கங்கை நதியை மாசு படுத்தும் 48 தொழிற்சாலைகளை மத்திய அரசு மூட உத்தரவு.

Central Government announced to close 48 factories for discharging pollutants to Ganges River கங்கை நதியை மாசு படுத்தும் 48 தொழிற்சாலைகளை  மத்திய அரசு மூட உத்தரவு. மத்திய அரசு 48 தொழிற்சாலைகள் கங்கை நதியை நாசமாக்குவதால்மூட உத்தரவிட்டுள்ளதாக மாநிலங்களவையில் நேற்று அறிவித்திருக்கிறது. மத்திய நீர்வளமும் கங்கை தூய்மைபடுத்துதல் திட்டத்துக்கான இணை அமைச்சர் சந்தோஷ்குமார் கங்வார் இதைப் பற்றி மாநிலங்களவையில் எழுந்த கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். அதில், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் கண்டறிந்துள்ளதாவது, கங்கைக்கும் மற்றும் அதன் துணை நதிகளுக்கும் அருகிலுள்ள 764 தொழிற்சாலைகளிலிருந்து தினமும் 501 மில்லியன் லிட்டர் கழிவு நீரை வெளியேற்றுகிறது. மேலும் இதை 1978ஆம் ஆண்டின் மாசுக்கட்டுப்பாடு மற்றும் தடுப்பு சட்டம் மற்றும் 1986ஆம் ஆண்டின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 48…

Read More