உலகம் முழுவதும் உயிர் கொல்லி எபோலா வைரஸ் தாக்கி 13,268 பேர் பாதிப்பு; 4,960 பேர் சாவு

ஜெனீவா: உயிர்கொல்லி நோயான எபோலா வைரஸ் தாக்கி உலகம் முழுதும் சுமார் 13,268 பேர் பாதிப்பு அடைந்துள்ளதாகவும் அதில் 4,960 பேர் இறந்துள்ளனர் எனவும் உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில், உயிர்கொல்லி எபோலா நோயினால் தக்கபட்டவர்களில் 70 சதவீதம் பேர் இறந்துவிடுவதாகத் தெரிவிக்கப்படுவதனால், நிஜத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை இன்னும் கூடுதலாக இருக்ககூடும் என அஞ்சபடுகிறது. ஆப்பிர்க்க கண்டத்தில் இருக்கும் லைபீரியா நாட்டில் எபோலா நோய் பாதித்த 6,619 நபர்களில் 2,766 பேர் உயிரிழந்துள்ளனர். சியரா லியோனிலுள்ள 4,862 எபோலா நோயாளிகளில், 1,130 பேர் உயிரிழந்தனர்.கீனியா நாட்டில், எபோலா தாக்கிய 1,760 பேரில் 1,054 பேர் அந்த நோய்க்கு இறந்துள்ளனர் எனவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. Ebola has killed 4,950 people of the 13,241 infected since the…

Read More