சோனியா காந்தியின் மருமகனுடைய காரை முந்தி சென்ற நபருக்கு அபராதம்

Robert Vadra car புதுடில்லி : காங்கிரஸ் தலைவர், சோனியா காந்தியின் மருமகன், திரு ராபர்ட் வாத்ரா பயணம் செய்துகொண்டிருந்த காரை முந்திச் சென்ற, டில்லி இருக்கும் ஒரு தொழிலதிபருக்கு, காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளனர். சோனியாவின் மகள், பிரியங்காவின் கணவர், ராபர்ட் வாத்ரா. தொழிலதிபரான இவர், நேற்று முன்தினம் இரவில், டில்லியில், தன் காரில் சென்று கொண்டிருந்தார். சோனியா மருமகன் என்பதால், ‘இசட்’ பிரிவு பாதுகாப்பில் அவர் உள்ளார். இதனால், அவர் காரின் முன்னும், பின்னும், பாதுகாப்பு வீரர்கள், காரில் செல்வது வழக்கம். இந்த நிலையில், சவுரவ் ரஸ்தோகி என்ற ஒரு தொழிலதிபர், தனது காரில் வேகமாக சென்ற போது, ராபர்ட் வாத்ரா சென்ற காரை, முந்திச் சென்றார். இதை அறிந்த, வாத்ராவின் பாதுகாப்பு அதிகாரிகள், போக்குவரத்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சவுரவ் ரஸ்தோகியை சுற்றி வளைத்த,…

Read More