அமராவதி நில முறைகேட்டில் சந்திரபாபு நாயுடுக்கு எதிரான சிஐடி விசாரணை நிறுத்தி வைப்பு : ஆந்திர மாநில உயர்நீதிமன்றம்

அமராவதி நில முறைகேட்டில் சந்திரபாபு நாயுடுக்கு எதிரான சிஐடி விசாரணை நிறுத்தி வைப்பு : ஆந்திர மாநில உயர்நீதிமன்றம் File name: Andhra_Pradesh_HC.jpg

அமராவதி: அமராவதி நில முறைகேட்டில் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் என்.சந்திரபாபு நாயுடு மற்றும் முன்னாள் அமைச்சர் பி நாராயணா ஆகியோருக்கு எதிரான சிஐடி விசாரணையை ஆந்திர மாநில உயர் நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. விசாரணையை உயர் நீதிமன்றம் நான்கு வாரங்களாக நிறுத்தி வைத்துள்ளது.

நாயுடுவுக்கு ஆதரவாக வாதிட்ட மூத்த உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் சித்தார்த் லுத்ராவும், நாராயணாவுக்காக வாதிட்ட முன்னாள் வழக்கறிஞர் ஜெனரல் தம்மலபதி சீனிவாஸும், சிஐடி வழக்குகள் அரசியல் நோக்கம் கொண்டவை என்று நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

அமராவதி நில முறைகேட்டில் தங்களுக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் துறை தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக் கோரி தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் என்.சந்திரபாபு நாயுடு மற்றும் முன்னாள் அமைச்சர் பி நாராயணா ஆகியோர் ஆந்திர மாநில உயர் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை மனுக்களை தாக்கல் செய்தனர்.

Related posts