லண்டனில் இறந்த குழந்தையை வயிற்றில் 2 நாட்கள் சுமந்த சென்னை பெண்

Indian woman in UK forced to carry dead fetus in womb for two days

Indian woman in UK forced to carry dead fetus in womb for two days

சென்னையை பூர்விகமாக கொண்ட கார்த்திகேயன் குமரேசன் எனும் பொறியியல் வல்லுநர் வேலை நிமித்தமாக 6 ஆண்டுகளுக்கு முன் தனது மனைவி நிரஞ்சனாவை அழைத்து கொண்டு இங்கிலாந்தில் குடியேறினார். அவர்களுக்கு 9 வயதில் ஒரு மகள் இருக்கிறாள். 33 வயதான திருமதி.நிரஞ்சனா 2வது முறையாக கரு தரித்தபோது, அவருக்கு செப்டம்பர் 18 ஆம் தேதி பிரசவ நாள் என குறிக்கப்பட்டது.

குறிக்கப்பட்ட அந்த தேதியைத் தாண்டி 3 நாட்கள் சென்ற பிறகும் அவருக்கு பிரசவ வலி வராமல் அதற்கு உண்டான அறிகுறி எதும் தோன்றாமல் இருந்தது. மேலும், வயிற்றில் உள்ள குழந்தையினது அசைவும் தென்படவில்லை. அதலால் சந்தேகம் கொண்ட அந்தத் தம்பதி உடனே வடக்கு லண்டனில் இருக்கும் பார்னெட் அண்ட் சேஸ் எனும் மருத்துவமனைக்குச் சென்றார்கள்.

அங்கே பணியாற்றி கொண்டிருந்த இடைநிலை மருத்துவப் பணியாளர் அவரைப் பரிசோதித்து விட்டு வீட்டிற்கு செல்லும்படி கூறிவிட்டார்கள். சுமார் 12 மணி நேரம் கழிந்த பின்னர் மீண்டும் தங்களது குழந்தையின் நிலைமை பற்றிய சந்தேகத்தைத் தெரிவித்தபோதும் மருத்துவமனையில் இருந்த மருத்துவர்கள் மற்றும் அந்த நிர்வாகம் அலட்சியமாக இருந்திருக்கிறது.

கர்ப்பிணியான நிரஞ்சனாவிற்கு முதல் நாள் ஏற்பட்ட காய்ச்சலால் தான் வயிற்றில் உள்ள குழந்தையின் இதயத்துடிப்பு கேட்கவில்லை எனவும், பின் மருத்துவமனையில் உள்ள இதயத்துடிப்பு அளக்கும் கருவி சரியாக இயங்கவில்லை எனவும் ஏதேதோ பற்பல காரணங்கள் சொல்லி தட்டி கழித்து அவரை மீண்டும் வீட்டிற்கு அனுப்பியுள்ளார்கள்.

2 நாட்களுக்கு மேல் வயிற்றில் இறந்த குழந்தையினை வயிற்றில் சுமந்து கொண்டு மிகுந்த வலி மற்றும் வேதனையுடன் எந்த விதமான மருத்துவ உதவியும் இல்லாமல் அவர் பிரசவித்துள்ளார். இறந்த குழந்தையின் தலை நசுங்கியுள்ளதற்கும் மருத்துவமனை சரியான காரணங்கள் ஏதும் சொல்லவில்லை.
இதை விட கொடுமையான விஷயமாக இறந்த அந்த குழந்தையின் பிரேதப் பரிசோதனையை நடத்தும் பொறுப்பாளரை உடனே ஏற்பாடு செய்ய இயலாமல் மருத்துவமனை நிர்வாகம் 4 நாட்கள் சென்ற பின் அதையும் செய்துள்ளது. இதற்கு பின் சென்ற மாதம் 24 ஆம் தேதி அந்த மருத்துவமனையின் அலட்சியப்போக்கு பற்றி ஒரு புகார் மனுவை இந்தத் தம்பதியினர் அந்த நாட்டு தேசிய சுகாதார மையத்தில் கொடுத்துள்ளனர்.

எனினும் மருத்துவமனை நிர்வாகம் இது பற்றி எந்த வித விளக்கமும் அளிக்காததால், அந்நாட்டு தேசிய சுகாதார மையத்தினுடைய மேல் விசாரணைகள் விரைவாக தொடங்க இருக்கிறது என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Indian woman in UK forced to carry dead fetus in womb for two days

An Indian woman in the UK was forced to carry a dead fetus in her womb for two days after doctors at the hospital ignored signs of its death and sent her back home. Niranjana Kumaresan, a 33-year-old woman hailing from Chennai, filed a complaint with UK’s National Health Service (NHS) alleging that doctors and staff at Barnet and Chase Farm hospital in north London ignored her plea for help even after she repeatedly told them she had stopped feeling the baby’s movement and doctors themselves confirmed the baby’s heart beats were not detected.

Related posts