வட கொரியா அமெரிக்காவிற்கும் தென் கொரியாவிற்கும் எதிராக தினமும் மிரட்டல் விடுத்தது வருகிறது.

வட கொரியா அமெரிக்காவிற்கும் தென் கொரியாவிற்கும் எதிராக தினமும் மிரட்டல் விடுத்தது வருகிறது. பேச்சுவார்த்தைக்கு வருமாறு தென் கொரியா விடுத்த அழைப்பை வடகொரியா நிராகரித்து விட்டது. சர்வதேசக் கண்டனங்களை மீறி வடகொரியா கடந்த பிப்ரவரி மாதம் அணு ஆயுதச் சோதனையை நடத்தியது. இதைத் தொடர்ந்து அந்நாட்டின் மீது புதிய பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டன. எனினும், மீண்டும் ஏவுகணைச் சோதனைகளை நடத்த வடகொரியா தயாராகி வருவதாக உளவுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தென் கொரியாவையும் அதற்கு ஆதரவு தெரிவிக்கும் அமெரிக்காவையும் தாக்குவோம் என்று வடகொரியா அறிவித்துள்ளது. இதனால் கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதப் போர்ப் பதற்றம் ஏற்பட்டுள்ளது. பதற்றத்தைத் தணிப்பதற்காக பேச்சுவார்த்தைக்கு வருமாறு வடகொரியாவுக்கு தென் கொரியா கடந்த வாரம் அழைப்பு விடுத்திருந்தது. எனினும், இது தென் கொரியாவின் தந்திரம் என்று கூறி இந்த அழைப்பை வடகொரியா நிராகரித்து விட்டது.…

Read More

பப்புவா நியூகினியாவில் இன்று காலை நிலநடுக்கம்

பப்புவா நியூகினியாவில் இன்று காலை ரிக்டர் அளவுகோலில் 6.7 மேக்னிட்யூட் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவானது. இது பப்புவா நியூகினியாவின் போகெயின்விலெவின் மேற்குப் பகுதியில் 46 மைல் தொலைவில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல் வெளியிட்டது. ஞாயிறு இன்று காலை இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அது கூறியது. Popular Posts

Read More

இந்தோனேசியாவி ஓடுதளத்தைவிட்டு விலகி கடலில் இறங்கிய விமானம்!

இந்தோனேசியாவி ஓடுதளத்தைவிட்டு விலகி கடலில் இறங்கிய விமானம்!

இந்தோனேசியாவில் டென்பாசார் விமான நிலையத்தில் தரை இறங்க வேண்டிய விமானம் ஓடுதளத்திலிருந்து விலகி கடலுக்குள் பாய்ந்தது. சனிக்கிழமை நிகழ்ந்த இந்த சம்பவத்தில் உயிரிழப்பு எதுவும் இல்லை. Indonesian island of Bali இந்தோனேசியாவில் பாலி மாகாணத்தில் உள்ள சுற்றுலா நகரான டென்பாசாரில் இந்த சம்பவம் நடந்தது. லயன்ஏர் பயணிகள் விமான நிறுவனத்தின் போயிங் விமானத்தில், ஐந்து சிறுவர்கள் ஒரு பச்சிளம் குழந்தை உள்ளிட்ட 101 பயணிகள், 7 விமானப் பணிக் குழுவினர் இருந்தனர். இந்த விமானம் இறங்கும்போது ஓடுதளத்தில் இறங்காமல் விமான நிலையத்துக்கு அடுத்திருந்த கடலில் இறங்கிவிட்டது. இறங்கிய வேகத்தினால் நடுப்பகுதியில் உடைந்து, விமானம் இரு துண்டாகியது. அப்போது வானிலை சாதாரண நிலையில் இருந்தபோதிலும் விமானம் ஏன் கடலில் இறங்கியது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. சில பயணிகள் லேசான காயம் அடைந்துள்ளனர். குறைந்த கட்டணம்…

Read More