சென்னை: இந்திய நீதித்துறை வரலாற்றில் மிக முக்கியமான மைல்கல்லாக, உச்ச நீதிமன்றத்தின் நிரந்தர மண்டலக் கிளைகளை நாட்டின் நான்கு பகுதிகளில் அமைக்க மத்திய அரசு அதிகாரப்பூர்வ முடிவெடுத்து, அது தொடர்பான அறிவிப்பை மத்திய அரசு கெஜட்டில் வெளியிட்டுள்ளது. இதன்படி, தெற்கு மண்டலத்திற்கான உச்ச நீதிமன்ற கிளை சென்னையில் செயல்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. புதிய அமைப்பு எப்படி செயல்படும்? வெளியிடப்பட்ட கெஜட் அறிவிப்பின்படி, உச்ச நீதிமன்றத்தின் அதிகாரங்கள் மண்டல ரீதியாகப் பிரிக்கப்பட்டு, நாட்டின் நான்கு திசைகளிலும் நிரந்தரக் கிளைகள் ஏற்படுத்தப்படவுள்ளன. வடக்கு மண்டலத்திற்கு புதுடெல்லி, தெற்கு மண்டலத்திற்கு சென்னை, கிழக்கு மண்டலத்திற்கு கொல்கத்தா, மேற்கு மண்டலத்திற்கு மும்பை ஆகிய நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. புதுடெல்லியில் அரசியலமைப்பு அமர்வு (Constitution Bench) மட்டும் இயங்கும் நிலையில், அது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த அரசியலமைப்பு வழக்குகள் மற்றும் குடியரசுத் தலைவர் குறிப்புகளை…
Read MoreYou are here
- Home
- #நீதிமன்றசெய்தி
