் இணைப்பை துண்டித்தனர். மேலும் விதிமீறலுக்குட்பட்ட கட்டடங்களின் அறிக்கை நகராட்சியிடம் கோரப்பட்டது. இதில் விதிமீறி கட்டப்பட்ட கட்டடங்கள் 1,415, அவற்றை சீல் வைத்து மார்ச் 11 ம் தேதி அறிக்கையளிக்கவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.நேற்று காலை நகராட்சி கமிஷனர் முருகேசன் தலைமையில் நகரமைப்பு அலுவலர்கள் அடங்கிய ஐந்து குழுவினர், மின்வாரிய அதிகாரிகள், போலீஸ் பாதுகாப்புடன் விதிமீறல் கட்டடங்களுக்கு சீல் வைக்க ஆயத்தமாயினர்.தகவலறிந்த வணிகர் சங்கம் மற்றும் பொதுநலச்சங்கம், பாதிக்கப்பட்டோர்…
Read MoreYear: 2019
தோட்டாக்களுடன் விமானத்தில் ஏற முயன்ற எம்.எல்.ஏ. கைது
டெல்லி:டெல்லி விமான நிலையத்தில் தோட்டாக்களை எடுத்துச்செல்ல அனுமதிக்க ஆவணங்கள் எதாவது இருக்கிறதா என விசாரித்தனர் . எதையும் அளிக்காததால் அவரை போலீசார் கைது செய்ததாக கூறப்படுகிறது.டெல்லி விமான நிலையத்தில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் எம்.எல்.ஏ. மொத்தம் பத்து தோட்டாக்களுடன் விமானத்தில் பயணிக்க முயன்றார். பீகார் மாநிலத்தில் உள்ள மதேபுரா தொகுதியின் எம்.எல்.ஏ. சந்திர சேகர் ஆவார் . அவர் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியைச் சேர்த்தவர். இவர் பிப்ரவரி 20ஆம் தேதி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்துள்ளார். அவர் பையில் 10 தோட்டாக்கள் இருப்பதை விமான நிலைய சோதனையில் கண்டு பிடித்தனர் . அந்த தோட்டாக்கள் அனைத்தும் 3.15 போர் ரகம் என்று தெரியவந்தது . இதனால் அவர் விமானத்தில் பயணிப்பதை அதிகாரிகள் தடுத்தனர் . தோட்டாக்களை எடுத்துச்செல்ல அனுமதி ஆவணங்கள் இருக்கிறதா…
Read Moreஅரக்கோணம் அருகே சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த நபர் கைது!
வேலூர் :அரக்கோணம் அடுத்து உள்ள களத்தூர் பகுதியில் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பாஸ்கர் என்பவரை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர் .வேலூர் மாவட்டம் அரக்கோணம் அடுத்த உள்ள களத்தூர் பகுதியை சேர்ந்த பாஸ்கரன் (வயது 35) அதே பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது. இந்த காரணமாக சிறுமிக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது . இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர் சிறுமியிடம் கேட்டு உறுதியும் செய்தனர்.இது குறித்து அரக்கோணம் அனைத்து மகளீர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் களத்தூர் பகுதியை சேர்ந்த பாஸ்கரன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.இந்த தகவலை பற்றி செய்தியாளர்கள் அனைத்து மகளீர் காவல் நிலையத்தில் விசாரித்தபோது அதுபோன்ற சம்பவம் நடைபெறவில்லை என்று கூறி மறைக்க முயற்சி…
Read Moreபாகிஸ்தான் தேசிய கொடியை எரித்த சிஆர்பிஎப் வீரர் சுப்பிரமணியனின் ஊர் மக்கள்
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சிஆர்பிஎப் வீரர் சுப்பிரமணியனின் ஊரில் பாகிஸ்தானுக்கு எதிராக போராட்டம் நடத்தி பாகிஸ்தான் தேசிய கொடியை எரித்தனர்.புல்வாமா தீவிரவாத தாக்குதலில் பலர் வீரமரணம் அடைத்தனர் ,அதில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சவாலாப்பேரி கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன் அவரும் வீரமரணம் அடைந்தார். சுப்பிரமணியன் கொல்லப்பட்ட காரணத்தால் அவரது கிராமத்தினர் கோபத்தில் உள்ளனர். இதனால் ஊரே சோகத்தில் ஆழ்ந்துள்ளது. சுப்பிரமணியனின் நண்பர்கள் மற்றும் கிராம மக்கள் இணைந்து பாகிஸ்தான் நாட்டின் தேசிய கொடியை எரித்து தங்களது கோபத்தை வெளிப்படுத்தினர்.மேலும், தீவிரவாத தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த அடில் அகமது தார் உருவ பொம்மை எரித்து கோஷங்களை எழுப்பினர்.
Read Moreகாஷ்மீர் தாக்குதலில் தமிழகத்தை சேர்ந்த 2 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்
காஷ்மீர்:காஷ்மீரில் பாதுகாப்புப்படை வீரர்கள் மீது ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பில் உள்ள நபர் நடத்திய தாக்குதலில், தமிழக வீரர்கள் 2 பேர் வீர மரணம் அடைத்தனர்.அதில் ஒருவர் பெயர் சுப்ரமணியன் மற்றவரின் உடல் இதுவரை கண்டறியப்படவில்லை என்று கூறப்படுகிறது. பயங்கர தாக்குதலில் மொத்தம் 44 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். அதில் கேரளா மற்றும் கர்நாடகாவை சேர்ந்த 2 பேரும் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது . நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது . இந்த தாக்குதலில் தமிழக வீரர் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சுப்ரமணியன் வீரமரணம் அடைந்தது தற்போது தெரிய வந்துள்ளது. இந்த செய்தி கேட்டு சுப்ரமணியனின் உறவினர்கள் , நண்பர்கள் மற்றும் பலர் கண்கலங்கியுள்ளனர்.சுப்ரமணி சவலாப்பேரி கிராமத்தைச் சேர்ந்த கணபதி என்பவரின் மகன் ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியிடப்படவில்லை. சிஆர்பிஎப் மூலம்…
Read Moreகாஷ்மீரில் நடந்த பெரிய தீவிரவாத தாக்குதலில் 42 வீரர்கள் பலி
ஸ்ரீநகர்: புல்வாமா மாவட்டத்தின் அவந்திபோரா டவுன் பகுதியில் தற்கொலை தீவிரவாதி தாக்குதலில் ஈடுபட்ட ஒருவன் 350 கிலோ வெடி மருந்து காரை ரிசர்வ் போலீஸ் படையினர் சென்ற பேருந்து மீது மோதினான். இதில் ரிசர்வ் போலீஸ் படையினர் 42 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர் மற்றும் பலர் படுகாயம் அடைந்தனர். ஜம்முவிலிருந்து ஸ்ரீநகர் நோக்கி சென்று கொண்டிருந்த ரிசர்வ் போலீஸ் படையின் 70 பஸ்கள் ஒன்றன் பின் ஒன்றாக சென்று கொண்டிருந்தபோது, இந்த தாக்குதல் நடந்ததாக கூறப்படுகிறது.பஸ் மீது வாகனத்தால் மோதப்பட்டதும், அருகே மிகப்பெரிய சத்தத்தோடு மர்ம பொருள் வெடித்தது. இதையடுத்து துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது . ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத குழு இந்த தாக்குதலை நடத்தியத்திற்கு பொறுப்பேற்றுள்ளது. அடில் அகமது என்ற தீவிரவாதியை கைது செய்துள்ளனர் .…
Read Moreஉடல்நிலை சரியில்லாத தாயை கவனிக்க விடுமுறை கேட்டும் கிடைக்காததால் காவலர் தற்கொலை
நாகப்பட்டனம்: தாய் பாசத்தால் தற்கொலை செய்து கொண்ட காவலர் .நாகை மாவட்டத்தில் உள்ள தேத்தாகுடி வடக்கு கிராமத்தை சேர்ந்தவர் மாமணி (45). மாமணி மயிலாடுதுறையில் மதுவிலக்கு பிரிவில் கோர்ட் வழக்குகளை பார்க்கும் பணியில் இருந்துள்ளார். அவர் குடும்பத்தில் மனைவி வளர்மதி , மாமதி என்ற 12 வயது மகளும், சுவைமணி என்ற 9 வயது மகனும் உள்ளனர். மாமணியுடன் அவரது தந்தை சுப்பிரமணியன் மற்றும் தாய் சரோஜினி வசித்து வந்தனர். மாமணியின் தாய் சரோஜினிக்கு உடல்நிலை சரியில்லை . கடந்த வாரம் அவரது தாயின் உடல்நிலை மிகவும் மோசமானதை அடுத்து இன்ஸ்பெக்டரிடம் மாமணி தொலைபேசி மூலம் விடுமுறை கேட்டதாக கூறப்படுகிறது. இன்ஸ்பெக்டர் விடுமுறை மறுத்ததாக கூறப்படுகிறது . மனமுடைந்த மாமணி 6 நாள் விடுமுறை கோரிய கடிதத்தை எழுதி காவல் நிலையத்தில் வைத்து விட்டு தனது ஊருக்கு…
Read Moreநகைச்சுவை நடிகர் கருணாகரன் மீது போலீசில் புகார் கொடுத்த இயக்குனர்
சென்னை: கடந்த பிப்ரவரி 7 ம் தேதி சீயோன் இயக்கிய ‘பொதுநலன் கருதி’ என்ற திரைப்படம் வெளியானது. ‘பொதுநலன் கருதி’ படத்தின் விளம்பரப்படுத்துதல் நிகழ்ச்சிக்கு நடிகர் கருணாகரன் வரவில்லை என்று கூறப்படுகிறது . இது தொடர்பாக அவரது வருத்தத்தை இயக்குனர் சீயோன் நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்தார் . இதற்கு கருணாகரன் இணை தயாரிப்பாளர் விஜய் ஆனந்திற்கு தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்தாகக் கூறப்படுகிறது. இதனால் இயக்குனர் சீயோன் மற்றும் படத்தின் இணை தயாரிப்பாளர் விஜய் ஆனந்த் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் நடிகர் கருணாகரன் மீது புகார் அளித்துள்ளனர். இந்த படத்தில் நடிக்க கருணாகரனுக்கு 25 லட்சம் ரூபாய் பணம் கொடுக்கப்பட்டது. ஆனால் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் விளம்பரப்படுத்துதல் நிகழ்ச்சிகளுக்கு அழைத்தும் நடிகர் கருணாகரன் வரவில்லை. செய்தியாளர்களை சந்தித்த இயக்குனர் சீயோன் , எங்களுக்கு…
Read Moreமெட்ராஸ் உயர்நீதிமன்றம் (மதுரை கிளை) உத்தரவிட்டும் வீடுகளை ஒதுக்கவில்லை: வருவாய்த் துறையினர் மீது புகார்
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அரசு புறம்போக்கில் குடியிருந்தவர்களுக்கு குடிசை மாற்று வாரிய வீடுகளை ஒதுக்கீடு செய்ய சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டு 3 ஆண்டுகள் முடிந்தும், வருவாய்த் துறையினர் வீடுகளை இன்னும் ஒதுக்கவில்லை என புகார்கள் கூறப்படுகின்றன. சிவகாசி -வெம்பக்கோட்டை சாலையில் மயானப் புறம்போக்கில் பலர் வீடுகள் கட்டி, அதற்கு ராணி அண்ணா காலனி என பெயர் சூட்டி குடியிருந்து வந்தனர். கடந்த 2005 ஆம் ஆண்டில், நகராட்சி நிர்வாகம் அந்த இடத்தைக் காலி செய்யுமாறு இவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது. அதன்பின்னர், கட்டடங்களை இடித்து அங்கிருந்து அவர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர். அதையடுத்து, அண்ணா காலனி குடியிருப்புவாசிகள் மற்றும் சில கட்சியினர் சேர்ந்து, இது குறித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடுத்தனர். கடந்த 2015 மார்ச் 9 ஆம் தேதி, அண்ணா காலனி குடியிருப்புவாசிகளுக்கு…
Read Moreசந்தியாவை நான் கொல்லவில்லை என்று கோர்ட்டில் கூறிய சைக்கோ பாலகிருஷ்ணன்!
சென்னை: சந்தியாவை நான் கொல்லவில்லை என ஆலந்தூர் நீதிமன்றத்தில் அவரது கணவர் திடீர் என்று கூறியுள்ளார்.சென்னை ஜாபர்கான்பேட்டையை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் இவருடைய மனைவி பெயர் சந்தியா. பாலகிருஷ்ணன் சினிமா துறையில் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர்.சந்தியாவுக்கு சினிமாவில் நடிக்க ஆசை இருந்தது.ஆனால் இதை விரும்பாத பாலகிருஷ்ணன் கோபமடைந்துள்ளார். பின்னர் சந்தியாவிடம் நடிக்கும் ஆசையை விட்டு விடுமாறு கூறியும் அதற்கு மறுத்துள்ளார் . கடந்த 19-ஆம் தேதி சந்தியாவுக்கு வாய்ப்பு வாங்கித் தருவதாக கூறி தனது வீட்டுக்கு அழைத்துள்ளார் பாலகிருஷ்ணன். நம்பி சென்ற சந்தியாவிடம் நடிக்கும் எண்ணத்தை விட்டுவிடுமாறு கூறியும் மறுத்துள்ளார் . இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.வீட்டை விட்டு வெளியே செல்ல முயன்ற சந்தியாவை தடுத்த பாலகிருஷ்ணன் சுத்தியலால் அடித்தது கொன்றதாக கூறப்படுகிறது .உயிரிழந்த சந்தியாவின் உடலை வெட்டி வீசியதாக காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.பாலகிருஷ்ணன் ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.…
Read More