ஆன்லைன் வகுப்புக்களில் விதிமுறைகள் மீறப்படுகிறதா? அதை கண்காணிக்க அமைப்பு உருவாக்க வேண்டும்: அரசுக்கு உயர் நீதி மன்றம் ஆலோசனை

ஆன்லைன் வகுப்புக்களில் விதிமுறைகள் மீறப்படுகிறதா? அதை கண்காணிக்க அமைப்பு உருவாக்க வேண்டும்: அரசுக்கு உயர் நீதி மன்றம் ஆலோசனை சென்னை: ஆன்லைன் வகுப்புகளுக்கான விதிமுறைகளை பள்ளிகள் பின்பற்றுகின்றனவா என கண்காணிக்கப்பதர்க்கு ஓர் அமைப்பை உருவாக்க  வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை கோரிய வழக்குகள் கடந்த முறை  விசாரணைக்கு வந்த போது,  தனியார் பள்ளிகளில் ஆன் லைன்  வகுப்புகளுக்கான வழிகாட்டு விதிமுறைகளை எப்படி பின்பற்றப்படுகிறது? மலைப்பகுதி மாணவர்களுக்கு எப்படி கல்வி வழங்கப் போகிறார்கள்?  தனியார் பள்ளிகள் முன்கூட்டியே பதிவு செய்து வகுப்புகளை நடத்துகிறார்களா? என்பது தொடர்பாக கேள்விகளை உயர் நீதிமன்றம் நீதி அரசர்கள் எழுப்பியிருந்தனர். இந்த வழக்குகள், நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அதில் அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அரசு…

Read More