பாலியல் பலாத்காரம் செய்து புதைக்கப்பட்ட சிறுமி உயிரோடு வருகை

13 Year old girl abducted Raped and buried alive near Lahore in pakistan. The Girl how ever manged to come out of the buried by digging herself way out

பாகிஸ்தான் நாட்டில் அடையாளம் காணப்படாத காம வெறியர்களால் கடத்தப்பட்டு பின்னர் பாலியல் வன்கொடுமை செய்து ஓர் 13 வயது நிரம்பிய சிறுமி உயிருடன் புதைக்கப்பட்டாள். இந்த கடத்தல், பாலியல் பலாத்க்காரம் மற்றும் உயிராடு புதைத்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

13 Year old girl abducted, Raped and buried alive near Lahore in pakistan

பாகிஸ்தானின் லாகூரில் இருந்து சுமார் 225 கி.மீ. தொலைவில் உள்ள டோபா செக் சிங் மாவட்டத்தை சார்ந்த 13 வயது நிரம்பிய சிறுமியை அடையாளம் காணப்படாத மர்ம இருவர் கடத்தினார்கள்.

பின்னர் அந்த சிறுமியை எவரும் இல்லாத பகுதிக்கு இழுத்து சென்ற அந்த காம வெறியர்கள் அங்கு அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து வன்கொடுமைக்கு உட்படுத்தினர்.

அந்த சிறுமி காம வெறியர்களிடம் இருந்து தப்பி செல்ல முயற்சி செய்து சோர்ந்து மயக்கமுற்றாள். மயக்கமுற்ற அந்த சிறுமியை கண்ட இரு கம வெறியர்கள் இருவரும் அவள் பலியாகி விட்டாள் என எண்ணி சாலை ஓரத்தில் ஓர் குழியை தோண்டி புதைத்துள்ளனர்.

அந்த காம வெறியர்கள் அந்த இடத்தை விட்டு புறப்பட்டு சென்ற பல மணி நேரம் கழித்து அந்த சிறுமிக்கு மயக்கம் தெளிந்து நினைவு திரும்பியுள்ளது. மிகுந்த சிரமத்திற்கு பின், புதைக்கப்பட்ட குழியில் இருந்து தானாக வெளியில் வந்த சிறுமி தனக்கு உதவி செய்ய அந்த பகுதி மக்களை அழைத்துள்ளார்.

உடனடியாக அங்குள்ள ஓர் மருத்துவமனையில் அந்த சிறுமி அனுமதிக்கப்பட்டாள். தற்பொழுது அந்த சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

இந்த குற்றச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அந்த சிறுமியை கடத்தி, பாலியல் பலாத்கார வன்கொடுமை செய்து, உயிருடன் புதைத்த அந்த காமவேறியர்களை தேடி வருகிறார்கள்.

13 Year old girl abducted Raped and buried alive near Lahore in pakistan. The Girl how ever manged to come out of the buried by digging herself way out

Related posts