தேவையற்ற கைதுகளைத் தவிர்க்க காவல்துறைத் தலைவருக்கு உத்தரவு : கேரள உயர்நீதிமன்றம்

தேவையற்ற கைதுகளைத் தவிர்க்க காவல்துறைத் தலைவருக்கு உத்தரவு : கேரள உயர்நீதிமன்றம் File name: KERALA-H

கொச்சி : உச்ச நீதிமன்றம் ‘அர்னேஷ் குமார் வழக்கின் வழிகாட்டுதல்’ படி ஏழு ஆண்டுகளுக்கு குறைவான சிறைத்தண்டனை விதிக்கக்கூடிய குற்றங்களுக்காக மக்களைக் கைது செய்வதற்கான தடையை கடுமையாக அமல்படுத்துமாறு கேரள உயர் நீதிமன்றம் மாநில காவல்துறைத் தலைவருக்கு உத்தரவிட்டுள்ளது.
வழக்கறிஞர் ஆனந்த் கல்யாணகிருஷ்ணன் மூலம் திருச்சூரை சேர்ந்த முகமது ரபி என்பவர் தாக்கல் செய்த மனுவை பரிசீலித்து நீதிபதிகள் ஏ.கே.ஜெயசங்கரன் நம்பியார் மற்றும் முகமது நியாஸ் சிபி ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் இந்த உத்தரவை பிறப்பித்தது.
வடக்கஞ்சேரியின் வட்ட ஆய்வாளர் சதீஷ் குமார் எம்.வி. 2014 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளை மீறி ஏழு ஆண்டுகளுக்கு குறைவான சிறைத்தண்டனை விதிக்கக்கூடிய குற்றங்கள் தொடர்பான வழக்கில் கைது செய்ததற்காக நீதிமன்றத்தை அவமதித்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. உச்ச நீதிமன்றத்தின் (அர்னேஷ் குமார் எதிராக மாநில அரசு பீகார் மற்றும் மற்றொன்று) வழிகாட்டுதல்களை மீறியதற்காக வட்ட ஆய்வாளர் சதீஷ் குமார் எம்.வி. சிஐ நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார்.
மைல்கல் தீர்ப்பின் மூலம், ஏழு ஆண்டுகளுக்கு குறைவான சிறைத்தண்டனை விதிக்கப்படும் வழக்குகளில் கைதுகள் விதிவிலக்காக இருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. CrPC இன் பிரிவு 41ன் கீழ் காவல்துறை அதிகாரி, குற்றம் சாட்டப்பட்டவர் மேலும் குற்றம் செய்யாமல் தடுக்க அல்லது முறையான விசாரணைக்காக அல்லது குற்றம் சாட்டப்பட்டவர்கள் சாட்சியங்களை அழிப்பதைத் தடுக்க அல்லது குற்றம் சாட்டப்பட்டவர்களைத் தடுப்பதற்காக மட்டுமே கைது செய்ய வேண்டும்.
அர்னேஷ் குமார் வழிகாட்டுதல்கள் கண்டிப்பாகப் பின்பற்றப் படுவதை உறுதி செய்யுமாறு மாநில காவல்துறைத் தலைவருக்கு உத்தரவிட்ட உயர்நீதிமன்றம், தனிநபரை கைது செய்வதற்கான அரசு அதிகாரம் உள்ள காவல்துறை அதிகாரிகள் மூலம் பல்வேறு இடங்களில் செயல்படுத்தப்பட்டது என்பதை நினைவூட்டுவது சரியானது என்று கருதுகிறோம். குற்றவியல் நீதி செயல்முறையின் நிலைகள் ஒரு குடிமகனைக் கைது செய்வதற்கு முன் CrPC இன் பிரிவு 41ன் கீழ் வழங்கப்பட்ட பாதுகாப்புகளை கணக்கில் எடுத்துக்கொள்வதற்கான கடமையைக் கருத்தில் கொள்ளாமல் தண்டனைக் கருவியாகவோ அல்லது துன்புறுத்தல் நடவடிக்கையாகவோ பயன்படுத்த முடியாது என்றும் நீதிமன்றத்தின் உத்தரவை மீறும் எந்தவொரு முயற்சியும் நீதிமன்றத்தின் கண்ணியத்தையும் நீதி நிர்வாகத்தையும் இழிவுபடுத்துவதாகும் என்பதை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நினைவூட்டுகிறோம் என்றார். நீதிமன்றங்கள் குறிப்பாக உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்படும் வழிகாட்டுதல்கள் விதிவிலக்கின்றி அப்படியே பின்பற்றப்பட வேண்டும் என்றும் நீதிபதி கூறினார்.

Related posts