டெல்லி: மும்பை உயர்நீதிமன்றத்தின் பெயரை ‘மகாராஷ்டிரா உயர்நீதிமன்றம்’ என்று மாற்ற கோரி ஓய்வு பெற்ற தொழிலாளர் நீதிமன்ற நீதிபதி வி.பி. பாட்டீல் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். “மகாராஷ்டிரா” என்ற சொல் ஒரு மகாராஷ்டிரியன் வாழ்க்கையில் சிறப்பு முக்கியத்துவத்தை குறிக்கிறது என்றும், அதன் பயன்பாடு உயர்நீதிமன்றத்தின் பெயரில் வெளிப்பாட்டைக் காண வேண்டும். இந்திய அரசியலமைப்பின் 19, 21, 29 வது பிரிவுகளின் கீழ் பாதுகாக்கப்பட்டுள்ள கலாச்சார மற்றும் பாரம்பரிய உரிமையின் வெளிப்பாடாகும் என்று பாட்டீல் என்று தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். மனு தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதிகள் எஸ்.ஏ. போபண்ணா மற்றும் ஹிருஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் மத்திய அரசு இது குறித்து பதிலளிக்க உத்தரவிட்டனர்.
Related posts
எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களுக்குள் சண்டை: ஐந்து பேருக்கு காயம்!
சென்னை: எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில் இன்று (2024-07-20) மதியம் வழக்கறிஞர்கள் இரு தரப்பினருக்கு இடையே நடந்த மோதலில் ஐந்துக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்களுக்கு...திருநெல்வேலி சிறுவனை காதல் வலை வீசி மயக்கிய 24 வயது பெண் – போக்சோ வழக்கு பதிவு!
July 13 2024; திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி (Nanguneri) பகுதியைச் சேர்ந்த 17 வயது பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் ஒருவரை, அதே...பாடகர் ஆர். சுசித்ரா மீது சென்னை உயர்நீதிமன்றம் தடை உத்தரவு
சென்னை உயர்நீதிமன்றம், பின்னணி பாடகர் ஆர். சுசித்ரா (RJ சுசி) அவரது முன்னாள் கணவர் நடிகர் கார்த்திக் குமார் பற்றி எந்த...