ஜார்க்கண்ட் நீதிபதி கொலை: சிபிஐ விசாரணை கோரி உச்ச நீதிமன்ற பார் அசோசியேஷன் தலைவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்

Supreme court of India

டெல்லி: ஜார்க்கண்ட் கூடுதல் மாவட்ட நீதிபதி உத்தம் ஆனந்தின்
அதிர்ச்சியூட்டும் கொலை இன்று காலை உச்ச நீதிமன்ற பார் அசோசியேஷன்
தலைவர் மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங் முன்னிலையில் உச்சநீதிமன்றத்தின்
கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

நீதிபதி டி.ஒய் சந்திரசூட் தலைமையிலான அமர்வுக்கு முன்னர் இந்த விஷயத்தை
குறிப்பிட்டு, விகாஸ் சிங், ஒரு நீதிபதி காலை நடைப்பயணத்திற்கு வெளியே
வரும்போது ஒரு வாகனத்தால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டார், இது “நீதித்துறை
மீதான வெட்கக்கேடான தாக்குதல்” என்று கூறினார்,

பொது சாலையில் ஒரு நீதிபதி காலை நடைப்பயணத்தின் போது
வாகனம் மோதிய சிசிடிவி காட்சிகள் நேற்று வெளியிடப்பட்டன. நீதிபதி
கொல்லப்பட்டாரா என்பதை அறியும் வகையில் ஒருவர் காட்சிகளை
பெரிதுபடுத்தியிருப்பது அதிர்ச்சியாக இருக்கிறது என்று விகாஸ் சிங்
அமர்விற்குத் தெரிவித்தார்.

“இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு கோரப்பட்ட காரணம் உள்ளூர் காவல்துறை
இதுபோன்ற விஷயங்களுக்கு உடந்தையாக இருப்பார்கள். ஒரு நீதிபதி காலை
நடைப்பயணத்திற்கு சென்ற போது ஒரு வாகனம் மோதியுள்ளது என்பது மிகவும்
அதிர்ச்சியான விஷயம் என்றும் நீதித்துறையின் சுதந்திரத்திற்கு எதிரான
தாக்குதல்” என்று அமர்வுக்கு முன் விகாஸ் சிங் சமர்ப்பித்தார் . இந்த விவகாரத்தை உச்சநீதிமன்றம்
அறிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Related posts