இலங்கை கடற்படை ஒன்பது தமிழ்நாடு மீனவர்களை இழுத்து சென்றது

இராமேஸ்வரம் 15Apr2013: இலங்கை கடற்படை ஒன்பது தமிழ்நாடு மீனவர்களை கைது ஞாயிறு அன்று செய்தது நடுகடலில் மீன் பிடித்து கொண்டிருந்த ஒன்பது புதுகோட்டை மாவட்ட மீனவர்களையும் அவர்களின் இரண்டு இலங்கை கடற்படை இழுத்து சென்றது என மீனவர் சங்க தலைவர் ராமகிருஷ்ணன் கூறினார்.

Read More

இலங்கையில் உதயன் பத்திரிகை அச்சகங்கள் மீது தாக்குதல்

கொழும்பு: இலங்கையில் உள்ளூர் ஆட்சி தேர்தலில் எதிர்கட்சிக்கு சாதகமான பத்திரிக்கை செய்திகளை குறைக்கவே இந்த தாக்குதல் நடத்த பட்டதாக முக்கிய தமிழ் கட்சி குற்றம் சாட்டியது. உதயன் பத்திரிகை அச்சகங்கள் மீது தாக்குதல் நடத்தியதின் மூலம் மக்கள் மத்தியில் ஒரு வித அச்ச உணர்வை எற்படுத்தி உள்ளதாக  தமிழ் தேசிய கூட்டமைப்பு (TNA) கூறியுள்ளது. சனிக்கிழமை வெளியிடப்பட்ட ஒரு தனி அறிக்கையை இந்த தாக்குதலில் பின்னணியில் இலங்கை ராணுவத்திற்கு எந்தவித தொடர்பும் இல்லை என கூறப்பட்டது. குறிப்பாக உதயன் உரிமையாளர் திரு ஈஸ்வரபாதம் சரவணபவன் எதிர்க்கட்சி  MP என்பது குறிப்பிடத்தக்கது. சமீப காலங்களில் தமது 5 பத்திரிக்கை தொழிலாளிகள் கொல்லபட்டுள்ளனர், அவர்களில் கொலையில் சந்தேகத்தில் உள்ள எவரையும் விசாரிக்க வில்லை என அவர் குற்றம் சாட்டினார். “இது போருக்கு பிந்தைய ஜனநாயகம் மற்றும் ஊடக சுதந்தரத்தின்  மீதான நேரடி தாக்குதல்.” என ஒரு உள்ளூர் ஊடக உரிமைகள் குழு,…

Read More

சீனாவில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பெய்ஜிங் தமிழ் சங்கமம், தமிழ் கலாச்சார சங்கம் உருவாக்கம்

1Apr 2013: சீனாவில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பெய்ஜிங் தமிழ் சங்கமம், தமிழ் கலாச்சார சங்கம் உருவாக்கப்பட்டது என திரு மைக்கேல் ஞாயிறன்று கூறினார். ஞாயிறன்று பெய்ஜிங் மற்றும் அண்டை பகுதிகளில் வேலை செய்யும் 70 தமிழ் நிபுணர்களால்  சீனாவில் முதல் தமிழ் சங்கம் உருவாக்கப்பட்டது. இவை சீனாவில் இந்தியர்களுக்கு குறிப்பாக தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு வளர்ந்து வருவதை குறிப்பதாகும். புதிய தமிழ் சங்கம் முக்கியமாக கலாச்சார நிகழ்வுகள் மற்றும் தமிழர்கள் ஒன்று கூடுதல் நிகழ்வுகளில் கவனம் செலுத்தப்படும் என்று, திரு மைக்கேல் கூறினார். பெருவாரியான தமிழ் அறிஞர்கள் தமிழ்நாடு, இலங்கை, மலேஷியா இருந்து ஞாயிறு பெய்ஜிங் கூட்டத்தில் பங்கேற்றனர்.

Read More

வட கொரியா அமெரிக்காவிற்கும் தென் கொரியாவிற்கும் எதிராக தினமும் மிரட்டல் விடுத்தது வருகிறது.

வட கொரியா அமெரிக்காவிற்கும் தென் கொரியாவிற்கும் எதிராக தினமும் மிரட்டல் விடுத்தது வருகிறது. பேச்சுவார்த்தைக்கு வருமாறு தென் கொரியா விடுத்த அழைப்பை வடகொரியா நிராகரித்து விட்டது. சர்வதேசக் கண்டனங்களை மீறி வடகொரியா கடந்த பிப்ரவரி மாதம் அணு ஆயுதச் சோதனையை நடத்தியது. இதைத் தொடர்ந்து அந்நாட்டின் மீது புதிய பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டன. எனினும், மீண்டும் ஏவுகணைச் சோதனைகளை நடத்த வடகொரியா தயாராகி வருவதாக உளவுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தென் கொரியாவையும் அதற்கு ஆதரவு தெரிவிக்கும் அமெரிக்காவையும் தாக்குவோம் என்று வடகொரியா அறிவித்துள்ளது. இதனால் கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதப் போர்ப் பதற்றம் ஏற்பட்டுள்ளது. பதற்றத்தைத் தணிப்பதற்காக பேச்சுவார்த்தைக்கு வருமாறு வடகொரியாவுக்கு தென் கொரியா கடந்த வாரம் அழைப்பு விடுத்திருந்தது. எனினும், இது தென் கொரியாவின் தந்திரம் என்று கூறி இந்த அழைப்பை வடகொரியா நிராகரித்து விட்டது.…

Read More

தமிழ்ப் புத்தாண்டு:கோவில்களில் இன்று லட்சார்ச்சனை வழிபாடு

சித்திரை தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, முக்கிய கோவில்களில் ஞாயிற்றுக்கிழமை லட்சார்ச்சனை வழிபாடும், ஆன்மீக சமய சொற்பொழிவும் நடைபெறவுள்ளது. கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவில், சாரங்கபாணி கோவில், ஒப்பிலியப்பன் கோவில் திருச்சேறை சாரநாத பெருமாள் மற்றும் சாரபரமேஸ்வரர் திருக்கோவில்களில் சித்திரைத் திங்கள் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை காலை முதல் ஏக தின லட்சார்ச்சனை நடைபெற உள்ளது.

Read More

தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு 2011ல் 28 வகைப்பாடுகளில் சிறந்த நூல்கள் தேர்வு

தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு 2011ல் 28 வகைப்பாடுகளில் சிறந்த நூல்கள் தேர்வு

தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு 28 சிறந்த தமிழ் நூல்கள் தேர்வு செய்யப்பட்டு நூலாசிரியர்களுக்கு தலா ரூ. 30 ஆயிரமும், பதிப்பகங்களுக்கு ரூ. 10 ஆயிரமும் பரிசு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. Tamil nadu Logo இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு 2011ஆம் ஆண்டு வெளிவந்த நூல்களில் 28 வகைப்பாடுகளில் சிறந்த நூல்கள் தேர்வு செய்யப்பட்டு அதனை எழுதிய 28 நூலாசிரியர்களுக்கு தலா ரூ. 30 ஆயிரமும், அந்த நூல்களைப் பதிப்பித்த பதிப்பகங்களுக்கு தலா ரூ. 10 ஆயிரமும் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதுதவிர, 1330 திருக்குறளை முற்றோதல் செய்யும் மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் 36 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ. 10 ஆயிரமும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கவும், மாநில அளவில் கவிதை, பேச்சு, கட்டுரைப்…

Read More

சித்திரைத் தலைநாளில் சுதந்திர தமிழ் ஈழம் மலர வைகோ வாழ்த்து

சித்திரை முதல் நாளை முதுவேனில் காலத்தின் தொடக்க நாளாக கொண்டாடி வரும் தமிழ் மக்கள் அனைவருக்கும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில் கூறியதாவது: சித்திரை முதல் நாளை முதுவேனில் காலத்தின் தொடக்க நாளாக நெடுங்காலமாக தமிழ் மக்கள் கொண்டாடி வருகின்றனர். ஐப்பசி, கார்த்திகையில் மேகங்கள் பொழியும் மழையை எதிர்கொண்டு, தமிழர்கள் கொண்டாடும் ஆண்டின் முதல் நாளான தைத் திங்களில் பொங்கல் திருவிழா கண்டு அறுவடை நடத்தி, ஆவினங்களுக்கும், நிலத்துக்கும் நன்றி செலுத்தி மாசி, பங்குனியில் வசந்தத்தையும் இளவேனிலையும் வரவேற்று மகிழ்ந்து, சித்திரைத் திங்களில் கடற்கரை மணல் வெளியில், ஆற்றுப் படுகைகளில் தமிழர்கள் விழா எடுத்து வந்துள்ளனர். இளைய வயதினருக்கு இச்சித்திரை மாதம் தான் வசந்த விழா காலம் என இலக்கியம் கூறுகிறது. “சித்திரை திங்கள் சேர்ந்தன என்றும், இதுவே…

Read More

பப்புவா நியூகினியாவில் இன்று காலை நிலநடுக்கம்

பப்புவா நியூகினியாவில் இன்று காலை ரிக்டர் அளவுகோலில் 6.7 மேக்னிட்யூட் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவானது. இது பப்புவா நியூகினியாவின் போகெயின்விலெவின் மேற்குப் பகுதியில் 46 மைல் தொலைவில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல் வெளியிட்டது. ஞாயிறு இன்று காலை இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அது கூறியது. Popular Posts

Read More

இந்தோனேசியாவி ஓடுதளத்தைவிட்டு விலகி கடலில் இறங்கிய விமானம்!

இந்தோனேசியாவி ஓடுதளத்தைவிட்டு விலகி கடலில் இறங்கிய விமானம்!

இந்தோனேசியாவில் டென்பாசார் விமான நிலையத்தில் தரை இறங்க வேண்டிய விமானம் ஓடுதளத்திலிருந்து விலகி கடலுக்குள் பாய்ந்தது. சனிக்கிழமை நிகழ்ந்த இந்த சம்பவத்தில் உயிரிழப்பு எதுவும் இல்லை. Indonesian island of Bali இந்தோனேசியாவில் பாலி மாகாணத்தில் உள்ள சுற்றுலா நகரான டென்பாசாரில் இந்த சம்பவம் நடந்தது. லயன்ஏர் பயணிகள் விமான நிறுவனத்தின் போயிங் விமானத்தில், ஐந்து சிறுவர்கள் ஒரு பச்சிளம் குழந்தை உள்ளிட்ட 101 பயணிகள், 7 விமானப் பணிக் குழுவினர் இருந்தனர். இந்த விமானம் இறங்கும்போது ஓடுதளத்தில் இறங்காமல் விமான நிலையத்துக்கு அடுத்திருந்த கடலில் இறங்கிவிட்டது. இறங்கிய வேகத்தினால் நடுப்பகுதியில் உடைந்து, விமானம் இரு துண்டாகியது. அப்போது வானிலை சாதாரண நிலையில் இருந்தபோதிலும் விமானம் ஏன் கடலில் இறங்கியது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. சில பயணிகள் லேசான காயம் அடைந்துள்ளனர். குறைந்த கட்டணம்…

Read More

Lankan Tamil newspaper office attacked by armed men in Jaffna-Srilanka

odisha high court lawyers strike

COLOMBO, APR 13: A Tamil language daily newspaper’s office was attacked by armed men early this morning in the northern Sri Lankan town of Jaffna. Police said the Jaffna office of the ‘Uthayan’ newspaper had come under attack around 5 am (local time) today when two unidentified armed men stormed the office and chased away the security staff. They then set fire to newspapers and newsprint reams. Gunshots had been fired at the main printing machine, police said. “We have started an investigation”, police spokesman Buddhika Siriwardena said. Uthayan’s distribution…

Read More